Thursday, November 10, 2005
படித்ததில் பிடித்த ஒரு கதையும் கருத்தும்.
கோ.கணேஷின் பதிவிலிருந்து
முன்னொரு காலத்தில் ஐக்கிய குடியரசில் ஒரு பிரபு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார். தன் குதிரை வண்டியில் ஊர் சுற்றும் பொழுது ஒரு இடத்தில் ஒரு ஏழை விவசாயி புற்களைத் தின்று கொண்டிருந்தான். உடனே அந்த பிரபு அவனிடம் போய் அவன் புற்களைத் தின்பதற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் தன் ஏழ்மை நிலை காரணமாக புற்களைத் தின்பதாக சொல்கிறான். உடனே அவனை தன் வண்டியில் ஏற சொல்கிறார்.
வண்டியில் செல்லும் பொழுது அந்த விவசாயி தன் வீட்டில் தன் மகனும் மனைவியும் புற்களைத் திண்று கொண்டிருப்பதாக சொல்கிறான். அதற்கு அந்த பிரபு அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வோம் என்று சொல்கிறார். உடனே அந்த விவசாயி தன் அண்ணனும் அவன் மனைவி மக்களும் புற்களைத்தான் தின்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறான். அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வதாக பிரபு உறுதியளிக்கிறார்.
பூரிப்படைந்த விவசாயி "உங்கள் வீட்டில் இத்தனை பேருக்கு வேலை இருக்கும் பொழுது ஏன் முன்னமே பணியாட்களை அந்த வேலைகளுக்கு அமர்த்தவில்லை?" என்று கேட்கிறான். அதற்கு அந்த பிரபு "என் வீட்டு தோட்டத்தில் புற்கள் இடுப்பளவு உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன அவைகளை நீக்குவதற்காகவே உங்களை அழைத்துச் செல்ல சம்மதித்தேன்"
என்று சொல்கிறார்.
வேடிக்கைக்காக சொல்லப்பட்ட விஷயம் தான் என்றாலும் அதிலுள்ள கருத்து ஆழமானது. பிறரது கஷ்டத்தைத் தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்பவர்கள் இந்த உலகத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள்.
சந்திரவதனா!
ReplyDeleteஉங்களுடைய பதிவுகள் எனக்கு பிடித்திருந்ததால் உங்கள் ப்ளாக்கை என்னுடைய 'பிடித்தமான வலைப்பூக்கள்' பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாமா என கேட்டு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். பதிலே இல்லை.
என்ன, செய்துக்கொள்ளட்டுமா?
தாரளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் ஜோசஃப்.
ReplyDeleteஉங்கள் மின்னஞ்சல் எனக்குக் கிடைத்தது. அதில் உங்கள் முகவரி மட்டுமே
சரியாகத் தெரிகிறது. மற்றதெல்லாம் கேள்விக்குறிகளாகவே தெரிந்தன.. இது பற்றிக் கேட்டு
அதாவது என்ன எழுதினீர்கள் என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எழுத நினைத்தேன். ஆனால்
வழமையான மற்றைய மின்னஞ்சல்களுக்கான பதில்கள் போலவே இதுவும் தாமதமாகிக் கொண்டிருந்தது.
இப்போ நீங்கள் அது பற்றி இங்கே எழுதியதால் உடன் பதில் தர முடிகிறது.
மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி சந்திரவதனா. இது நண்பன் ஒருவன் எனக்கு சொன்ன கதை.
ReplyDeleteஇந்த கமண்ட் போடற லிங்க்ல வர ஜெர்மன் வரிகளை என்னான்னு சொல்லுங்களே, கொஞ்ச்ம் தமிழ்ல
ReplyDeleteவெளிகண்டநாதர்
ReplyDeleteஎதைக் கேக்கிறிங்கள்?