Tuesday, November 22, 2005
நவம்பர் மாத வடலி
நவம்பர் மாத வடலி வழமை போலவே புலவர் மணவை தங்கவேலனின் பண்பாடு என்றால் என்ன?, த.சிவபாலுவின் பிஞ்சு உள்ளத்தில் நற்சார்பான உளப்பாங்கு வளர்க்கப்பட வேண்டும் (உளவியல் தொடர்பான தொடரின் இரண்டாவது அங்கம்,) ஏ.ஜே.ஞானேந்திரனின் எங்கேதான் ஓடி ஒளிந்து கொள்வது? (பறவைக்காய்ச்சல் சம்பந்தமானது,) சி.மாசிலாமணியின் உப்பில்லாப் பண்டடம் குப்பையிலே! (உப்பின் நன்மை தீமைகள் பற்றியது), ம.ஜோசப்பின் நியாயமற்ற எதிர்பார்ப்புகள் துன்பத்திற்கு வழி கோலுகின்றன! (பெற்றோரின் நியாயமற்ற எதிர்பார்ப்புகளும் அதனாலான அழுத்தங்களும் ஒரு குழந்தையின் மனதை எந்தளவுக்கு பாதிக்கின்றன... அதனால் அக்குழந்தையின் எதிர்காலம் எப்படிப் பாதிக்கப் படுகிறது என்பது பற்றியதானது.) வைத்திய கலாநிதி ஆ.விசாகரத்தினம் அவர்களின் மெய்ஞானமும் அறிவியலும் (மனம் என்னும் கருமம்), செ.சிறீக்கந்தராஜாவின் புறநானூற்றில் இடம் பெறும் இலக்கியக் காட்சிகள் மீதான பார்வை.... என்று பலவிதமான கட்டுரைகளுடன் வெளி வந்துள்ளது.
கட்டுரைகளோடு சுவாரஸ்யமான பல துணுக்குச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment