Sunday, May 29, 2005

திசைகள் மாலன் Bhasaவில்


திசைகள் மாலன் அவர்களின் நேர்காணல் ஒன்று Bhasaவில் வந்துள்ளது. ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். முடிந்தவர்கள் யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நன்றாயிருக்கும்.

Development of Indic Language Computing, through his association with INFITT and as Validator of MicroSoft Office-Tamil

Mr. Maalan V Narayanan is a journalist and writer of repute. The person behind Thisaigal – the first Unicode based Tamil e-zine, he has been actively involved in the development of Indic Language Computing, through his association with INFITT and as Validator of MS Office-Tamil. Currently, Editor–Sun News Channel, he shares his experiences and thoughts in a freewheeling interview on the development and future of Indic Language Computing... more

ஓரு பேப்பர் - 23


இந்தப் பேப்பரைப் பார்த்ததும் ஒருவர், "என்ன! நல்ல பேப்பராக் கிடக்கு. ஓசியோ? எனக்கும் ஒரு ஒருபேப்பர் அனுப்பச் சொல்லி அவையளுக்கு ஒருக்கால் சொல்லி விடுங்கோ என்றார். `எனக்கே ஓசி. பிறகு இதிலை சிபாரிசு வேறையோ?` என்ற கேள்வியை நானே என்னைப் பார்த்துக் கேட்டு விட்டு, "இஞ்சை வரக்கை வாசியுங்கோவன். அவைக்கு எல்லா இடமும் அனுப்ப போஸ்ட் செலவு கட்டு படியாகாது" என்று சொல்லி ஒரு மாதிரி ஆளைச் சமாளித்து அனுப்பி விட்டேன்.

பேப்பரை வாசித்து முடித்தாலும் அதைப் பத்திரமாச் சேர்த்து வைப்பேன். அதுக்கும் உலை வைப்பார் போலையிருக்கு.

ஓரு பேப்பர் - 21
ஒரு பேப்பர் - 20
ஒரு பேப்பர் - 19
ஒரு பேப்பர் - 8
ஒரு பேப்பர்

ஒரு பேப்பர் - 22


ஒரு பேப்பர் 23ம் வந்து விட்டது.

22ம் பேப்பரைப் பார்த்து எழுத நினைத்தும் எழுதாமல் விட்டவைகளில் முக்கியமானது -
ஒருபேப்பர், செல்வநாயகியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்துள்ள செய்தி. எது ஆன்மீகம்? என்ற செல்வநாயகியின் தொடர் கட்டுரை மரத்தடி.கொம்மில் இருந்து எடுக்கப் படுவது தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

நிற்க, வாசகர் பகுதியில் செல்வநாயகியின் கட்டுரையைப் பாராட்டி யாராவது ஒருவராவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.

மற்றும்,

புலத்தில் புகைப்படம் மட்டும் பார்த்து நடக்கும் திருமணங்களால் விலை போகும் பலரின் வாழ்க்கையைப் பார்த்து குழம்பியிருக்கிறார் எல்லாளன். இது குறித்து உங்களையும் யோசிக்கச் சொல்லியுள்ளார. `ஆயிரம் காலத்துப் பயிர்` என்று அந்த நாட்களில் சொன்னார்கள். இப்போ பயிரின் தரத்தையோ நிலத்தின் தன்மையையோ ஆராயாமல் நட்டால் போதுமென்றுதான் திருமணங்கள் நடக்கின்றன. யோசிக்க வேண்டிய விடயந்தான்.

கைவிசேசத்தையும் பக்கற்றிலே கொடுக்கீனமாம். அருணன் பெருமூச்சு விடுகிறார். செவ்வாய்கிரகத்துக்கு விடுமுறையைக் களிக்கச் சென்று வரும் காலம் வந்தாலும், இலங்கை இனப்பிரச்சனை தீராது, பேச்சுவார்த்தை என்று பேய்க்காட்டப் படும் என்பதை இவர் சொல்லும் விதம் நன்றாயிருக்கிறது.

ந.ஹேமராஜின் பெறுபேறுகள் சிறுகதையும் நல்ல கருவைக் கொண்டுள்ளது.

அறுவைப்பக்கத்தில் வழமை போல அல்வாசிட்டியின் றியாலிட்டி இடம் பிடித்திருக்கிறது. கூடவே சயந்தனின் பின்னப் பெயிலாகாம என்ன செய்ய! , வானம்பாடியின் புலம் பெயர் தமிழர் வாழ்க்கை, தமிழோசையின் அரசியல் ஒரு விளக்கம் என்பன இடம் பிடித்துள்ளன.

சினிமாப் பகுதியில் அருண் வைத்தியநாதனின் நுனிப்புல் மேய்தலும் தமிழ் சினிமா ரசனையும், மீனாவின், மும்பை எக்ஸ்பிரஸ் விமர்சனம் என்பன இடம் பிடித்துள்ளன.

ஒரு பேப்பர் - 22

ஒரு பேப்பர் 23ம் வந்து விட்டது.

22ம் பேப்பரைப் பார்த்து எழுத நினைத்தும் எழுதாமல் விட்டவைகளில் முக்கியமானது -
ஒருபேப்பர், செல்வநாயகியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்துள்ள செய்தி. எது ஆன்மீகம்? என்ற செல்வநாயகியின் தொடர் கட்டுரை மரத்தடி.கொம்மில் இருந்து எடுக்கப் படுவது தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

நிற்க, வாசகர் பகுதியில் செல்வநாயகியின் கட்டுரையைப் பாராட்டி யாராவது ஒருவராவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.

மற்றும்,

புலத்தில் புகைப்படம் மட்டும் பார்த்து நடக்கும் திருமணங்களால் விலை போகும் பலரின் வாழ்க்கையைப் பார்த்து குழம்பியிருக்கிறார் எல்லாளன். இது குறித்து உங்களையும் யோசிக்கச் சொல்லியுள்ளார். `ஆயிரம் காலத்துப் பயிர்` என்று அந்த நாட்களில் சொன்னார்கள். இப்போ பயிரின் தரத்தையோ நிலத்தின் தன்மையையோ ஆராயாமல் நட்டால் போதுமென்றுதான் திருமணங்கள் நடக்கின்றன. யோசிக்க வேண்டிய விடயந்தான்.

கைவிசேசத்தையும் பக்கற்றிலே கொடுக்கீனமாம். அருணன் பெருமூச்சு விடுகிறார். செவ்வாய்கிரகத்துக்கு விடுமுறையைக் களிக்கச் சென்று வரும் காலம் வந்தாலும், இலங்கை இனப்பிரச்சனை தீராது, பேச்சுவார்த்தை என்று பேய்க்காட்டப் படும் என்பதை இவர் சொல்லும் விதம் நன்றாயிருக்கிறது.

ந.ஹேமராஜின் பெறுபேறுகள் சிறுகதையும் நல்ல கருவைக் கொண்டுள்ளது.

அறுவைப்பக்கத்தில் வழமை போல அல்வாசிட்டியின் றியாலிட்டி இடம் பிடித்திருக்கிறது. கூடவே சயந்தனின் பின்னப் பெயிலாகாம என்ன செய்ய! வானம்பாடியின் புலம் பெயர் தமிழர் வாழ்க்கை தமிழோசையின் அரசியல் ஒரு விளக்கம் என்பன இடம் பிடித்துள்ளன.

சினிமாப் பகுதியில் அருண் வைத்தியநாதனின் நுனிப்புல் மேய்தலும் தமிழ் சினிமா ரசனையும் மீனாவின் மும்பை எக்ஸ்பிரஸ் என்பன இடம் பிடித்துள்ளன.