Wednesday, December 07, 2005
ஒரு பேப்பர் - 35
ஒரு பேப்பர் - 35ஐ வாசித்து விட்டு, பிடித்தவை பிடிக்காதவை பற்றி எழுத நினைத்தேன். வழமை போலவே எழுதுவோம் எழுதுவோம் என்ற நினைப்போடு நாட்கள் ஒடி விட்டன.
மாவீரர்களை நினைவு கூர்ந்து, எமது விடியலுக்காய் தம்மை அணைத்துக் கொண்ட தியாக தீபங்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகப்புப் படத்தோடு கடந்தவாரம் பேப்பர் வந்தது.
உள்ளே மாவீரர் சிறப்புப் பக்கங்களோடு... பிக்கல், பிடுங்கல், வாதம், எதிர்வாதம், எள்ளல், ஜொள்ளல், அறுவை, சினிமா... என்று பலவித ரசனைக்குட்பட்ட விடயங்களும் அடங்கியுள்ளன.
இன்னும் வாசிக்காதவர்களுக்காக
இப்போதுதான் பார்த்தேன். 36வது பேப்பரும் வந்து விட்டது போலுள்ளது.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம். more
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யும் பெண்கள்

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்ய வந்திருக்கும் வெளி நாட்டுப் பெண்களுக்கு மிகவும் அடிப்படையான உரிமைகளைக் கூட உறுதி செய்ய சிங்கப்பூர் அரசு தவறுவதாக அமெரிக்காவிலிருந்து இயங்கும் , மனித உரிமைகள் கண்காணிப்பு, ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச், என்ற அமைப்பு கூறுகிறது.
வெளிநாட்டுப்பெண்கள் , தாக்கப்படுவது, நிர்ப்பந்தமாக தடுத்து வைக்கப்படுவது, அடிக்கடி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது, கொலை செய்யப்படுவது போன்றவை நடப்பதாக இந்த அமைப்பு ஒரு அறிக்கையில் கூறுகிறது.
இந்த துஷ்பிரயோகங்கள், சிங்கப்பூரின் சட்டதிட்டங்களின் படி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் தொழில் சட்டத்திலிருந்து விலக்கி வைக்கப் படுவதாலேயே நடக்கிறது என்று இந்த அறிக்கை கூறியது.
இந்த மாதிரி குற்றங்கள் இழைப்பவர்களுக்கு சிங்கப்பூர் அரசு கடுமையான தண்டனை அளிக்கிறது. ஆனால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மற்ற ஊழியர்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் தரப்படவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
quelle - BBC