Sunday, May 28, 2006

12 நாடுகளில் "உரிமைக்குரல்" ஒன்று கூடல்


12 நாடுகளில் உலகை உலுக்கும் "உரிமைக்குரல்" ஒன்று கூடல்
[ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2006, 17:26 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழத் தமிழர் தாயகத்தின் உரிமைக் குரலை வலியுறுத்தி அனைத்து புலம்பெயர் வாழ் நாடுகளில் உரிமைக்குரலுக்கான ஒன்று கூடல் நாளை 29 ஆம் நாள் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து, கனடா, இத்தாலி, பின்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவீடன், சுவிஸ், நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே, ஜேர்மனி ஆகிய 12 நாடுகளில் இந்த உரிமை முழக்கப் போர் நடைபெற உள்ளது.

- தமிழீழ மக்களின் தேசியம்-தாயகம்-சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்
- தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை தடை விதித்த நாடுகள் அகற்ற வேண்டும்

- உயர் பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் பொதுமக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இரானுவம் அப்பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்

- தமிழீழக் கடற்பரப்பில் நடைமுறையில் உள்ள மீன்பிடித் தடை முற்றாக நீக்கப்பட வேண்டும்

- இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் வரை தமிழ் அகதிகள் இல்ங்கைத் தீவுக்கு திருப்பி அனுப்பப்படுவது முற்றாக நிறுத்தப்பட வேண்டும்

- தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும்


ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி

அனைத்துலகத்தின் மனக் கதவின் மேல் தமிழரின் கரங்களைத் தட்டிட-

தமிழர் தன்னாட்சியுடன் வாழ துணை செய் அல்லது பிரிந்து போவதை அங்கீகரி என உரிமைக் குரல் எழுப்பிட-

குருதியில் குளிர்ப்பது தமிழரின் விதியா? உலகமே இன்றும் மௌனமே பதிலா? என்ற கேள்விகளோடு


உரிமைக் குரல்கள் ஓங்கிட

உலகம் யாவும் திரும்பிட

தடைகள் யாவும் உடைந்திட

தமிழர் தாழ்வு திறந்திட


புலம்பெயர் வாழ் தமிழர்களே!

உங்கள் நாட்டு உரிமைக்குரலுக்கான ஒன்று கூடலில் இணையுங்கள்!

ஒருமித்த குரலுடன் சர்வதேசத்தின் மனச்சாட்சியின் முன் நம் நியாயங்களை முன் வைக்க ஒன்று கூடுங்கள்!

இதுவே நாம் பங்கேற்கும் இறுதிப் போராய்- பேரணியாய்- இனி விடுதலைப் பேரணியாய்- புனித விதை குழிகளில் விதைக்கப்பட்ட நம் புனித உறவுகளின் கனவுகளை வென்றெடுக்கின்ற களமாய் ஒன்று கூடுங்கள்!

மேலதிக விவரங்களுக்கு: தமிழ்நாதம் இணையத்தளம்

Quelle - Puthinam

1 comment: