Wednesday, July 05, 2006

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய...

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய
அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


நன்றி - தமிழீழ விடுதலைப்புலிகள்(சுவிஸ் கிளை)

3 comments:

  1. வணக்கம் ஓவியராஜன்,

    தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிகவும் நன்றி.


    என் தம்பி மயூரனின் வீரமரணம் தந்த சோகத்தின் ஈரம் காயாத ஒரு பொழுதிலேயே அந்த ஒலிப்பேழை எனக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து இன்று வரை அந்தப் பாடலை நான் எத்தனையோ தடவைகள் கேட்டு விட்டேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று அது. அப்படியிருக்க எப்படி அந்தச் சொல்லை, தவறாகவே மனதில் பதித்து வைத்தேனோ தெரியவில்லை.
    இப்போதாவது சரியானதைக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  2. இருக்கின்ற இடத்தில் ஒற்றுமையாய வாழ மனித இனம் என்று தான் கற்று கொள்ளுமோ?
    இலங்கை தமிழர்களின் துயரம் என்று தான் முடியும். நாங்கள் காண விரும்பாத கவிதைகள் இவை. எங்களை துன்பப்படுத்தும் வார்த்தைகள் இவை.

    ReplyDelete
  3. நன்றி பாலசந்தர் கணேசன்.

    ReplyDelete