Thursday, August 03, 2006

பெண்களின் மூக்கு


பழைய செய்திதான் என்றாலும் பகிர்ந்து கொள்கிறேன்.

சில வருடங்களின் முன் பெண்களின் மூக்குக்கா ஆண்களின் மூக்குக்கா சக்தி அதிகம் என்று ஜேர்மனியில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

ஆராய்ச்சியிலிருந்து அறிந்து கொண்ட இரு விடயங்கள்:

1)வியர்வையின் வாசனையை வைத்து அது ஆண்களின் வியர்வையா அல்லது பெண்களின் வியர்வையா என்று கண்டு கொள்ளும் சக்தி பெண்களுக்கு இருக்கிறதாம். அதேநேரம் அது வியர்வையின் வாசனைதான் என்று கண்டு பிடிக்கவே ஆண்களுக்கு ஓரளவு நேரம் தேவைப் படுகிறதாம்.

2)ஆண்கள் சந்தோசமாக இருக்கிறார்களா, பயந்து இருக்கிறார்களா, வெறுப்பாக இருக்கிறார்களா, என்பதை எல்லாம் அவர்கள் மேல் வீசும் வியர்வை வாசனையை வைத்தே பெண்கள் உணர்ந்து கொள்வார்களாம். ஆண்களால் அப்படி முடியாதாம்.

6 comments:

  1. பெண்களுக்கு "மோப்ப சக்தி" ஜாஸ்தி என்று சொல்லுங்க.

    ReplyDelete
  2. அது என்னமோ உண்மைதான் !

    பீர்தான் சாப்பிட்டேன் என்று உண்மையைக்கூறினாலும், கரைக்ட்டாக கண்டுபிடித்து அடிக்கிறார்கள் சனிக்கிழமை இரவுகளிலில் வீட்டில்

    :)))

    ReplyDelete
  3. ஆண்கள் குடித்துவிட்டு வருகிறார்களா என்று கண்டறிய பெண்கள் மூக்கை உபயோகப்படுத்துவது தமிழகத்தில் பலருக்கு தெரியும்

    :))

    ReplyDelete
  4. Desperado, செந்தில், ரவி
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. அவுங்க சமையல் வாசனை பிடித்து பிடித்து ஆண்கள் மூக்குக்கு ஒன்றுமே தெரியாமல் போய்விட்டிருக்கும்.
    :-))

    ReplyDelete
  6. எலிவால்ராஜா, குமார்
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete