பெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகு முன்னே கல்லுகள்தானே!
பிள்ளைகளும் பின்னாளில் பெற்றாராகலாம் - அவர்
கல்லான மனங்களெல்லாம் பித்தாய் மாறலாம்!
அம்மா அப்பா ஆனபின்தான் அனுபவம் விளங்கும் - பெற்ற
அன்னை தந்தை செய்வதெல்லாம் அறிவுக்குத் துலங்கும்!
சும்மா சொன்னாப் புரிவதில்லை இந்தத் தத்துவம் - இதை
சொல்லாமலே புரிய வைக்கும் வாழ்க்கைத் தத்துவம்.
´
மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி வைசா.
ReplyDeleteஇது ஈழத்துப் பாடல். ஈழத்து ரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட பெற்ற மனம் பித்து என்பார் என்ற பாடல்களில் இடம் பெறும் வரிகளே இவை. இதை கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள் பாடியுள்ளார். மோகன்ராஜ் அவர்களின் இசையில் அருமையாக அமைந்த பாடல். 1970களில் வந்திருக்க வேண்டும். எனக்கு ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் மேல் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
பாடலில் முழு வரிகளும் இங்கே
பெற்ற மனம் பித்து என்பார்