எங்கள் இலட்சிய மாடத்தின்
அத்திவாரக் கற்களே!
அமைதியாக எம் மண்ணில்
புதைந்திருக்கும் விதைகளே!
பூகம்பங்களாய் களமாடிய நீங்கள்!
பூவிதழ்களாய் விரிந்திருக்கிறீர்கள்-ஆனால்
இங்கெரியும் தீபங்களால் நீங்கள்
மூட்டிடும் விளக்குகள் ஏராளம்.!
கல்லறைக்குள்ளிருந்தே களப்புலிகளைப் பிரசவிக்கும்
வல்லமை கொண்டவர்கள் நீங்கள்!
மலர்தூவ வருவோரின் மனங்களில் பொறிபாய்ச்சி
கனல் தெறிக்க வைப்பவர் நீங்கள!!
நெய்யூற்றி உங்கள் முன்னால்
விளக்கெரிப்போம் நாங்கள்-உங்கள்
இலட்சியத்தின் சுமையினை துணிந்தே
பொறுப்பெடுப்போம் நாங்கள்.!
- தீட்சண்யன் -
GOOOOOOOOOOOOOOOOD
ReplyDeleteஈழத்தமிழர்களுக்காக
ReplyDeleteஈரமான விழிகளுக்கு
வெளிச்சம் வருவதெப்போ!
புலிகள் பல
புறப்பட்டு
புதைகுழிக்குள்
புதைந்து கொண்டேயிருந்தாலும்
புதிய வேகத்துடன்
புதுப் புலி கிளம்புகிறது!
இருக்கட்டும்!
ஆனால் என்று தனியும்
இந்த கொடுமைகள்!
தமிழர்களாகிய எங்களுக்கு
இதயம் துடிக்கிறது
அங்கே ஒவ்வொரு
இதயமும் நிறுத்தப்படும்போது!
இதயத் துடிப்பை மட்டும்
இத்தனை நாட்களாக
நிறுத்த தெரிந்தவர்களுக்கு
போரை நிறுத்த தெரியாதா!
மனித குலத்தை வாழவிடாமல்
வம்பு சண்டை ஏனோ.
மனிதன் மடிவதை
மன்னிக்கவே முடியாது!