Thursday, March 16, 2006

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


ஒருவர் தான் செய்ததை திரும்ப அனுபவித்தே தீருவார் என்ற தத்துவம் உண்மையானதா?

நம்பும் படியாகப் பல விடயங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்திலும் அதை நீங்கள் நம்புகிறீர்களா?

பலதடவைகள் இது பற்றிச் சிந்தித்திருக்கிறேன். டிசேயின் பதிவு (தனிப்பட்டவளவில் எதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு.) மீண்டும் என்னைச் சிந்திக்க வைத்தது. உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்.