ஒருவர் தான் செய்ததை திரும்ப அனுபவித்தே தீருவார் என்ற தத்துவம் உண்மையானதா?
நம்பும் படியாகப் பல விடயங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்திலும் அதை நீங்கள் நம்புகிறீர்களா?
பலதடவைகள் இது பற்றிச் சிந்தித்திருக்கிறேன்.
டிசேயின் பதிவு (தனிப்பட்டவளவில் எதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு.) மீண்டும் என்னைச் சிந்திக்க வைத்தது. உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்.
சந்திரவதனா,
ReplyDeleteஇந்த நம்பிக்கை வெறுமனே ஒரு கருத்தேற்றமாக உருவாகாமல் முன்னோர்களின் பல நூற்றாண்டு அனுபவத்தின் காரணமாய் வந்தது. அதில் நிறைய உண்மைகள் இருக்க வாய்ப்புண்டு என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
unmai .
ReplyDelete// ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு //
ReplyDeleteஅன்புள்ள சந்திரவதனா,
ஒருவர் செய்யும் எந்த ஒரு நல்ல / தீய செயலுக்கும் அதற்கேற்றபடி விளைவுகளை அனுபவிப்பார் என்பதை என்னிடமும் பிறரிடமும் கண்டிருக்கிறேன்.
ஒருவர் தான் செய்ததை திரும்ப அனுபவித்தே தீருவார் என்ற தத்துவம் உண்மை
ReplyDeleteஒரு பிறவியில் ஒருவன் செய்த வினை முழுதும் அந்தப் பிறவியில் பயனுக்கு வருவதில்லை. அடுத்து வரும் பிறவியிலும் அதன் பின்னரும் பயனுக்கு வரும். வினைகள் அநுபவிப்பதற்காக எமக்குப் பிறவிகள் வருகின்றன. முன் செய்த வினை பலனுக்கு வந்து இப்பிறவியில் அநுபவமாவதோடு, அது அடுத்த பிறவிக்கும் காரணமாக அமைகிறது. இப்படிக் கூறுகிறது சைவ சித்தாந்தம்.
ReplyDeleteமுத்து, ஆதிரை, லதா, வில்லண்டம், சிறீதரன்
ReplyDeleteஉங்கள் அனைவரது பதிலுக்கும் நன்றி.