Sunday, June 04, 2006

கவிஞர் சோதியாவுக்கு நோர்வே மாநகர சபை விருது


நோர்வே அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட்டத்தின் கல்விப்பணி மேலாளரும் கவிஞருமான சோதியாவுக்கு நோர்வே மாநகர சபையின் சிறந்த சமூகச் செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் வாழும் தமிழர் ஒருவருக்கு முதன்முறையாக சிறந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கலைப்படைப்பாளிக்குரிய விருது நோர்வே அரச நிர்வாகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தின் கல்விப்பணி மேலாளரும் கவிஞருமானவர் சிவதாஸ் சிவபாலசிங்கம் (கவிஞர் சோதியா என்றும் அறியப்பட்டவர்). மேலதிக விபரங்களுக்கு

சோதியாவின் கவிதை ஒன்று
முற்றத்து வேம்பருகில் முல்லைக் கொடி பந்தலில்

அழகு...

மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நின்றான்.

அழகு அவன்
விழிகளிலா..!
மொழி மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!

சிரிக்கக் கூடாதென உதட்டை
விரிக்காதிருந்தாலும்
விழிகளில் அது வழிந்தது.

பார்க்கக் கூடாதென விழியைச்
சுருக்கியிருந்தாலும்
கருமணிகள் கட்டுடைத்து
என் விழியோடு மோதின.

இவனோடு பேசாது போனால்
எனக்குப்
பேசத் தெரிந்ததில்
என்ன பிரயோசனம்..!

பெயர் என்ன...?

விழி விரித்து
இதழ் உடைத்து
மௌனம் கலைத்தான்.

பெயர் கூட அழகுதான்.
படமெடுக்க அனுமதிப்பானா..?

அனுமதியின்றி....
அவசரமாய்....
குறை நினைப்பானா..?

இப்போ.......
மனத்திரையில் அவன் வந்து
மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நிற்கிறான்.

அழகு அவன்
விழிகளிலா..!
மொழிய மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!

சந்திரவதனா
october-2002