Tuesday, March 20, 2007

ஐ.நாவின் கவனத்தை ஈர்க்க உங்களின் கையொப்பம்

அமெரிக்க செனட்டர்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஈழப் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைக்கும் முக்கிய பணியில் தமிழ்ப் புத்திஜீவிகள் இறங்கி இருக்கின்றனர்.

பத்தாயிரம் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான கையொப்பங்களே பெறப்பட்டிருக்கின்றன. பெயர் மட்டும் போதுமானது. அதனைக்கூட விரும்பினால் நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் உங்கள் ஆதரவை வழங்கும் வகையில் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அவசியமானதும் அவசரமானதும் கூட.

தமிழ் மக்களின் கையொப்பம் அவசர தேவையாக உள்ளது. உலகத் தமிழர்களின் ஆதரவு ஈழப் பிரச்சனை தொடர்பாக எந்தளவுக்கு இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்ட இந்த விண்ணப்பபங்கள் இலக்க ரீதியான ஆதாரத்தை வழங்குகின்றன.

இதனால், தமிழர்கள் அனைவரும் இந்த இரு இறுதி நாட்களையும் பயன்படுத்தி, உங்கள் நண்பர்கள் உறவினர்களையும் இவ் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, ஈழப் பிரச்சனையின் அனைத்துலக கவனத்தைத் திருப்பும் முயற்சிக்கு ஆதரவை வழங்குங்கள்.

CLICK HERE

No comments:

Post a Comment