Sunday, September 23, 2007

உணர்வுகள்

1)
வாழ்க்கை
அது மிக வேகமாக விரைகிறது
எந்த அவசரத்திலும்
உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் செல்லாமல்

2)
அன்பு காதல் நன்றி...
போன்ற சொற்களுக்குள்
அடக்க முடியாத உணர்வுகள்
சமயத்தில் என்னை
திக்கு முக்காட வைக்கின்றன

3)
நடுநிசியில்
உன் நினைவுகள்
என்னைத் தட்டி எழுப்புகின்றன

4)
பகல் பொழுதுகளில்
ஆழ்ந்த மௌனத்தில் இருப்பதாய் நினைக்கிறார்கள்
நான் உன்னோடு பேசிக் கொண்டிருப்பது தெரியாத
அயலவர்கள்

5)
பறக்க நினைக்கும் போதெல்லாம்
வாழ்க்கைக் கோட்பாடுகள்
வலிந்திறுக்கும் விலங்குகளாய்
என்னைக் கட்டிப் போட்டு விடுகின்றன

6)
நடை உடைகளைக் கூட
மற்றொருவர் தீர்மானிக்கும்
இந்த சமுதாயத்தின் மத்தியில்
எப்படி சிறகசைப்பேன்

7)
சிலதை வாய் திறந்து
யாரோடாவது பேச வேண்டும் போல
மனசு அந்தரிக்கும்
அப்படித்தான் இப்போது
உன்னைப் பற்றியும்

No comments:

Post a Comment