Saturday, April 11, 2009

கவனயீர்ப்பு போராட்டங்களும் உண்ணாநோன்புகளும்

எம் தமிழ்மக்கள் படும் துன்பங்களுக்கு ஒரு விடிவு வேண்டி, புலம்பெயர் தமிழர்களால் நாடு தழுவியதான‌ கவனயீர்ப்பு போராட்டங்களும் உண்ணாநோன்புகளும்.

பிரான்சில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிச்சுவர் பகுதியில் இடம்பெற்று வரும் இந்த போராட்டத்தில் நான்கு இளைஞர்கள் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்

இத்தாலி மிலானோ நகரில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை ஐரோப்பிய பாராளுமன்ற இத்தாலி கிளை அமைந்துள்ள அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள திடலில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இடம் பெற்றுள்ளது

டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்கேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி திங்கள் அன்று மு.ப. 11 மணியளவில் நம் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளான இன்றும். டென்மார்க்கில் தொடரும் கவனயீர்ப்பு: ஆறு பேர் உண்ணாவிரதப் போராட்டம்

நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டது தாயகத்தில் உடனடியாகப் போரை நிறுத்தச்சொல்லி நேற்றும் ஐந்தாவது நாளாக..

சுவிஸ் ஜெனீவா,பேர்ண், சூரிச் நகரங்களில் தமிழ் மக்களால் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் நோக்குடன் சுவிஸ்சில் கடந்த 6ஆம் திகதி பேர்ண், சூரிச்சில் தொடங்கிய கவனயீர்ப்பு போராட்டங்கள் நேற்றும் பல மாநிலங்களில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜெனீவா ஜ.நா முன்றலிலும, பேர்ண் பாராளுமன்ற பிரதான தொடரூந்து நிலையத்தை அண்மித்த பகுதியிலும் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நிகழ்த்துகின்றனர்.

தென்னாபிரிக்கவில்: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் அவர்கள் தன்னுடைய உண்ணாநோன்பை இரண்டவாது நாளாக தென்னாபிரிக்க டேர்பன் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். தன்னுடைய கோரிக்கைகளை சர்வதேச சமூகம் பரிசீலிக்கும் வரைக்கும் தான் இந்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாகத் தெரிவித்தார்.

சுவீடனில் நடக்கும் தொடர் போராட்டத்தில் இந்திய தூதரக வாசலின் மத்தியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சுவீடன் காவற்துறையினர் பலர் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வளங்கினர்.

கனடாவில்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. ஜனநாயக நாடு என்ற ரீதியில் சட்டரீதியாக நடைபெற்று வரும் எந்தவொரு போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ தடை செய்யப்படமாட்டாதென கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

நியூயோர்க் மாநகரில்: விடுதலைப் புலிகளே தமிழர் பிரதிநிதிகள், நியூயோர்க் நகர மும்முனை ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் முழக்கம். நியூயோர்க் மாநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நீராகாரம் கூட அருந்தாத உண்ணாநிலைப் போராட்டம் மூன்று நாடுகளின் ஐ.நா. நிரந்தர வதிவிட பிரதிநிதிகளின் அலுவலகங்களின் முன்பாக தொடர்ச்சியாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.

பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருப்பவர்களில் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கு எதிர்வரும் புதன்கிழைமை அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment