Friday, May 06, 2011
போறாளே பொன்னுத்தாயி.. பொலபொலவென்று..
அப்போது 1996 இல் திடீரென எங்கள் வீட்டில் ஒரு முடிவு எடுக்கப் பட்டது. அது எனது மகள் நியூசிலாந்து சென்று ஒரு வருடம் படிப்பது என்பது.
என் மகளின் விருப்பம் அது. எனது கணவரின் அம்மா, அண்ணா குடும்பம், அக்கா குடும்பம் எல்லோரும் அங்கு இருப்பதால் எனது கணவரும் அதற்கு சந்தோசமாகச் சம்மதித்து விட்டார். எனது கணவரின் அண்ணனுக்கோ, அக்காவுக்கோ பெண்குழந்தைகள் இல்லாத காரணத்தால் அவளின் வரவையொட்டி அவர்களும் பெரிய ஆரவாரப்பட்டார்கள். எனது விருப்பு, வெறுப்புகள் முற்றிலுமாக இந்த விடயத்தில் அடிபட்டுப் போய் விட்டது. நான் கையாலாகதவளாய் நின்றேன்.
பிரிவை நினைத்து மிகவும் பயமாக இருந்தது. மனசு சோர்ந்து சோர்ந்து அழுதது. ஆனாலும் அவள் நியூசிலாந்து போவது உறுதியான முடிவாகி விட்டது. அவளை அழைத்துப் போவதற்கு நியூசிலாந்திலிருந்து எனது கணவரின் அண்ணா, அண்ணியும், மாமியும் ஜேர்மனிவரை வந்திருந்தார்கள்.
அவர்கள் எல்லோரும் புறப்படுவதற்கு முதல்நாள் இரவு எல்லோரும் சேர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட்டுப் பாட வேண்டும் என்று எனது மைத்துனர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரும் பாடினார்கள்.
எனது மகள் போறாளே பொன்னுத்தாயி... என்று இந்தப் பாடலைப் பாடத் தொடங்கினாள். அவள் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. அப்போதுதான் அவளின் கவலையை முழுவதுமாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. கொஞ்சம் நான் வலிமையாக இருந்திருந்தால் அந்தப் பயணத்தைத் தடுத்திருக்கலாம் என்று தோன்றியது. இன்றும் கூட கண்கலங்காமல் இந்தப் பாடலை என்னால் கேட்க முடிவதில்லை.
மனசுக்குள் கனக்கும் நினைவுகள் சுகமாயிமிருக்கும்.
ReplyDelete