கணினியைப் பார்க்கும் எண்ணமே முதலில் இருக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு உந்துதல். பார்த்து விட்டுப் படுப்போமே என்றது மனது.
சுவையான, சுவாரஸ்யமான தகவல்களுடன் மனது இணைய முன்னரே ஆரம்பகால வலையுலக நண்பர் டோண்டு இராகவனின் மரணச்செய்தி அதிர்ச்சியைத் தந்தது.
கால ஓட்டத்தில் அவருடனான எனது தொடர்பு அறவே அற்றுப் போய்விட்டாலும், தமிழ்வலையுலகின் ஆரம்பகாலங்களில் கருத்துக்கள், கட்டுரைகள், பின்னூட்டங்கள்.. என்று நிறைய விடயங்களைப் பரிமாறியதை மறந்து விட முடியாது. குறிப்பாக அவர் ஜெர்மன்மொழி பெயர்ப்பிலும் தேர்ச்சி பெற்றவராதலால் அது சம்பந்தமாகவும் பல கருத்துக்களைப் பரிமாறியுள்ளோம். எனது அனேகமான பதிவுகளுக்கு ஒற்றைவரியிலேனும் பின்னூட்டமிடுவார்.
ஆனாலும் எப்படியோ அவரை அடியோடு மறந்த விட்டேன். மரணச்செய்தியைப் பார்த்ததும், அதிர்ச்சியும், ஞாபகங்களும்...
டோண்டு இராகவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.