அன்றொரு நாள் அவர்கள்
இணைபிரியாத இளஞ்சோடிகள்
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்
பின்பொரு நாள் அவர்கள்
பிரியப் போவதாக
பிரஸ்தாபித்தார்கள்
இன்றும் அவர்கள்
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்
வேவ்வேறு துணைகளுடன்...
சந்திரவதனா
1.12.2014
No comments:
Post a Comment