யாரேனும் ஒருவர்
ஏதேனும் ஒன்றைக் காட்டி
எப்போதுமே
துயரங்களையும் சந்தோசங்களையும்
பகிர்ந்து கொண்டும் பறித்துக் கொண்டும்
இருக்கிறார்கள்
சந்திரவதனா
2015
Monday, February 23, 2015
பரதன்
இன்று எனது நண்பி மாலினியின் (Malini Sivagnanasundaram) மகன் பரதனின் (Parathan)
பிறந்தநாள். நெஞ்சார வாழ்த்துகிறேன். பரதனை நினைக்கும் போதெல்லாம்
மனதுக்குள் ஒரு நெகிழ்வு. நான் எப்போதோ புலம்பெயர்ந்து விட்டேன்.
மாலினிக்கு என் தம்பி மொறிஸின் (Parathan - Paratharajan) வளர்ச்சியையும்,
பணிகளையும் பார்த்துக் கொண்டு வாழும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
என் தம்பி மொறிஸின் நினைவாக மாலினி தனது மகனுக்கு பரதன் என்று பெயர்
வைத்ததைக் கூட 2010 இல் தான் அறிந்து கொண்டேன். உண்மையிலேயே நெகிழ்ந்தேன்.
Happy Birthday Parathan!
Chandravathanaa
18.2.2015
Happy Birthday Parathan!
Chandravathanaa
18.2.2015
Wednesday, February 11, 2015
அவர் ஒன்றும் குழந்தைப்பிள்ளை அல்லவே!
அ. முத்துலிங்கத்தின் `பதினொரு பேய்கள் ´ கதை கடந்தமாதம் காலச்சுவடில் வெளியான உடனேயே நான் வாசித்திருந்தேன்.
அது பற்றி இப்போது ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? அன்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
அது பற்றி இப்போது ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? அன்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
´அ. முத்துலிங்கம் விடுதலைப்புலிகள் பற்றிப் புனைந்த போது உங்கள்
எதிர்கருத்தை எழுதினீர்கள். இப்போது வேறொரு இயக்கம் பற்றி எழுதியதால்
பேசாமல் இருக்கிறீர்களா?` என்று கேட்டு.
முதலாவது - ஒருவருக்கு எப்போதும் எழுதக் கூடிய மனநிலை இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
இரண்டாவது - அதில் சொல்லப் பட்ட விடயங்களில் எது உண்மை, எது புனைவு என்பதை அறுதியிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு அது பற்றிய தெளிவும் என்னிடம் இருக்கவில்லை.
2011 இல் `எல்லாம் வெல்லும்´ என்ற அந்தக் கதையை வாசித்த போது அந்தப்புனைவு ஒரு பொய்யான ஆவணமாகி விடும் என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது. அது பொய்தான் என்பதை என்னால் எனக்கே உறுதிப்படுத்த முடிந்தது. எழுதக் கூடிய மனநிலையும் இருந்தது. எழுதினேன்.
`பதினொரு பேய்கள்´ வாசித்த போதும் மனதுள் ஒரு வித எரிச்சல் தோன்றியது. சும்மா ஒரு கதையாக இருந்தால் வேறு. ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பைப் பற்றிய கொச்சைப்படுத்தல் அது. விடுதலைப் போராட்டத்துக்கு என்று தம்மை அர்ப்பணித்த பெண்கள் பற்றிய தவறானதொரு ஆவணப்பதிவு அது.
எப்படித்தான் - தான் நேரே நின்று பார்த்தது போல இப்படியெல்லாம் எழுதுகிறாரோ..! என்ற ஆதங்கம் மீண்டும் எழுந்தது. ஆனாலும் அது பற்றி எழுதக் கூடிய மனநிலை எனக்கு இருக்கவில்லை.
ஒருவர் ஒரு தரம் ஒரு பிழையைச் செய்து, அதைச் சுட்டிக் காட்டியபின், மீண்டும் அதே பிழையைச் செய்வாராயின் நாம் என்ன தான் செய்யலாம்?
அவர் ஒன்றும் குழந்தைப்பிள்ளை அல்லவே!
சந்திரவதனா
11.2.2015
முதலாவது - ஒருவருக்கு எப்போதும் எழுதக் கூடிய மனநிலை இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
இரண்டாவது - அதில் சொல்லப் பட்ட விடயங்களில் எது உண்மை, எது புனைவு என்பதை அறுதியிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு அது பற்றிய தெளிவும் என்னிடம் இருக்கவில்லை.
2011 இல் `எல்லாம் வெல்லும்´ என்ற அந்தக் கதையை வாசித்த போது அந்தப்புனைவு ஒரு பொய்யான ஆவணமாகி விடும் என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது. அது பொய்தான் என்பதை என்னால் எனக்கே உறுதிப்படுத்த முடிந்தது. எழுதக் கூடிய மனநிலையும் இருந்தது. எழுதினேன்.
`பதினொரு பேய்கள்´ வாசித்த போதும் மனதுள் ஒரு வித எரிச்சல் தோன்றியது. சும்மா ஒரு கதையாக இருந்தால் வேறு. ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பைப் பற்றிய கொச்சைப்படுத்தல் அது. விடுதலைப் போராட்டத்துக்கு என்று தம்மை அர்ப்பணித்த பெண்கள் பற்றிய தவறானதொரு ஆவணப்பதிவு அது.
எப்படித்தான் - தான் நேரே நின்று பார்த்தது போல இப்படியெல்லாம் எழுதுகிறாரோ..! என்ற ஆதங்கம் மீண்டும் எழுந்தது. ஆனாலும் அது பற்றி எழுதக் கூடிய மனநிலை எனக்கு இருக்கவில்லை.
ஒருவர் ஒரு தரம் ஒரு பிழையைச் செய்து, அதைச் சுட்டிக் காட்டியபின், மீண்டும் அதே பிழையைச் செய்வாராயின் நாம் என்ன தான் செய்யலாம்?
அவர் ஒன்றும் குழந்தைப்பிள்ளை அல்லவே!
சந்திரவதனா
11.2.2015