கடந்தவருடம் காலையில் நான் வேலையில் நின்றபோது எனது கைத்தொலைபேசி சிணுங்கியது.
எனது மகன் துமிலன்தான் எடுத்திருந்தான்.
மிகவும் அனுக்கமான குரலில் -
"அம்மா..! நான் மருத்துவமனையில் நிற்கிறேன். Car(கார்) அக்சிடெண்ட் ஆகி விட்டது.
என்னை வந்து abholen செய்யுங்கோ.(கூட்டிக் கொண்டு போங்கோ)"
ஒரு கணம் மனம் பதறியது.
"உனக்கு.... ஏதும் பாரதூரமாக...?"
"இல்லை. nicht so schlimmm(அவ்வளவு பாரதூரமில்லை).
கழுத்தில் கொஞ்சம் நோ. Bandage போட்டிருக்கிறார்கள்.
Car(கார்)தான் சப்பளிந்து விட்டது.
Total schaden.(பாவிக்க முடியாதபடி முழுவதுமாகச் சிதைந்து விட்டது)"
"யாரில் பிழை?"
"என்னில்தான். நான் recht vor links(வலது இடது) பார்க்கவில்லை. வலப்பக்கமிருந்து வந்த காருடன் மோதி விட்டேன்."
ம்......... கார் வாங்கி ஒரு வருசம்தான். இன்னும் புதுத்தன்மை குறையாமல் இருந்தது. சிதைந்து விட்டதென்றால்...........?
காப்புறுதி நிறுவனம் புதுக்காருக்குப் பணம் கொடுக்கும். ஆனால் அடுத்த வருடம் காப்புறுதியின் கட்டுத்தொகை தலைக்கு மேல் ஏறிவிடும்.
எப்படிச் சமாளிப்பதோ....?
இப்ப எப்படி மருத்துவமனைக்குச் செல்வது? அனுங்கிறதைப் பார்த்தால் எலும்பெல்லாம் நல்லாக் குலுக்குப் பட்டிருக்கும் போலை இருக்கு. பாவம். எனது காரையும் கணவர் கொண்டு சென்று விட்டார். தலைமை அதிகாரியிடம் கேட்டு உடனடி விடுப்பு எடுத்தாலும் எப்படி அங்கு போய்ச் சேர்வது...? கணத்துக்குள் மனசு கனக்க எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்த அந்தக் கணத்துள்தான் நினைவு வந்தது. இன்று ஏப்ரல் ஓராந்திகதி.
"ஏய்...........? என்ன... விளையாடுறியோ...?
இன்று ஏப்ரல் 1st. "
எதிர் முனையில் அவன் சிரித்தான்.
எனக்குப் பெரிய நிம்மதி
No comments:
Post a Comment