Friday, December 03, 2004

சாதனை


ஜெயேந்திரர் என்ற சொல்லுக்கு உள்ள மவுசை நேற்றுத்தான் பார்த்தேன். எனது பதிவில் எத்தனையோ விடயங்களை ஒரு வருடங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நேற்று இந்த ஜெயேந்திரர் பற்றி எழுதிய பின் எனது தளத்துக்கு வந்து போனவர் தொகை நான் எதிர்பாராதது. எனது பதிவைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதனையே.

இன்றைய திண்ணையில் நேசகுமார் சக இந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அச்சமும் அதனாலான வேண்டுகோளும் நியாயமானதுதான். சில புல்லுருவிகளால் ஒட்டுமொத்த சாமியார்களையும், துறவிகளையும் நாம் தப்பாக எடை போட்டு விடக் கூடாதுதான்.

ஆனால் புல்லுருவிகளை இனங்காண்பது எப்படி?
அதற்கிடையில் அவர்களிடம் ஏமாந்து போபவர்கள் எத்தனை பேர்?

2 comments:

  1. இது தெரியாதா அக்கா,பாதிப்பேர் ஜெயேந்திரருக்கு சார்பாக சந்திரவதனா என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்க வந்திருப்பார்கள்.மீதிப்பேர் அவர்களின் பின்னூட்டதுடன் சண்டை போட வந்திருப்பார்கள்.
    நான் கூட எனது கருத்துகளை உங்கள் பின்னூட்டப் பெட்டியில் கொட்டிவிட்டுப் போய்விடலாமா என நினைத்தேன்.எனது விவாதத்துக்கு உங்கள் வலைபதிவைக் களமாக்க விரும்பவில்லை.தெரியும்தானே என்ன நடக்குமென்று.

    ReplyDelete
  2. இது தெரியாதா அக்கா,பாதிப்பேர் ஜெயேந்திரருக்கு சார்பாக சந்திரவதனா என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்க வந்திருப்பார்கள்.மீதிப்பேர் அவர்களின் பின்னூட்டதுடன் சண்டை போட வந்திருப்பார்கள்.
    நான் கூட எனது கருத்துகளை உங்கள் பின்னூட்டப் பெட்டியில் கொட்டிவிட்டுப் போய்விடலாமா என நினைத்தேன்.எனது விவாதத்துக்கு உங்கள் வலைபதிவைக் களமாக்க விரும்பவில்லை.தெரியும்தானே என்ன நடக்குமென்று.

    ReplyDelete