Wednesday, February 09, 2005

ஒரு சின்ன அதிசயம்

எங்கள் வீட்டுக்குள் ஒரு சின்ன அதிசயம் நடந்தது.
உங்களுக்கு எப்படியோ...? எனக்கு இது அதிசயம் போலத்தான்.

அதாவது
எனது அண்ணன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
அண்ணி பிறந்தநாள் டிசம்பர் 10ந் திகதி.

7வருடங்கள் கழித்து தம்பியின் திருமணம்.
அம்மா அப்பா பெண் பார்த்து (பேச்சுத் திருமணம்) திருமணம் நடந்தது.
தம்பியின் மனைவி பிறந்தநாளும் டிசம்பர் 10ந் திகதியே.

அது மட்டுமா..!!!
இருவரின் பெயரும் மஞ்சுளா.

பெயரும் பிறந்தநாளும் ஒன்றாக மருமகள்கள் எங்கள் வீட்டில்.

5 comments:

  1. சந்திரா, நானும் என் அண்ணன் மகளும் பிறந்த தேதி மே 16. அதே அண்ணனும், என் மகனும் பிறந்த தேதி ஆகஸ்ட் 16.
    உஷா
    Ramachandranusha | Email | 02.09.05 - 7:52 am | #

    ReplyDelete
  2. appadiya :-()
    sajee | Email | 02.09.05 - 12:27 pm | #

    ReplyDelete
  3. சந்திரா ! என் 2 வது மகனும், என் பெண்ணும் ஒரு தேதியில் பிறந்தவர்கள். 5 வருட இடைவெளியில்...இத்தனைக்கும் நான் கணக்கில் மக்கு !
    Raviaa | Email | 02.09.05 - 1:42 pm | #

    ReplyDelete
  4. chandravathanaa,

    en muthal magaLin DOB 26 OCT
    en manaiviyin DOB 27 Jan
    ennutaiyathu 28 Nov

    en iraNtAvathu magaL 25 Dec-il piRanthirunthAl, sariyAka amainthirukkum!
    AnAl, avaL piRanthathO 7th Jan, 13 days LATER :-)
    enna seyvathu?

    enRenRum anbudan
    BALA

    ReplyDelete
  5. பதில் தந்த ரவியா, பாலா, சயந்தன் உஷா அனைவருக்கும் நன்றி.
    உங்கள் வீட்டிலும் இப்படியா...! என்று பார்க்கும் போது நியமாகவே அதிசயமாகத்தான் இருக்கிறது.

    என்னோடு வேலை செயபவர்களில் ஒரு போலந்து நாட்டுப் பெண்ணின்
    பிறந்தநாளும் அவளை விட பத்து வயது குறைந்த யேர்மனிப் பெண்ணின் பிறந்தநாளும் யூன் 18ம் 19ம் திகதிகளில். பெயர்களும் இருவருக்கும் ஒன்றே(கோர்னெலியா)
    இருவரின் பிள்ளைகளின் பெயர்களும் நத்தலியா.

    போலந்துப் பெண்ணின் மகளின் பிறந்தநாள் யேர்மனியப் பெண்ணின் பிறந்தநாளன்று.
    இதே போல் யேர்மனியப் பெண்ணின் மகளின் பிறந்தநாள் போலந்துப் பெண்ணின் பிறந்தநாளன்று.
    இரு மகள்களுமே போனவருடம் தமது 18வது பிறந்தநாட்களைக் கொண்டாடினார்கள்.

    இந்த ஒற்றுமைகளாலேயே இவ்விரு பெண்களும் குடும்ப நட்பாகி விட்டார்கள்.
    இத்தனைக்கும் இவர்கள் இருவரும் 5 வருடங்களின் முன்தான் ஒருவரையொருவர் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள்.

    ReplyDelete