Tuesday, February 08, 2005
இது சுயநலமா?
அண்ணி தொலைபேசியில் அழைத்து "பரதன் இயக்கத்துக்குப் போய் விட்டான்" என்ற போது சுயநலமாக மனசு அழுதது. அவன் எனது அண்ணனின் மூன்றாவது மகன்.
"பன்னிரண்டே வயசுதானே! ஏன் போனான்? நன்றாகப் படிப்பானே! அண்ணி அனுப்பி வைக்கும் படங்களிலிலெல்லாம் துருதுருவென்ற விழிகளுடன் என்னைப் பார்ப்பானே! எனக்கு அழுகையாக வந்தது. இப்ப என்ன அவசரம் வந்து போனான்..?" மனசு கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டது.
அண்ணியை நினைக்கத்தான் பாவமாக இருந்தது. என் வயதுதான். அதற்கிடையில் அண்ணனையையும் இழந்து பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் தனியாக நிற்கிறா. அவவின் தழுதழுத்த குரல் அடிக்கடி மனசில் மோதியது.
இரண்டு கிழமைகளாக இதே நினைவுகள் என்னுள் அலைமோதி மனசை அலைக்கழித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் அண்ணியின் தொலைபேசி "அவன் திரும்பி வந்திட்டான்." சந்தோசம் கலந்த அழுகை பீறிட்டது.
"எப்பிடி வந்தவன்? போய்க் கூட்டிக் கொண்டு வந்தனிங்களோ...? "
"இல்லை அவையள்தான் திருப்பி அனுப்பீட்டினம். 12வயசிலை சேரேலாது..." எண்டு சொல்லி.
எனக்கு போன நிம்மதி திரும்பி வந்தது.
இதையும் விட கடுமையாக...
அன்று 26ந் திகதி. சுனாமி அலைகளோடு வந்த செய்திகளில் வற்றாப்பளை தேவாலயத்துக்குச் சென்ற அத்தனை பேரையும் கடல் கொண்டு சென்று விட்டது என்ற செய்தி மனதை இடித்தது. அண்ணி ஒவ்வொரு ஞாயிறு காலையும் தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு அந்தத் தேவாலயத்துக்குப் போவது நாமறிந்த விடயம். அன்றும் அவ போயிருப்பா என்ற எண்ணம்தான் என்னையும் எனது குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரையும் நிலைகுலைய வைத்தது.
தொலைபேசியோடு போராடினோம். தொடர்புகள் கிடைக்கவேயில்லை. அம்மா செய்வதறியாது மலைத்துப் போய் இருந்தா.
இரண்டுநாள் கழித்துத்தான் தொடர்பு கிடைத்தது.
அன்று(26ந் திகதி) மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அண்ணி தேவாலயத்துக்குப் போகாமல் மருத்துவரிடம் சென்றிருந்தா.
அத்தனை அனர்த்தங்களின் மத்தியிலும் ஒரு அசாதாரண நிம்மதியில் மனது குதூகலித்தது.
A simple and nice post! Thanks!
ReplyDeleteஇதிலெங்கே வந்தது சுயநலம்?! இயற்கைதானே!
ReplyDeleteThanks for such a post. Ithu sollum seithigal yeraalam.
ReplyDeleteஅன்புள்ள சந்திரவதனா,
ReplyDeleteஇது மிகவும் இயற்கைதான்! சுயநலமில்லாமல் பொதுநலம் இருக்க முடியாது!
கடவுள் வேறு ஏதோ ஒரு ஐடியா வச்சிருக்கார்!
என்றும் அன்புடன்,துளசி.