சமையல் என்பது ஒரு கலை என்ற எண்ணத்திலிருந்து வழுவி அது பெண்களின் தலையில் திணிக்கப் பட்டு சமையலும் அட்டில்கூடமும் பெண்களுக்குச் சொந்தமான விடயங்கள் போன்ற பிரமை ஏற்படுத்தப் பட்டு பலபெண்கள் தமது திறமைகளை காலங்காலமாய் அட்டில்கூடத்துக்குள்ளேயே முடக்கி விட்டார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்களும் சமையலில் மனதோடு ஈடுபடுகிறார்கள். ஆனாலும் அது பெண்களின் வேலையாகவே கருதப் படுகிறது.
உண்மையில் சமையல் என்பது ஒரு கலை. முந்தைய காலங்களில் ஆண்கள்தான் இக்கலையில் சிறந்து விளங்கியதாகப் பலர் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில் நளபாகம் என்பது ஆண்களின் சமையல் திறனுக்குச் சாட்சியாக இருக்கிறது.
சமையல் என்பது, "இது உனது வேலை" என்று சொல்லாமலே சொல்லி, ஒரு பெண்ணிடம் திணிக்கப் படும் போதுதான் அதன் சுவை குறைகிறது. கைக்குக் கை ருசி வேறுபட்டாலும் மனஈடுபாட்டுடன் செய்யும் போதுதான் சமையல் சமையலாகிறது.
எனக்கு சமைப்பதை விட ருசிப்பதில்தான் ஆர்வம் அதிகம். ஆனாலும் சில உணவுகளை வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து செய்து பார்த்துச் சுவைத்திருக்கிறேன். (குறிப்பாக இனிப்பு வகைகளை)
எத்தனை விதமான Chocolatesதான் இங்கு ஐரோப்யியாவில் இருந்தாலும் எங்கள் ஊர் சர்க்கரை போட்டுச் செய்யும் இனிப்பு வகைகளின் சுவைக்கு இந்தச் Chocolates ஈடாக மாட்டா.
அந்த வகையில் நான் வலைப்பதிவிலிருந்து கண்டெடுத்து சுவைத்தவற்றில்
இந்துராணி கருணாகரனின் வட்டிலப்பம் மிகவும் தித்திப்பானது.
இன்று காசி முட்டையில்லாத வாழைப்பழகேக் செய்யும் முறையைத் தந்துள்ளார். செலவு அதிகமில்லாத கைவசமுள்ள பொருட்களோடு செய்யக் கூடிய உணவு என்பதால் செய்து பார்க்கும் (பார்ப்பதல்ல சுவைப்பது.)எண்ணமும் உடனேயே வந்துள்ளது.
No comments:
Post a Comment