Saturday, April 23, 2005

அவர்கள் வரவில்லை


காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது. விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும் சிவந்தன.

"அக்கா சித்திரைக்குப் பொங்கியாச்சே... "
பாதையில் ஒரு தமிழன் பாசமாய்க் கேட்டான்.

"...ம்ம்ம்..." காலைப் பரபரப்பில் பாணைக் கடிக்கவே மறந்தேன் என்றால் நம்புவானா...! பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுக்காய் அழுதேன் என்றால் நம்புவானா...! கற்தரையில் எம்மவர் நித்திரை கொள்வதை ஊர்க்கடிதம் சொன்னதில் தொடங்கி இந்திய வல்லூறுகள் எம்மவரை உயிர் வதம் செய்வதில் தொடர்ந்து... செம்மணிப் புதைகுழியில் எம் பெண்மணிகள் புதைந்தது வரை... சத்தியமாக நான் சித்திரைக்குப் பொங்கவில்லை என்றால் நம்புவானா...! - மிகுதி

No comments:

Post a Comment