Thursday, May 19, 2005

சிகரத்தைத் தொடு

பரணிலிருந்து....

சிகரம் தொடுவது
சிரமம் போல்
உலகம் நிறைய
விரசங்கள்

அகரத்தில் தொடங்கி
உலகத்தை அளந்தவனுக்கு
சிகரத்தைத் தொடுவதில்
சிரமம் ஒன்றும் இல்லையே

துயரத்தை
களைந்து விடு
துரோகங்களை
ஒதுக்கி விடு

மனித நேயமும்
மனதில் நேசமும் கொண்டு
கரங்களை உயர்த்தி
சிகரத்தைத் தொடு

சந்திரவதனா
யேர்மனி 2001

No comments:

Post a Comment