Friday, September 09, 2005

ஒரு பேப்பர் - 30 (Sep02-15, 2005)


ஒரு பேப்பரின் 30வது வெளியீடு கிடைத்துள்ளது. 29வது கிடைக்கவில்லை. ஆதலால் இனி எனக்கு அனுப்ப மாட்டார்கள் என்றே நினைத்தேன். இணையத்தில் வாசிக்கவும் நேரம் சரியாக அமையவில்லை. மீண்டும் என்னை நினைத்து 30ஆவது பேப்பரை அனுப்பியுள்ளார். அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

ஒரு பேப்பர் 30இல் இளைஞனின் உராய்வு கவிதைநூல் வெளியீடு, எல்லாளனின் வழமையான கொஞ்சம் யோசியுங்க, சேயோனின் சற்று மாறுதலுக்காக, கந்தையா சண்முகத்தின் பண்பாடு, இவைகளோடு இந்தியனின்(தாத்தா இல்ல) ஈழத்தழிழருக்கு நான் எழுதிக் கொள்வது, உமா மகாலிங்கத்தின் சமரசம் இல்லையேல் சமாதானம் இல்லை, கருணாவின் கமரா, டொக்டர் பாலேந்திரனின் தம்பதிகளாக வாழ்வது எப்படி?, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தாளவாத்தியக் கலைஞர் முத்து சிவராஜாவுடனான பேட்டி, கொழுவியின் கொலிஜ் கொலிஜ், எம்.கே.குமாரின் ஜனநாயகமும் சன் டிவி குழுமமும், தமிழ்டுபுக்குவின் ஜொள்ளித் திரிந்ததொரு காலம், குழலியின் இணையத்தில் அழகுக்கிளி அசின், சுரேஸின் பெனாத்தல் சுரேஷ் - ஒரு தியாகி, கரிச்சான் குஞ்சனின் ஒற்றைப் பனைமரம், அரசுவின் கண்ணகி தீவிரவாதியா?, கே.எஸ் பாலச்சந்திரனின் விசிலடிச்சான் குஞ்சுகள், சினிமா... என்று பல சுவையான அம்சங்கள் உள்ளன.
அறுவைப்பக்கத்தில் தமிழ்பித்தனின் தொலைபேசியால், முகமூடியின் எஸ்.ஏ.ராஜ்குமார் தினமூடி சந்திப்பு இன்னும் இவையின்றி தமிழ்சினிமா இல்லை(எழுதியவர் பெயரைத் தவற விட்டு விட்டார்களாம்) என்பன இடம் பெற்றுள்ளன.

குறிப்பிடும் படியாக பல கட்டுரைகள் ஒரு பேப்பருக்காகவே பிரத்தியேகமாக எழுதப் பட்டுள்ளன.

பூராயம் பகுதியில்தான் ஒரு வாசகர் - பெயர் சங்கரப்பிள்ளை - விம்பிள்டனில் இருந்து எழுதியிருக்கிறார்.
"ஒரு பேப்பரை ஒரு பவுணுக்காவது வில்லுங்கோ. ஓசியாக் குடுத்தா மரியாதை இல்லை" என்று.
விற்கப்படும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் சில காலங்களுக்குள் காணாமற் போவது பற்றி அவருக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன்.

சரி, பேப்பரை மேலோட்டமாகப் பார்த்து எழுதியுள்ளேன். வாசித்து எனது அபிப்பிராயங்களை எழுதுவேன் என்று எந்த வாக்குறுதியும் நான் தரவில்லை. நேரம் அப்படி. இனித்தான் வாசிக்க வேண்டும். வாசிக்கும் போது ஏதாவது ஒரு விடயம் மனதை உதைத்தாலோ அல்லது மனதைத் தழுவினாலோ வந்து அது பற்றி எழுதுகிறேன்.

சந்திரவதனா
9.9.05

No comments:

Post a Comment