Tuesday, August 23, 2016

தவறுகள் இப்படியும் நடக்க வேண்டுமா?

பழம் நழுவிப் பாலில் விழலாம்.
அலைபேசி நழுவி நிலத்தில் விழலாமா?

அதனால்தான் அலைபேசி விழும் வேகத்தையும் விட அதிவேகமாய்
விழுந்து அலைபேசியைப் பிடித்துக் கொண்டேன்.
அப்பாடா என்று எழுந்த போது ஒரு அழைப்புச் சத்தம்.

யாராவது என்னை அழைக்கிறார்களா அல்லது நான் யாரையாவது அழைக்கிறேனா என முதலில் புரியவில்லை. பார்க்கவும் ஒன்றும் தெரியவில்லை. சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. எதுவாயினும் பரவாயில்லை என்று முதலில் அலைபேசியை முழுவதுமாக நிறுத்தினேன்.

சில விநாடிகள் கழித்து கடவுச்சொல்லைக் கொடுத்து அலைபேசியைத் திறந்து பார்த்தேன்.

இப்படியும் நடக்க வேண்டுமா? மிகுந்த சங்கடமாகி விட்டது.

Facebook Messenger இனூடு அந்த அழைப்பு கனடாவுக்குப் போயிருக்கிறது.
அப்போது கனடாவில் நேரம் அதிகாலை 3,50.

எத்துணை அசௌகரியப் பட்டாரோ?

துயில் கலைந்தாரோ? தொடர்ந்து துயின்றாரோ? துயிலமுடியாது அவதிப்பட்டாரோ?

இன்னும் என்னால் மனச்சங்கடத்திலிருந்து விடுபட முடியவில்லை.

தவறுகள் இப்படியும் நடக்க வேண்டுமா?

சந்திரவதனா
23.08.2016 

No comments:

Post a Comment