உருளைக்கிழங்கு
களவெடுத்ததற்காக இரு மனிதர்களை பெற்றோலோ அன்றி வேறேதோ ஊற்றி உயிரோடு
கொளுத்தினார்கள் சிலர். அதை வேடிக்கையாகவும், வினையாகவும் பார்த்துக் கொண்டு
நின்றார்கள் இன்னும் சிலர். பார்த்துக் கொண்டு நின்ற அத்தனை பேரும் ஒன்றிணைந்து
தடுத்திருந்தால் அந்த உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
உருளைக்கிழங்கைத் திருடிய
திருடர்கள்தானே! எப்படிக் கொடூரமாய்ச் செத்தால் எமக்கென்ன என்பது போலவோ அன்றி
நல்லாகச் சாகட்டுமே என்பது போலவோ கல்லுளிமங்கர்களாக
இருந்து விட்டார்கள்.
திருடர்கள் ஏன்
உருவாகிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை. அதுவும் வயிற்றுக்காகத்
திருடுபவர்கள்...?
ஒரு மனிதனின் அடிப்படைத்
தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அரசும், இரக்கமற்ற சமூகமும் இருக்கும் வரை
திருடர்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். திருடனைத் திருந்தவே விடாத சட்டம்
இருக்கும் வரை திருடர்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள்.
`திருடன்
மணியன்பிள்ளை´ என்ற நூலின், பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். மைக்கேல் இந்நூல் பற்றிச் சொன்ன
பின்தான் தேடிப்பார்த்தேன். 590 பக்க நாவலைப் பற்றி 5 பந்திகளில் எழுதி முடித்து
விட்டார் மைக்கேல். (https://www.facebook.com/photo.php?fbid=352599961746466&set=a.140907742915690.1073741827.100009893940426&type=3&theater)
இணையத்திலும் விரவியிருக்கின்றன நூல் பற்றிய குறிப்புகள்.
இப்போது
`திருடன் மணியன்பிள்ளை´யையும்
வாசித்து விடவேண்டுமென்று மனம் உன்மத்தம் கொண்டுள்ளது.
சந்திரவதனா
17.10.2016
No comments:
Post a Comment