Monday, October 17, 2016

எழுதினால்_கொஞ்சம்_தேவலை

சின்ன வயதில் சிந்தாமணி, கல்கண்டு, கல்கி, குமுதம், ஆனந்தவிகடன்… போன்றவைகளில் தொடர்களை வாசித்து விட்டு அடுத்த தொடருக்காக பெருந்தவிப்புடன் ஒரு கிழமை காத்திருப்போம். அந்த ஒரு கிழமைக்குள் அண்ணன், நான், தம்பி பார்த்திபன் மூவரும் அத்தொடர்களைப் பற்றி நிறையவே அலசி ஆராய்வோம். அடுத்து என்ன வரும் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு கதை புனைந்து கதைத்துக் கொள்வோம். சில கதைகள் பற்றி அம்மாவுடனும் கதைப்போம். அம்மாவும் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்திருப்பா.

அதை நினைவு படுத்துகிறது உமையாழ் பெரிந்தேவியின் எழுதினால்_கொஞ்சம்_தேவலை (https://www.facebook.com/…/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%A…)

இப்போது சோலிகள் பல. அப்போதிருந்த அந்தளவு எதிர்பார்ப்பும், புத்தகங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், யார் முதலில் வாசிப்பது என்பதிலான பிக்கல், பிடுங்கல்களும் இல்லை. வாசித்த பலதையே மறந்து போகுமளவுக்கு வயதும் ஏறிக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும், அவ்வப்போது உமையாழ் எதிர்பார்த்துக் காத்திருந்த நபர் வந்தாரா? றியாத் விமானநிலையத்திலிருந்து உமையாளை அழைத்துச் சென்றாரா? என்ற கேள்விகள் மனதில் எழுத்தான் செய்கிறது.

சந்திரவதனா
16.10.2016

No comments:

Post a Comment