வெள்ளாவி நூலை நூலகத்திலிருந்து தரவிறக்கி வைத்து விட்டு மறந்து விட்டேன். ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் ஞாபகம் வந்து எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். தொடக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது. விமல் குழந்தைவேலுவின் முகப்புத்தகப் பதிவுகளைத்தான் இதுவரை வாசித்திருக்கிறேன். இதுதான் அவரது நான் வாசிக்கும் முதல் நாவல்.
பரஞ்சோதி என்பது ஒரு சிறுமியின் பெயர். எனக்கு அதை ஆண் பெயராகத்தான் தெரியும். ஆனாலும் அச்சிறுமியும், புளியம்மரமும் மனதுள் ஒருவித குறுகுறுப்பையும் ஊர் நினைவுகளையும் கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக அந்தப் பேச்சுத் தமிழ் அருமை.
எங்கு சென்றாலும் நூலைத் தொடரவேண்டும் என்ற ஆவல் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. மிகவும் நன்றாகத் தொடரும் என்றே நம்புகிறேன்.
சந்திரவதனா
28.04.2017
No comments:
Post a Comment