Tuesday, June 15, 2004

கவிஞர் சல்மா


ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கவிஞர் சல்மாவின் பேட்டியொன்று வாசிக்கக் கிடைத்த போது........
அது என்னுள் பெரும் வியப்பையும், இன்னும் பல உணர்வுகளையும் தோற்றுவித்தது.

எங்கோ ஒரு மூலையில் யாரும் அவ்வளவாகப் பார்க்காத இடத்தில்
அதாவது குறிப்பிட்ட ஒரு இணையத் தளத்தில் மட்டும் அப்பேட்டி இருந்து
என்றைக்கோ ஒரு நாள் அதிலிருந்தும் எடுபட்டு
குறிப்பிட்ட சிலரைத் தாண்டாமல்............. போய் விடுமோ
என்றொரு கவலை எனக்குள் எழுந்தது.

இதைக் கண்டிப்பாக மற்றவர்களது பார்வைக்கும் கொண்டு வரவேண்டுமென்ற ஆவலில் எனது
சாதனைப்பெண்கள்(முக்கியப் பெண்கள்) பகுதியிலும், தோழியரின் வலைப்பதிவிலும் இட்டேன்.

எந்தத் தளத்தில் இருந்து வாசித்தேன் என்பதைத்தான் மறந்து விட்டேன்.
எழுத்தை சுரதாவின் செயலியில் மாற்றி எழுத்துப் பிழைகளைத் திருத்தி நேர் சீராக பதிவதற்கு எனக்கு நிறைய நேரம் தேவைப் பட்டது. அவ்வளவு நேரத்தையும் செலவழித்த பின் இவ்வளவு நீளத்தை யாராவது வாசிப்பார்களா..? என்று மனதில் மெதுவான சந்தேகம் எழுந்தது.

ஆனாலும் சந்தேகத்தை தீர்க்கும் படி றஞ்சி, ரவி, புகாரி மூவரும் அதை வாசித்து தத்தமது கருத்துக்களைத் தோழியரில் பதிந்தார்கள். அது எனக்கு மிகுந்த திருப்தியையே தந்திருக்கிறது.

இவர்களோடு மதியும் இதை வாசித்து இதை மரத்தடியில் போட
இது பற்றியதான ஒரு கருத்தாடல் மதியின் மரத்தடிக் குழுமத்தில் தொடர்கிறது.
இதில் எனக்கு சந்தோசமே.

சல்மா என்ற அந்தப் பெண்ணின் வாழ்வு மற்றைய பெண்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.அது பற்றிய கருத்தாடல்கள் கூட நல்ல விடயங்களைத் தேர்ந்தெடுத்து முன்னேற உதவும்.

இதுவரையில் நான் சல்மாவின் கவிதைகளில் ஒரு சிலதைத்தான் வாசித்துள்ளேன். அதனால் சல்மாவின் கவிதைகளையொட்டிய எனது கருத்துக்களையோ, அது பற்றிய ரவியியினதோ அல்லது மற்றவர்களினதோ கருத்துக்களுக்கான பதிலையோ என்னால் இங்கு தர முடியவில்லை. ஆனாலும் எளிய சொற்களால் பேசுவதை மட்டும் கவிதையெனக் கொள்ளும் அவரது வரையறைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை.

ஒரு பெண் என்பதால் அவர் முன்னே கட்டியெழுப்பப் பட்டிருந்த தடைகளும், அதனால் அவர் எதிர் நோக்கிய பிரச்சனைகளும், அதையும் தாண்டி அவர் வெளியுலகுக்கு வந்த விதங்களும் பெண்களுக்கு - முடியும் - என்றதொரு தன்னம்பிகையை அளிப்பதாகவே இருக்கிறது.

அதே நேரம் அவரது அரசியல் வாழ்க்கைக்கு முன்னான காலகட்டங்களைப் பற்றியதான அவர் பேச்சில் ஒரு இயலாமை, மீற முடியாமை... என்று இன்னும் பல பெண் உலகத்துக்கான சலிப்புகள் தெரிகின்றன.

அரசியல் தற்போதைக்கு அவர் தன் மீதான தடைகளை உடைத்தெறிவதற்குத் தகுந்த பலமான ஆயுதமாகத்தான் இருக்கிறது. அதுவே அவர் தன்னை தொலைத்துக் கொள்வதற்கான அதளபாதாளமாக மாறாதிருக்க வேண்டும்.

மதியின் மரத்தடிக் குழுமத்தில் தொடர்கின்ற கருத்தாடலை வெட்டி இங்கே ஒட்டுகிறேன்.

From: "usha"
Date: Fri Jun 11, 2004 7:35 pm
இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன
செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது. நான் இலங்கைக்குப்
புறப்படும்போது "எந்த அம்மா இப்படி வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்கி
றார்கள்" என்ற கேள்வியை எழுப்பி, ஏதோ தேவையற்ற காரியங்களில்
ஈடுபடுவதைப்போல நினைத்துப் பேசுகிறான். சின்னப் பையன்களைக்கூட திசை தி
ருப்புவதாக நம் சமூகச் சூழல் இருக்கிறது. நாளை யாரோ ஒரு ஆண் நண்பருடன் பேசி
க்கொண்டிருக்கும்போது "நீ ஏன் அவருடன் பேசுகிறாய்" என்ற கேள்வியை அவன்
எழுப்புவதற்கான எல்லாச் சாத்தியங்களும் உள்ளது.


வீட்டுக்கு வீடு வாசப்படி. இதில் பெண் எந்த சமூகமாய் இருந்தால் என்ன? எந்த
நாடாய் இருந்தால் என்ன? இலக்கியம், எழுத்து என்று எழுதும் பெண்கள் வெற்றி பெறும் வரையில்
பிறர் பார்வையில் கேலியாய்தான் பார்க்கப்படுகிறாள். என் மகண் கண்ணிலும்,
இந்த எழுத்து, குழு, நண்பர்கள்( ஆண்) போன்றவை சிறிது சந்தேக கண் மற்றும் இது
எதற்கு என்றுதான் பார்க்கப்படுகிறது.
உஷா
------------------------------------------------------
From: sadayan
Date: Sat Jun 12, 2004 9:39 am
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2

கே: நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?

அன்பின் மதி...

நேர்காணலை தட்டச்சு செய்தீர்களா ? அல்லது வெட்டி ஒட்டினீர்களா ? காரணம்
முழு பேட்டியும் உலகத் தமிழ் வலைத் தளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே
வெளியானது. தவிர 'இரண்டாம் ஜாமங்களின் கதை' யும் உலகத் தமிழ்
வலைத்தளத்தில் தொடராக வெளி வந்து, பின்னர் காலச்சுவடு அத் தொடரை
பொத்தகமாக வெளியிட இருப்பதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

இது பொத்தகமாக வெளிவந்தால் நிச்சயம் சர்ச்சைக்குள்ளாகும்.ஆண்களே எழுதக்
கூச்சப்படும் சில வார்த்தைகளை தனது பொத்தகத்தில் தைரியமாக
கையாண்டுள்ளார்.(பெண் சாருநிவேதிதா) காலச்சுவடு தணிக்கை செய்து
வெளியிடப் போகிறதா தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்

சாபு
துபாய்
----------------------------------------------------------
From: swastik ads
Date: Sat Jun 12, 2004 10:45 am
Subject: Re: [Maraththadi] Re: An interview with Kavinjar Salma -3

வீட்டுக்கு வீடு வாசப்படி. இதில் பெண் எந்த சமூகமாய் இருந்தால் என்ன? எந்த
நாடாய் இருந்தால் என்ன? இலக்கியம், எழுத்து என்று எழுதும் பெண்கள் வெற்றி பெறும் வரையில்
பிறர் பார்வையில் கேலியாய்தான் பார்க்கப்படுகிறாள். என் மகண் கண்ணிலும்,
இந்த எழுத்து, குழு, நண்பர்கள்( ஆண்) போன்றவை சிறிது சந்தேக கண் மற்றும் இது
எதற்கு என்றுதான் பார்க்கப்படுகிறது.

உஷா


உஷா,

இதைப் படித்தவுடன் நிஜமாகவே உங்கள் மேல் அனுதாபம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. உங்கள் மேல்
அவர்களுக்கு உள்ள possessiveness-தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இயன்றால் அவர்களையும்
இதில் பங்கெடுக்க வைங்களேன்..
Suresh
----------------------------------------

From: Madhurabarathi
Date: Sat Jun 12, 2004 11:22 am
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2

கே: நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?

பெண்ணுரிமை மறுக்கப்படுவதற்குக் காரணம் இந்துமதம் அல்லது இசுலாம் என்று
இவ்வாறு சொல்வது இப்போது மிகவும் அறிவுஜீவித்தனமாகி விட்டது. ஆனால்
உண்மை என்னவென்றால் எங்கெல்லாம் ஆண் இருக்கின்றானோ, அவன் தன்னுடைய
மிகையான உடல்வலு, பொருளாதார வலு, அரசியல் வலு இவற்றை வைத்துப்
பெண்ணை அமுக்கிவிடுகிறான். அவன் கையில் மதநூல் இதற்கு ஒரு
கருவியாக்கப்படுகிறது. அந்த நோக்கத்துக்கேற்ப வேத விளக்கமான
சாத்திரங்கள் எழுதப்படுகின்றன. எனவேதான் பாரதி "பேய் அரசு செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று கூறினான்.

இந்த சல்மாவின் நேர்காணலில் கூட அவர் திருக்குர் ஆனைக் குறை
சொல்லவில்லை. அதில் பெண்களுக்குச் சாதகமாக இருப்பவற்றைப் பேசவிடாமல்
ஒரு ஆண் எழுத்தாளர் தடுத்தார் என்றுதான் சொல்லி இருக்கிறார்.

சகோதரி மதிக்கு ஒரு வேண்டுகோள். இங்கே நமது முஸ்லிம் சகோதரர்கள்
நிறைய இருக்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியானவற்றை இங்கே
இடவேண்டுவதில்லை. கட்டுரைகளின் சுட்டியை மட்டும் இட்டால் வேண்டுமென்பவர்கள்
அங்கே போய்ப் படித்துக் கொள்வார்களே.

இது எனது அன்பான வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம். என் கருத்தில்
ஒப்புமை இல்லாதவர்கள் தமது பக்கத்தைச் சொல்லலாம். நம்முடைய மிகப்பெரிய
பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம் காப்பதுதான்.

அன்புடன்
மதுரபாரதி
----------------------------------

From: "K.V.Raja"
Date: Sat Jun 12, 2004 11:26 am
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2

சகோதரி மதிக்கு ஒரு வேண்டுகோள். இங்கே நமது முஸ்லிம் சகோதரர்கள்
நிறைய இருக்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியானவற்றை இங்கே
இடவேண்டுவதில்லை. கட்டுரைகளின் சுட்டியை மட்டும் இட்டால் வேண்டுமென்பவர்கள்
அங்கே போய்ப் படித்துக் கொள்வார்களே.

அன்புள்ள மதுரபாரதி அண்ணா,

நான் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனாலும் சொல்ல வந்தது வேறு அர்த்தத்தில்
புரிந்துகொள்ளப்பட்டு என்னை தவறாக நினைக்க வைத்துவிடுமோ என்றே மௌனமாக இருந்தேன்.

என் மனதில் இருந்த கருத்தை மிகத் தெளிவாக சொன்னதற்கு நன்றி.

என்றும் அன்புடன்,
கேவிஆர்
------------------------------

From: "Abul Kalam Azad"
Date: Sat Jun 12, 2004 12:42 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2

நம்முடைய மிகப்பெரிய பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம்
காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி


பாரதிண்ணா,

நேத்து கவிஞர் சல்மாவோட பேட்டிய மதி போட்டதும் மேலோட்டமா
படிச்சிட்டேன். பதில் எழுதணும்னு தோணுச்சு, நீங்க மேல சொன்ன
கருத்துக்கு ஒப்ப அப்படியே விட்டுவிட்டேன். நமது பலவீனம்..சல்தா
ஹை..இல்லை..:)

சல்மாவின் குற்றச்சாட்டு:
தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடுகிறார்கள்

நான் விளங்கிக்கொண்டதும் பதிலும்:
இப்பொழுதெல்லாம் நபிகள் நாயகத்தின் பொன்பொழிகளை அனுப்புபவ
ர்கள் கூடவே இரண்டு வரிகளை மறக்காமல் அனுப்புகிறார்கள்.

அதாவது,
"எந்தப் பிரச்சனைக்கும் ஒரே ஒரு ஹதீசின் அடிப்படையில் தீர்வு காணக்
கூடாது. மார்க்க அறிஞர்களைக் கலந்து ஆலோசித்து அதன் அடிப்படையில்
தான் தீர்வு காணவேண்டும்"

சல்மா அவர்கள் சொன்னதுபோல் ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு
யாரேனும் பெண்ணுரிமையைத் தடுத்தார்களென்றால் அது தவறு.

தனிப்பட்ட ஆணோ பெண்ணோ சொல்வதைவிட சல்மா என்ன விளங்கிக்
கொண்டார் என்பதை அவர் சொல்லியிருக்கலாம். நாம் பேசும் விஷயத்தில்
முதலில் நமது நிலைபாடு என்ன.

பெண்ணுரிமையை இஸ்லாம் மறுக்கிறது என்று சல்மா நம்புகிறாரா அல்லது
அல்லது இஸ்லாமியப் போர்வையில் சிலர் ஆணாதிக்கத் தனமாக நடந்துகொ
ள்கிறார்கள் என்று சொகிறாரா என்பது சரியாகப் பிடிபடவில்லை.

படித்துவிட்டு எழுதுகிறேன் அண்ணா.

மௌனமாக இருக்காதே என்ற உங்கள் அறிவுரையை ஏற்கிறேன் :)

அன்புடன்
ஆசாத்

பி.கு.: நண்பர்களே! சல்மா சொல்வதைப் போல் பயணம் என்பதும் பேட்டி
என்பதும் இஸ்லாமியப் பெண்களுக்கு விலக்கப்பட்டதல்ல. என் மனைவி தனியா
கத்தான் பயணம் செய்து வருடாவருடம் இங்கு வந்து போகிறார்.

ராஜா எழுதித் தந்ததாகச் சொன்னேனல்லவா அந்த குவிஸ் நிகழ்ச்சியில்
வளர்ந்த மாணவிகள் என் முன்னே அமர்ந்து நேருக்கு நேர் வினாடி வினாவில்
பதில் சொன்னது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் முன்னிலையில்தான். அது
வும் மேடையில், ஐநூறு பார்வையாளர்களின் முன்னிலையில். இது பதிவும்
செய்யப்பட்டு சிடிக்களாக நேற்று வெளியிடப்பட்டும் உள்ளது. (இஸ்லாமிய
மார்க்க அடிப்படைக்கு சிறு மாற்றமாக இருந்தாலும் சவூதியில் சிடி
வெளியிடுவது முடியாது என்பதை அனைவரும் அறிவீர்கள்)
-------------------------------------

From: "Arul"
Date: Sat Jun 12, 2004 1:16 pm
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2

பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம்
காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி


அன்பின் மதுரபாரதி,

நாம் (தமிழர்கள்) ஒன்று மவுனம் காப்போம், இல்லை உணர்ச்சிவசப்பட்டு வசைப்பாடத்துவங்கிவிடுவோம், இதற்கு
இடைப்பட்ட நிலையான ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் பெரும்பாலும் ஏற்படாமல் போவதுதான் நம்
பலவீனம் என்று *நான்* நினைக்கிறேன்

அன்புடன்,
இர.அருள் குமரன்.
---------------------------

From: "mathygrps"
Date: Sat Jun 12, 2004 2:23 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2

--- In Maraththadi@yahoogroups.com, sadayan wrote:
அன்பின் மதி...

நேர்காணலை தட்டச்சு செய்தீர்களா ? அல்லது வெட்டி ஒட்டினீர்களா ? காரணம்
முழு பேட்டியும் உலகத் தமிழ் வலைத் தளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே
வெளியானது. தவிர 'இரண்டாம் ஜாமங்களின் கதை' யும் உலகத் தமிழ்
வலைத்தளத்தில் தொடராக வெளி வந்து, பின்னர் காலச்சுவடு அத் தொடரை
பொத்தகமாக வெளியிட இருப்பதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

இது பொத்தகமாக வெளிவந்தால் நிச்சயம் சர்ச்சைக்குள்ளாகும்.ஆண்களே எழுதக்
கூச்சப்படும் சில வார்த்தைகளை தனது பொத்தகத்தில் தைரியமாக
கையாண்டுள்ளார்.(பெண் சாருநிவேதிதா) காலச்சுவடு தணிக்கை செய்து
வெளியிடப் போகிறதா தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.

sadayan


அன்புள்ள சாபு ஐயா,

வணக்கம்!

நான் இந்த நேர்காணலைப் படித்தது தோழியர் கூட்டு வலைப்பதிவில். சந்தி
ரவதனா அங்கே இட்டிருந்தார். அவருக்கும் ஒரு மடல் அனுப்பி இருக்கிறேன். செவ்வி
யைப் படித்ததும் காலச் சுவட்டில் வந்ததோ என்று நினைத்தேன். செவ்வியின் முடிவில்
நன்றி சொல்வதற்காகக் கேட்டிருந்தேன். அவரிடம் இருந்து பதில் வரத் தாமதமானதால் சந்தி
ரவதனாவிற்கும் தோழியர் கூட்டுப் பதிவிற்கும் நன்றி சொல்லி இங்கே இட்டேன். சாபு
ஐயா நன்றி 'உலகத் தமிழ்' பற்றிய விவரம் சொன்னதற்கு.


*எனக்கு* சல்மா பற்றித் தெரிந்ததெல்லாம் இணையத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்ததே (அதுவும் உலகத் தமிழ் படித்து ஒரு வருடத்தி
ற்கு மேலாகிறது. :( ). இங்கே மரத்தடியில் சல்மாவின் கவிதைகள் சில பகி
ர்ந்துகொள்ளப் பட்டிருக்கின்றன. அத்தோடு அவருடைய கவிதைகளைப் பற்றி இங்கே வி
வாதித்தும் இருக்கிறோம். அதனால்தான் இங்கே இடுவது நண்பர்களுக்கு உதவியாக
இருக்கும் என்று இட்டேன்.

*என்¨னைப்* பொருத்தவரைக்கும் சல்மா என்ற படைப்பாளி பற்றி எதுவும் தெரியாமல்
இருந்தது. இப்போது கொஞ்சமேனும் தெரிந்துகொண்டிருக்கிறேன்.

சல்மா பஞ்சாயத்துத் தலைவர் என்று தெரியும். ஆனால், அந்த நிகழ்வைச் சுற்றிய
சம்பவங்கள் எதுவும் அறியாமல் இருந்தேன். பல விஷயங்களைத் தெளிவு படுத்திக்
கொள்ளக் கூடியதாக இருந்தது. அவருடைய கவிதைகளை மீள வாசிக்கவேண்டும் என்று
மனது அலைபாய்கிறது.

(வேண்டுகோள்: பிகேஎஸ் மற்றும் சல்மாவின் கவிதைத் தொகுப்பு கைவசம் இருக்கும்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவருடைய சில கவிதைகளை இங்கு
இடுங்களேன். பிகேஎஸ் - உங்களிடம் இந்தத் தொகுப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில்
எழுதுகிறேன். மனது ஆலாய்ப்பறக்கிறது ஐயா. :( )

எனக்கு தைரியமான பெண்களை மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில்
பிறந்து ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய ஒருவர் இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பது
மனதிற்கு உத்வேகமாக, சந்தோஷமாக இருக்கிறது. இவரைப் போல முன்னேறிய
பெண்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.

நீங்கள் இலங்கை சென்றிருந்தபோது சல்மாவும் வந்திருந்ததாகக் கூறியது நினைவிருக்கி
றது. அவருடன் நீங்கள் பேசிப் பழகி இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களைப் பகி
ர்ந்துகொள்வீர்களா சாபு ஐயா?

அன்புடன்,
மதி
------------------------------------------

From: "mathygrps"
Date: Sat Jun 12, 2004 2:48 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2

இது எனது அன்பான வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம். என் கருத்தில்
ஒப்புமை இல்லாதவர்கள் தமது பக்கத்தைச் சொல்லலாம். நம்முடைய மிகப்பெரிய
பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம் காப்பதுதான்.

அன்புடன்
மதுரபாரதி



அன்புள்ள மதுரபாரதி ஐயா,

வணக்கம்!

ஐயா உங்களின் கருத்தில் இருந்து சற்றே மாறுபடுகிறேன்.

*என்னை*ப் பொருத்தவரைக்கும் 'பெண்ணியம்', 'பெண்ணியவாதிகள்'
என்றெல்லாம் தனியாகச் சுட்டப்பட்டு விவாதிக்கப்படும்போதும், நான் பெண் எனக்கு சி
றப்புத் தகுதி என்றும் இன்னபிற விஷயங்கள் பேசும்ப்பொது வாய்மூடி கவனிக்கிறேன்.
வளர்ந்த நாடுகளில் இப்படிக் கோஷம் போட்டுப் பேசுவது ஏன் என்று எனக்குப் புரிவதே
இல்லை. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் மற்றைய நாடுகளைப் போல அல்லாது
மக்கள் அவரவர் விருப்பப் படி நடந்துகொள்ளும் சுதந்திரம் இருக்கிறது.

அதே நேரத்தில் நான் வித்தியாசமானவள் என்று சொல்லி, ஆடை அணிகலன், பழக்க
வழக்கங்களை - பட்டுப் புடவை கட்டினால் கூடாது, நகைகள் அணிந்தால் கூடாது,
வாசனைத் திரவியங்கள் அணிந்தால் கூடாது, சமையலைப் பற்றிப் பேசினால் பி
ற்போக்குவாதி என்றெல்ல்லம் மேலோட்டமாகக் கருதுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

(சம்பந்தா சம்பந்தமில்லாமல் முன்னுரை எழுதியாச்சு இனி விஷயத்துக்கு )

நீங்கள் சொன்னதுபோல இங்கே சல்மா மதத்தைப் பற்றி செவ்வி கொடுத்திருக்கவில்லை
என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய வாழ்க்கையை, அனுபவங்களை,
போராட்டங்களை எல்லாம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

மதரீதியாக சச்சரவு எழுப்புவது அவருடைய நோக்கம் இல்லை என்று நம்புகிறேன். சல்மா
தன்னுடைய வலிக்களை, நோவை, ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இப்படியும் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள அவருடைய செவ்வி உதவியாக இருக்கிறது.

நமது மக்கள் எப்போதுமே ஒன்று பேசாமல் இருப்பார்கள் அல்லது knee-jerk ரியாக்ஷன்
செய்வார்கள். நிறைய விஷயங்களில் அப்படித்தான். பல சமயங்களில் we take things
too personal. இதுபோல பாய்க்குக் கீழே தள்ளித் தள்ளி அது ஒரு குன்று போல
வளர்ந்துவிட்டது ஐயா.

நான் இந்தச் செவ்வியை இங்கே அனுப்பும்போது சல்மா என்ற படைப்பாளியைப் பற்றி
நண்பர்கள் அறிந்துகொள்வது நல்லது என்று அனுப்பினேன். இப்போது இன்னுமொரு
யோசனையும் எழுகிறது. இங்கே கற்றறிந்த, உணர்ச்சிவசப்படாத, நடுநிலமையான
(ஆணுக்கொரு வாதம் பெண்ணுக்கொரு வாதம் என்று சொல்லாத ஆசாத் பாய் இருக்கி
றார். சாபு ஐயா, ஆசீ·ப் இருக்கிறார்.

மதுரபாரதி ஐயா: இப்பேட்டியைப் படித்த பிறகு முன்பே பிடித்திருந்த கவிஞர் சல்மாவை
இன்னமும் அதிகமாகப் பிடித்திருக்கிறது.

விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு,
மதி

(பி.கு: இதனால் யாரேனும் மனம் நொந்தால் தயவு செய்து கூறுங்கள்.)
--------------------------------

From: "Abul Kalam Azad"
Date: Sat Jun 12, 2004 3:40 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2

wrote:
மதரீதியாக சச்சரவு எழுப்புவது அவருடைய நோக்கம் இல்லை என்று
நம்புகிறேன்.

இனிய மதி,


மதரீதியாக பிரச்சனைகளை எழுப்புவது அவரது நோக்கம் அல்ல. ஆனால்,
இந்த செவ்வியின் பல பகுதிகளில் பேசப்படுவது என்ன. தலாக் பேசப்
படவில்லையா?

முத்தலாக் என்ற வார்த்தையே தவறு என்று சில அறிஞர்களும் என்னைப்
போன்றவர்களும் சொல்வதை இங்கு நான் ஏற்கெனவே பகிர்ந்துள்ளேன்.

சல்மா அவர்களின் செவ்வியிலும் இந்த தலாக் பிரச்சனையைச் சொல்கிறார்.
அது சரியாக விளக்கப்படவில்லையென்றால் சர்ச்சைக்குறியதாகும்.

இங்கே கற்றறிந்த, உணர்ச்சிவசப்படாத, நடுநிலமையான
(ஆணுக்கொரு வாதம் பெண்ணுக்கொரு வாதம் என்று சொல்லாத *ஆசாத்
பாய்* இருக்கிறார். சாபு ஐயா, ஆசீ·ப் இருக்கிறார்.

அதெல்லாம் சரிங்க, ஆசாத் அண்ணன் உங்களுக்கு எப்ப ஆசாத் பாய் ஆனாரு :)

அன்புடன்
ஆசாத்

பி.கு.:
ரெண்டு நாள்..ரெண்டே நாள், சல்மா லாத்தா பேட்டில இருக்க மார்க்க சம்
மந்தப்பட்ட விஷயங்களுக்கு பதிலோட வரேன்.
----------------------

From: "mathygrps"
Date: Sat Jun 12, 2004 3:49 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2

அன்புள்ள ஆசாத் *அண்ணனுக்கு*,

அதெல்லாம் சரிங்க, ஆசாத் அண்ணன் உங்களுக்கு எப்ப ஆசாத் பாய் ஆனாரு :)

முந்தியும் சில சமயம் பாய்னும் சில சமயம் அண்ணன்னும் விளித்திருக்கிறேனே?

(கேவியார் இதுக்கும் ஒன்லைனர் போட்டிராதீங்க. தாங்காது! :) )

wrote:
மதரீதியாக சச்சரவு எழுப்புவது அவருடைய நோக்கம் இல்லை என்று
நம்புகிறேன்.

மதரீதியாக பிரச்சனைகளை எழுப்புவது அவரது நோக்கம் அல்ல. ஆனால்,
இந்த செவ்வியின் பல பகுதிகளில் பேசப்படுவது என்ன. தலாக் பேசப்
படவில்லையா?


எனக்குப் புரியலை. என்னால பிரிச்சுப் பிரிச்சுப் பார்க்க முடியலை. என்னைப்
பொருத்தவரைக்கும் சல்மா பற்றிய படைப்பாளியை அறிய இந்தச் செவ்வி உதவி இருக்கி
றது. அவ்வளவுதான். அன்னம் மாதிரி எனக்குத் தேவையான விஷயங்கள் நிறைய இந்தச்
செவ்வியில் இருக்கு. அதை எடுத்துக்கிட்டேன்.

நான் இங்கே இந்தச் செவ்வியைப் போட்டது கூடாது என்று நினைக்கிறீங்களா
ஆசாத் அண்ணே?

பி.கு.:
ரெண்டு நாள்..ரெண்டே நாள், சல்மா லாத்தா பேட்டில இருக்க மார்க்க சம்
மந்தப்பட்ட விஷயங்களுக்கு பதிலோட வரேன்.
வாங்க வாங்க. காத்துக்கிட்டு இருக்கேன்.

அன்புடன்,
மதி

----------------------------------------------------------
From: "Abul Kalam Azad"
Date: Sat Jun 12, 2004 4:01 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2

wrote:
நான் இங்கே இந்தச் செவ்வியைப் போட்டது கூடாது என்று நினைக்கிறீங்களா
ஆசாத் அண்ணே?

இனிய மதி


என்னைப் பொறுத்தவரையில் அந்த செவ்வியை நீங்கள் இங்கு போட்டது சரி தவறு
என்பதைவிட அவர்கள் சொல்லியிருக்கும் சில கருத்துகளுக்கு விளக்கம் சொல்ல
வாய்ப்பு கிடைத்ததே என்பதால் மகிழ்கிறேன்.

விளக்கமாக பிறகு எழுதுகிறேனே...

அன்புடன்
அண்ணன்
ஆசாத்
------------------------------------------

தொடர்ச்சி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite