காதலுக்காக, தூக்குப் போட்டு, பூச்சி மருந்து குடித்து… என்று செத்தவர்கள் பலர்.
Merry Christmas படத்தில் ஒரு சம்பாசணை வரும்,
“எனக்கெது கஷ்டம் என்று தெரயேல்லை,
லவ் பண்ணினவ செத்துப் போவதா அல்லது லவ் செத்துப் போவதா‘ கஷ்டம் என்று தெரயேல்லை“ என்று.
லவ் செத்துப் போவது கஷ்டம்தான், கவலைதான். அதுவும் அந்தப் பருவத்தில், வயதில் காதல் தோல்வி என்பது தாங்க முடியாதது தான்.
அதற்காக லவ் பண்ணினவ செத்துப் போவதை அதனுடன் ஒப்பிட முடியுமா?
மரணத்தை அருகிருத்திப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதற்கு ஒப்புவமையாக எந்தக் கஸ்டமோ, கவலையோ இல்லையென்பது.