எனது பொறுப்பாளருக்கு அறிவித்தாக வேண்டும். கைத்தோலைபேசியை ஒருவாறு வெளியில் எடுத்து விட்டுப் பார்த்தேன். என் பக்கத்தில் பொலிஸ்கார் ஒன்றும் என்னோடு சேர்ந்து ஊர்ந்து கொண்டிருந்தது.இருக்கிற ரென்சனுக்குள் இது வேறு.
கைத்தொலைபேசியில் பேசப் போய் தண்டம் கட்ட வேண்டி வரலாம். என்ன செய்வது என்று யோசிக்கையில் இன்னும் ஐந்து நிமிடங்கள் ஓடிவிட்டன.
எப்படியும் அறிவித்தாக வேண்டும். என்ன செய்யலாமென யோசித்து.. கைத்தொலைபேசியை பக்கத்து இருக்கையில் வைத்து ஒரு குறுஞ்செய்தி எழுதினேன். எழுதும் போது பயமாக இருந்தது. பொலிஸ் காணலாம். நகரும் போது முன் காருடன் இடிபடலாம். பின் கார் வந்து இடிக்கலாம். இருந்தும் `traffic இல் நிற்கிறேன். விரைவில் வந்து விடுவேன்´ என்று எழுதி பொறுப்பாளருக்கும், சக வேலைத்தோழியருக்கும் ஒருவாறு அனுப்பினேன்.
அதன்பின் பாதி ரென்சன் குறைந்தது போன்ற உணர்வு.
என்ன நடந்திருக்கும். ஏனிந்த தாமதம் எதுவும் புரியவில்லை. அப்படியொரு நிலை முன்பு ஒரு போதும் அந்த வீதியில் வந்ததும் இல்லை. ஏதாவது பாரிய விபத்தாக இருக்குமோ று பலதையும் மனம் சிந்தித்தது. பொலிஸ் கார்கள் பின்னும், முன்னும், பக்க வாட்டிலும் என்று சேர்ந்து ஊர்ந்தன.
50 நிமிடங்கள் கழித்து வேலைத்தளத்தை அடைந்த போது, என் தவறு என்று எதுவும் இல்லையெனினும் மனதுள் ஒரு குற்றஉணர்வு. ஒரு பதட்டம். அவசரமாக உள் நுழைந்தேன்.
ஆச்சரியமாக இருந்தது. ஒருவருமே அங்கில்லை. என்ன, ஏது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒவ்வொருவராய் இன்னும் அரைமணிநேரம், ஒருமணி நேரம் என்று கழித்து வந்தார்கள்.
அதன் பின்தான் பொறுப்பாளர் வந்தார். அவரும் இடையில் எங்கோ மாட்டுப்பட்டிருந்தாராம்.
குறிப்பிட்ட ஒரு வீதி ஒரு பெரிய திருத்தத்துக்காக மூடப்பட்டு விட்டதாம். அதனால் மற்றைய வீதிகள் எல்லாமே நிரம்பி வழிகின்றனவாம். பொறுப்பாளர் சொன்ன போதுதான் அந்தத் திருத்தம் பற்றியும், பாதையடைப்பு பற்றியும் செய்தித்தாளில் வாசித்தது ஞாபகத்தில் வந்தது. ஆனாலும் அது இத்தகைய பாதிப்பைத் தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
இன்னும் இரண்டு கிழமைக்கு இதே பல்லவிதான்.
எப்படியும் அறிவித்தாக வேண்டும். என்ன செய்யலாமென யோசித்து.. கைத்தொலைபேசியை பக்கத்து இருக்கையில் வைத்து ஒரு குறுஞ்செய்தி எழுதினேன். எழுதும் போது பயமாக இருந்தது. பொலிஸ் காணலாம். நகரும் போது முன் காருடன் இடிபடலாம். பின் கார் வந்து இடிக்கலாம். இருந்தும் `traffic இல் நிற்கிறேன். விரைவில் வந்து விடுவேன்´ என்று எழுதி பொறுப்பாளருக்கும், சக வேலைத்தோழியருக்கும் ஒருவாறு அனுப்பினேன்.
அதன்பின் பாதி ரென்சன் குறைந்தது போன்ற உணர்வு.
என்ன நடந்திருக்கும். ஏனிந்த தாமதம் எதுவும் புரியவில்லை. அப்படியொரு நிலை முன்பு ஒரு போதும் அந்த வீதியில் வந்ததும் இல்லை. ஏதாவது பாரிய விபத்தாக இருக்குமோ று பலதையும் மனம் சிந்தித்தது. பொலிஸ் கார்கள் பின்னும், முன்னும், பக்க வாட்டிலும் என்று சேர்ந்து ஊர்ந்தன.
50 நிமிடங்கள் கழித்து வேலைத்தளத்தை அடைந்த போது, என் தவறு என்று எதுவும் இல்லையெனினும் மனதுள் ஒரு குற்றஉணர்வு. ஒரு பதட்டம். அவசரமாக உள் நுழைந்தேன்.
ஆச்சரியமாக இருந்தது. ஒருவருமே அங்கில்லை. என்ன, ஏது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒவ்வொருவராய் இன்னும் அரைமணிநேரம், ஒருமணி நேரம் என்று கழித்து வந்தார்கள்.
அதன் பின்தான் பொறுப்பாளர் வந்தார். அவரும் இடையில் எங்கோ மாட்டுப்பட்டிருந்தாராம்.
குறிப்பிட்ட ஒரு வீதி ஒரு பெரிய திருத்தத்துக்காக மூடப்பட்டு விட்டதாம். அதனால் மற்றைய வீதிகள் எல்லாமே நிரம்பி வழிகின்றனவாம். பொறுப்பாளர் சொன்ன போதுதான் அந்தத் திருத்தம் பற்றியும், பாதையடைப்பு பற்றியும் செய்தித்தாளில் வாசித்தது ஞாபகத்தில் வந்தது. ஆனாலும் அது இத்தகைய பாதிப்பைத் தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
இன்னும் இரண்டு கிழமைக்கு இதே பல்லவிதான்.