Wednesday, May 31, 2006

mathumitha

வலைப்பதிவர் பெயர்: சந்திரவதனா

வலைப்பூ பெயர்: மனஓசை
சுட்டி(url) : http://manaosai.blogspot.com/

வலைப்பூ பெயர்: ஈழகானங்கள்
சுட்டி(url) : http://padalkal.blogspot.com/

வலைப்பூ பெயர்: ஈழத்துக் கலைஞர்கள்
சுட்டி(url) : http://kalaignarkal.blogspot.com/

வலைப்பூ பெயர்: காதல்
சுட்டி(url) : http://kathal.blogspot.com/

வலைப்பூ பெயர்: குழந்தைகள்
சுட்டி(url) : http://kulanthaikal.blogspot.com/

வலைப்பூ பெயர்: சாதனை பெண்கள்
சுட்டி(url) : http://vippenn.blogspot.com/

வலைப்பூ பெயர்: சினிமாப் பாடல்கள்
சுட்டி(url) : http://cinemapadalkal.blogspot.com/

வலைப்பூ பெயர்: சிறுகதைகள்
சுட்டி(url) : http://chandravathanaa.blogspot.com/

வலைப்பூ பெயர்: தாயககீதங்கள்
சுட்டி(url) : http://thayagageetham.blogspot.com/

வலைப்பூ பெயர்: தீட்சண்யம்
சுட்டி(url) : http://theedchanyam.blogspot.com/

வலைப்பூ பெயர்: துணுக்குச் செய்திகள்
சுட்டி(url) : http://seithikal.blogspot.com/

வலைப்பூ பெயர்: படித்தவை
சுட்டி(url) : http://padiththavai.blogspot.com/

வலைப்பூ பெயர்: புகைப்படம்
சுட்டி(url) : http://pukaippadam.blogspot.com/

வலைப்பூ பெயர்: புத்தகம்
சுட்டி(url) : http://thamilbooks.blogspot.com/

வலைப்பூ பெயர்: புனர்வாழ்வு
சுட்டி(url) : http://tronews.blogspot.com/

வலைப்பூ பெயர் : பெண்கள்
சுட்டி(url) : http://pennkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : பெட்டகம்
சுட்டி(url) : http://sammlung.blogspot.com/

வலைப்பூ பெயர்: மகளிர்
சுட்டி(url) : http://mahalir.blogspot.com/

வலைப்பூ பெயர்: மருத்துவம்
சுட்டி(url) : http://maruththuvam.blogspot.com/

வலைப்பூ பெயர்: மாவீரர்கள்
சுட்டி(url) : http://maaveerarkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : Tagesthemen
சுட்டி(url) : http://thumi.blogspot.com/

ஊர்: ஸ்வெபிஸ்ஹால்

நாடு: ஜேர்மனி

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: திரு மாலன் அவர்கள்.
அட ஒரு வருசம் ஓடி விட்டதா?
இந்த ஒரு வருடத்துக்குள்தான் வலைப்பதிவுகளில் எத்தனை மாற்றம்! முதல் முதல் கடந்த வருடம் ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று மாலன் அவர்கள் Blog ஐ அறிமுகப் படுத்திய போது - இது எப்படிச் சாத்தியமாகும் என்று ஆச்சரியப் பட்டேன்.

மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.

சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. Blog ஐ தயாரிப்பதற்கான சில வழி முறைகளைச் சொல்லித் தந்த சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.

இந்த வலைப்பூ என்பது என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு முக்கிய காரணம். யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரம்தான். எதை விரும்பினாலும் அதை நான் அங்கே பதிக்க முடியும். அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது.

அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலை பதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் வலைப்பதிவுகளின் தொகுப்பு உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது. ஆனால் இன்றோ எமக்குத் தெரியும் படியாக நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தமிழில் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் வாசிக்க முடியாத அளவுக்கு அவைகளில் எழுதிக் குவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

அன்று வலை பதியத் தொடங்கிய அத்தனை பேரும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலபேர் இடை நடுவில் ஏதேதோ காரணங்களினால் தமது பதிவுகளைத் தூங்க விட்டு விட்டார்கள். அதே நேரத்தில் இன்றும் பலர் ஆரோக்கியமான சுவாரஸ்யமான பதிவுகளைப் புதிது புதிதாகப் பதிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தொடங்கிய காலத்துக்கும், இன்றைய காலத்துக்கும் இடைப்பட்டதான காலப் பகுதியில் யார் யார் எங்கெங்கே புதிய விடயங்களைப் பதிந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பூவாகப் போய்ப் பார்த்துத்தான் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிக்கல் இருந்தது.

அந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யும் விதமாக காசி தயாரித்த தமிழ்மணம் மிகவும் பயனுள்ள தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்ற ஒரு பதிவு.

இந்த நேரத்தில் காசியை மனந்திறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது தமிழ்மணம். காசிக்கு மீண்டும் தமிழ்வலைப்பதிவாளர்கள் அத்தனை பேர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இனி முடியுமான அளவுக்கு வலைப்பூக்கள் பக்கம் சென்று வருகிறேன்.
நட்புடன்சந்திரவதனா

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 27.7.2003

இது எத்தனையாவது பதிவு: மனஓசையில் 418வது.
எல்லாவற்றையும் சேர்த்தால் 1500க்கு மேல்

இப்பதிவின் சுட்டி(url): http://manaosai.blogspot.com/2003_07_27_manaosai_archive.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரத்துடன், எதை விரும்பினாலும் அதை என்னால் அங்கே பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது.

சந்தித்த அனுபவங்கள்:
வலைப்பூக்களின் அறிமுகம் உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒரு சமாச்சாரமாகவே இருந்தது. பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வர முடிந்தது. சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது.

உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து அறிந்து கொள்ள முடிந்த திருப்தி ஏற்பட்டது.

பெற்ற நண்பர்கள்: முகம் தெரியாவிட்டாலும் மகிழ்வோடு பழகக் கூடிய பலர்.

கற்றவை: கைம்மண்ணளவு

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: தாராளமான சுதந்திரம்

இனி செய்ய நினைப்பவை:

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பருத்தித்துறையில் ஆத்தியடி என் பிறப்பிடம்.தியாகராஜா சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் நான் இரண்டாவது. பெண்களுள் மூத்தவள். கற்றது வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில்.

கணிதமும் கல்வியும் என்னோடு நன்றாகவே இசைந்திருந்தாலும் காதலும், கல்யாணமும் அந்த வயதில் இன்னும் இசைவாக இருந்தன. அதன் சின்னமாய் என் சந்தோசங்களாய் திலீபன், தீபா, துமிலன் என மூவர். அவர்களிடமிருந்து அதி அற்புத பரிசுகளாய் சிந்துவும், நதியும் என் பேத்திகள்.

என் பெற்றோர்கள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. கோபங்களையும் குமுறல்களையும் மட்டுமல்ல என்னைச் சுற்றியுள்ள உண்மைகளையும் எனது எண்ணங்களையும் கூட எழுத்தால் கூறுவது எனக்கு மிகுந்த வசதியாக இருக்கிறது. அநியாயங்களையும் அக்கிரமங்களையும் மென்று விழுங்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட எழுத்து உதவுகிறது.

தஞ்சம் என்று வந்த போது என்னைத் தாங்கிய நான் 20 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற யேர்மனியின் ஸ்வெபிஸ்ஹால் நகரையும் அங்கு வாழ் மக்களையும் எனது தாயகத்துக்கு அடுத்த படியாக நேசிக்கிறேன்.

என்னிடம் மனிதநேயமும் மனதில் பாசமும் நிறையவே உண்டு. கலைகளில் ஆர்வமும் கலைஞர்களில் மதிப்பும் உண்டு. மண்ணுக்காய் தம் இன்னுயிரை ஈந்த அந்த மான மறவர்களை மனதாரப் பூசிக்கிறேன். அநீதி கண்டால் எந்தளவுக்குக் கொதித்துப் போகிறேனோ அதையும் விட அதிகமாக அன்பு எந்த வடிவில் கிடைத்தாலும் அடிமையாகிப் போகிறேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
யாருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்.

Sunday, May 28, 2006

Please don't ban the LTTE from EU countries


I have signed an online petition, Please don't ban the LTTE from EU countries.

You may wish to support this cause by clicking on the link below and following the instructions.

http://www.gopetition.com/online/8663.html

Thanks

12 நாடுகளில் "உரிமைக்குரல்" ஒன்று கூடல்


12 நாடுகளில் உலகை உலுக்கும் "உரிமைக்குரல்" ஒன்று கூடல்
[ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2006, 17:26 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழத் தமிழர் தாயகத்தின் உரிமைக் குரலை வலியுறுத்தி அனைத்து புலம்பெயர் வாழ் நாடுகளில் உரிமைக்குரலுக்கான ஒன்று கூடல் நாளை 29 ஆம் நாள் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து, கனடா, இத்தாலி, பின்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவீடன், சுவிஸ், நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே, ஜேர்மனி ஆகிய 12 நாடுகளில் இந்த உரிமை முழக்கப் போர் நடைபெற உள்ளது.

- தமிழீழ மக்களின் தேசியம்-தாயகம்-சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்
- தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை தடை விதித்த நாடுகள் அகற்ற வேண்டும்

- உயர் பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் பொதுமக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இரானுவம் அப்பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்

- தமிழீழக் கடற்பரப்பில் நடைமுறையில் உள்ள மீன்பிடித் தடை முற்றாக நீக்கப்பட வேண்டும்

- இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் வரை தமிழ் அகதிகள் இல்ங்கைத் தீவுக்கு திருப்பி அனுப்பப்படுவது முற்றாக நிறுத்தப்பட வேண்டும்

- தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும்


ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி

அனைத்துலகத்தின் மனக் கதவின் மேல் தமிழரின் கரங்களைத் தட்டிட-

தமிழர் தன்னாட்சியுடன் வாழ துணை செய் அல்லது பிரிந்து போவதை அங்கீகரி என உரிமைக் குரல் எழுப்பிட-

குருதியில் குளிர்ப்பது தமிழரின் விதியா? உலகமே இன்றும் மௌனமே பதிலா? என்ற கேள்விகளோடு


உரிமைக் குரல்கள் ஓங்கிட

உலகம் யாவும் திரும்பிட

தடைகள் யாவும் உடைந்திட

தமிழர் தாழ்வு திறந்திட


புலம்பெயர் வாழ் தமிழர்களே!

உங்கள் நாட்டு உரிமைக்குரலுக்கான ஒன்று கூடலில் இணையுங்கள்!

ஒருமித்த குரலுடன் சர்வதேசத்தின் மனச்சாட்சியின் முன் நம் நியாயங்களை முன் வைக்க ஒன்று கூடுங்கள்!

இதுவே நாம் பங்கேற்கும் இறுதிப் போராய்- பேரணியாய்- இனி விடுதலைப் பேரணியாய்- புனித விதை குழிகளில் விதைக்கப்பட்ட நம் புனித உறவுகளின் கனவுகளை வென்றெடுக்கின்ற களமாய் ஒன்று கூடுங்கள்!

மேலதிக விவரங்களுக்கு: தமிழ்நாதம் இணையத்தளம்

Quelle - Puthinam

Saturday, May 27, 2006

பேரன் பேர்த்தி - குறும்படம்


- மூனா -

தாத்தாவுக்குத் தன் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆசை. பக்கத்து வீட்டுச் சிறுமி தன்னுடன் தமிழ் கதைக்கும் போது அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி தனது பேரப் பிள்ளைகள் பிரெஞ் கதைக்கும் போது அவரிடம் காணாமல் போய்விடுகிறது. அவரது பேரன், பேத்திக்கு தமிழ் தெரியாதது இறுதியில் அவருக்கு வினையாக முடிந்து விடுகிறது. பராவின் பேரன் பேர்த்தி குறும்படத்தின் கதை இதுதான்.

சொல்ல வந்ததை பரா திருப்தியாகச் சொல்லி விட்டாரா என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.

பிள்ளைகள் விளையாடுகிறார்கள். தாத்தா வீட்டுக்கு வருகிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள். தாத்தா பார்க்கிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள் தாத்தா பாடுகிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள தாத்தா யோசிக்கிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள் தாத்தா குளிக்கிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள்......
இப்படிப் படம் போய்க் கொண்டிருக்கிறது.

புலம்பெயர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லித் தர வேண்டும் என்று பரா தனது குறும்படத்துக்கு எடுத்துக் கொண்ட கருத்து வலுவானது. அதை இன்னும் வலுவாகத் தந்திருக்கலாம். சில காட்சிகளை நீட்டித் தராமல் அழுத்தமான விசயங்களைச் சொல்லியிருக்கலாம்.

தகப்பனும் மகனும் உரையாடுவது, ஏதோ முன்பின் தெரியாதவர்கள் உரையாடுவதுபோல் அன்னியப்பட்டிருக்கின்றது. மூத்த கலைஞர் ரகுநாதன் நடிப்பு அபாரம். சிறுவர்கள் நடிப்பில் மிளிர்கிறார்கள். ஆனால் அம்மாவும் அப்பாவும் நடிப்பில் அந்தோ பரிதாபம். இறுதிக்காட்சியில் சிறுவர்களின் கண்ணீரைப் பார்க்கும் போது நெஞ்சில் ஒரு நெருடல். அதேநேரம் அப்பாவும், அம்மாவும் வந்து அழும்போது அவர்களுக்காக நாம் அழவேண்டும் போல் இருந்தது. பிள்ளைகளுக்கு அழுதழுது தந்தை தமிழ் வசனங்களைச் சொல்லிக் கொடுப்பது, கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு.. பாசமலர் காலத்துப் பாணி.

பரா காட்சிகளை இன்னும் அழகாகச் செதுக்கியிருந்தால் அற்புதமான குறும்படம் கிடைத்திருக்கும். ஆனாலும் பராவின் இந்த முயற்சி வீண் போகவில்லை. பராவின் பேரன் பேத்தியைப் பார்த்த பின்னர் குறும்படங்கள் நிறைய வரும் நிறைவைத் தரும் என்ற நம்பிக்கை வருகிறது.

பேரன் பேர்த்தி குறும்படத்தைப் பார்க்க

-மூனா
26.5.2006

Friday, May 26, 2006

மதுமிதாவுக்காக

T

வலைப்பதிவர் பெயர்: சந்திரவதனா

வலைப்பூ பெயர் : மனஓசை
சுட்டி(url) : http://manaosai.blogspot.com/

வலைப்பூ பெயர் : ஈழகானங்கள்
சுட்டி(url) : http://padalkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : ஈழத்துக் கலைஞர்கள்
சுட்டி(url) : http://kalaignarkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : காதல்
சுட்டி(url) : http://kathal.blogspot.com/

வலைப்பூ பெயர் : குழந்தைகள்
சுட்டி(url) : http://kulanthaikal.blogspot.com/

வலைப்பூ பெயர் : சாதனை பெண்கள்
சுட்டி(url) : http://vippenn.blogspot.com/

வலைப்பூ பெயர் : சினிமாப் பாடல்கள்
சுட்டி(url) : http://cinemapadalkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : சிறுகதைகள்
சுட்டி(url) : http://chandravathanaa.blogspot.com/

வலைப்பூ பெயர் : தாயககீதங்கள்
சுட்டி(url) : http://thayagageetham.blogspot.com/

வலைப்பூ பெயர் : தீட்சண்யம்
சுட்டி(url) : http://theedchanyam.blogspot.com/

வலைப்பூ பெயர் : துணுக்குச் செய்திகள்
சுட்டி(url) : http://seithikal.blogspot.com/

வலைப்பூ பெயர் : படித்தவை
சுட்டி(url) : http://padiththavai.blogspot.com/

வலைப்பூ பெயர் : புகைப்படம்
சுட்டி(url) : http://pukaippadam.blogspot.com/

வலைப்பூ பெயர் : புத்தகம்
சுட்டி(url) : http://thamilbooks.blogspot.com/

வலைப்பூ பெயர் : புனர்வாழ்வு
சுட்டி(url) : http://tronews.blogspot.com/

வலைப்பூ பெயர் : பெண்கள்
சுட்டி(url) : http://pennkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : பெட்டகம்
சுட்டி(url) : http://sammlung.blogspot.com/

வலைப்பூ பெயர் : மகளிர்
சுட்டி(url) : http://mahalir.blogspot.com/

வலைப்பூ பெயர் : மருத்துவம்
சுட்டி(url) : http://maruththuvam.blogspot.com/

வலைப்பூ பெயர் : மாவீரர்கள்
சுட்டி(url) : http://maaveerarkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : Tagesthemen
சுட்டி(url) : http://thumi.blogspot.com/

ஊர்: ஸ்வெபிஸ்ஹால்

நாடு: ஜேர்மனி

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
திரு மாலன் அவர்கள் 2003 ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று Blog ஐ அறிமுகப் படுத்தினார். அப்போது இது எப்படி சாத்தியமாகுமென ஆச்சரியப் பட்டேன்.
மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது.

எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த "நாகரீகம்" என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 27.7.2003

இது எத்தனையாவது பதிவு: மனஓசையில் 418வது.
எல்லாவற்றையும் சேர்த்தால் 1500க்கு மேல்


இப்பதிவின் சுட்டி(url): http://manaosai.blogspot.com/2003_07_27_manaosai_archive.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரத்துடன், எதை விரும்பினாலும் அதை என்னால் அங்கே பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது.

சந்தித்த அனுபவங்கள்:
வலைப்பூக்களின் அறிமுகம் உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒரு சமாச்சாரமாகவே இருந்தது. பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வர முடிந்தது. சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது.

உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து அறிந்து கொள்ள முடிந்த திருப்தி ஏற்பட்டது.

பெற்ற நண்பர்கள்: முகம் தெரியாவிட்டாலும் மகிழ்வோடு பழகக் கூடிய பலர்.

கற்றவை: கைம்மண்ணளவு

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: தாராளமான சுதந்திரம்

இனி செய்ய நினைப்பவை:

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பருத்தித்துறையில் ஆத்தியடி என் பிறப்பிடம்.தியாகராஜா சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் நான் இரண்டாவது. பெண்களுள் மூத்தவள். கற்றது வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில்.

கணிதமும் கல்வியும் என்னோடு நன்றாகவே இசைந்திருந்தாலும் காதலும், கல்யாணமும் அந்த வயதில் இன்னும் இசைவாக இருந்தன. அதன் சின்னமாய் என் சந்தோசங்களாய் திலீபன், தீபா, துமிலன் என மூவர். அவர்களிடமிருந்து அதி அற்புத பரிசுகளாய் சிந்துவும், நதியும் என் பேத்திகள்.

என் பெற்றோர்கள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. கோபங்களையும் குமுறல்களையும் மட்டுமல்ல என்னைச் சுற்றியுள்ள உண்மைகளையும் எனது எண்ணங்களையும் கூட எழுத்தால் கூறுவது எனக்கு மிகுந்த வசதியாக இருக்கிறது. அநியாயங்களையும் அக்கிரமங்களையும் மென்று விழுங்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட எழுத்து உதவுகிறது.

தஞ்சம் என்று வந்த போது என்னைத் தாங்கிய நான் 20 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற யேர்மனியின் ஸ்வெபிஸ்ஹால் நகரையும் அங்கு வாழ் மக்களையும் எனது தாயகத்துக்கு அடுத்த படியாக நேசிக்கிறேன்.

என்னிடம் மனிதநேயமும் மனதில் பாசமும் நிறையவே உண்டு. கலைகளில் ஆர்வமும் கலைஞர்களில் மதிப்பும் உண்டு. மண்ணுக்காய் தம் இன்னுயிரை ஈந்த அந்த மான மறவர்களை மனதாரப் பூசிக்கிறேன். அநீதி கண்டால் எந்தளவுக்குக் கொதித்துப் போகிறேனோ அதையும் விட அதிகமாக அன்பு எந்த வடிவில் கிடைத்தாலும் அடிமையாகிப் போகிறேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
யாருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்.

Thursday, May 18, 2006

மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..?


மரணம் என்ற சொல்லே மரித்து விட வேண்டுமென்றுதான் மனித மனம் ஆசைப் படும். மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..? மரணிப்பவர் எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுதலை பெற்று விடுவார். ஆனால் அவரின் பிரிய உறவுகள் அப்போதுதான் துயரின் முழுவடிவத்தையும் முழுமையாகப் பரிசிப்பார்கள். துயரிலே மூழ்கி எழுவார்கள்.

ஆனாலும் மூக்கைச் சிந்திச் சீறி எறிகையிலும் ஆசைகளை மட்டும் எறிய மறந்து விடுவார்கள். வாழ்க்கை என்பது ஒரு மாயச்சுடர். சொல்லாமல் கொள்ளாமல் அந்த மாயச்சுடர் அணைந்து போய் விடும் என்று தெரிந்தும் ஆசை என்னும் மாயவலையில் வீழ்ந்து வாழும் காலத்தைச் சிக்கலாக்கி விடுவதுதான் மனித மனங்களின் இயல்பாகி விட்டது.

ஏன் இந்த அர்த்தமற்ற ஆசைகள்...!
ஆசைகள் ஆசைகளாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அதுவே பேராசையாய், பேரவாவாய், வெறியாய், பொறாமைத் தீயாய், ஏமாற்றமாய், துரோகமாய்... என்று நீண்டு, தம்மையும் அழித்து பிறரையும் அழித்து...!

ஒரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்.
அள்ளி வைச்ச ஆசையெல்லாம் கொள்ளி வைச்சால் போச்சு
தூங்கி விட்டால் ஓடி விடும் வாங்கி விட்ட மூச்சு...

(பாடல் - ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன்......
படம் - தீர்ப்பு, பாடியவர்-எம்.எஸ்.விஸ்வநாதன்.)


கொள்ளி வைக்கும் போது கூட வர எதுவுமே இல்லை. இருந்தும் ஏனிந்த ஆசைகள் மனதுக்கு..?

இன்னொரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்.
மூங்கிலிலே முத்துப்பல்லக்கு அதில் ஏறிச் செல்லச் சொத்து எதற்கு
கொள்ளியிட்டால் வேகும் எலும்பு அதில் கொண்டு செல்ல என்ன இருக்கு...

(பாடல் - குருடான கவிஞனுக்கு..... படம் - நெஞ்சில் ஒரு ராகம்.
பாடியவர் - ரி.எம்.சௌந்தர்ராயன்-சசிரேகா.)

மரணத்தைக் கண்ட பின்னும் மனங்கள் திருந்த மறுப்பதேன்...?
ஆசை.. ஆசை.. ஆசையில் என்னும் தீயில் வெந்து தணலாகி நீறாகும் போதும் நீறாகாத ஆசைகள்.

பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம். போகும் போது என்ன கொண்டு போகப் போகிறோம்.

ஊசிமுனை கூட வருமா உன் கூட
உன் கணக்கைப் பார்க்கிறப்போ
சில்லறையா மிஞ்சும், வெறும் கல்லறைதான் மிஞ்சும்...
(பாடல் - ஆடும் வரை ஆட்டம். படம் - வீரப்பதக்கம்.
பாடியவர் - மலேசியா வாசுதேவன்.)


இருந்தும் நான், நீ, எனது, உனது... என்று அடித்துப் பிடித்துச் சண்டை.
வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போன்றது. ஊதிவிட்டால் நீர்க்குமிழி போன்ற வாழ்க்கை உடைந்து போய் விடும் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத படி ஆசைகள் அறிவுக் கண்ணை மறைத்து விடுகின்றன.

காயமிது பொய்யடா காற்றடைத்த பையடா
நீயிருக்கும் பூமியே நீர்க்குமிழிதானடா....
......குமிழிக்குள் குத்து வெட்டு கத்திச் சண்டை ஏனடா....
(பாடல் - ஓட்டைப்பானை...... படம் - ஜாதிமல்லி
பாடியவர் - மரகதமணி.)


ஒரு நாளைக்குப் பொசுக்கென்று போய் விடும் போது வீடு வாசல் பணம் பதவி எதுவுமே எம்முடன் கூட வருவதில்லை. இருந்தும் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்தான் எத்தனை எத்தனை கனவுகள், நனவுகள், ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கோபங்கள், தாபங்கள், சண்டைகள், சல்லாபங்கள்... இன்னும் எத்தனை..! உடலை விட்டு உயிர் போன பின்தான் எல்லாமே மாயை என்பது புரிகிறது.

ஆடும் மேனி வெறும் தோணியே, ஆடித் தீர்ந்தால் அவன் ஞானியே
மனிதக் கணக்கு தினம் மாறுமே, கூட்டிக் கழித்தால் வெறும் மாயமே..
(பாடல் - ஏய் சலோமா......
படம் - சுபாஸ் பாடியவர் - வித்தியாசாகர்-சுவர்ணலதா)


மாயம் என்று தெரிந்தும் மனம் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்று பொல்லாத் தனமாய் அலையும். இந்தப் பொல்லாத் தனங்களும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான்.

தண்ணீரில் போடும் கோலம் போல வாழ்க்கையும் நிலைக்காதது. தரை மீது காணும் எதுவுமே நிலைக்காது.

அதைக் கவிஞர் கண்ணதாசன்
தரைமீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா..! என்கிறார்.

நாம் பிறக்கும் போது தன்னந் தனியாக வெற்றுடம்புடன் பிறக்கிறோம். பிறகு இறக்கும் போதும், பிறக்கும் போது எம்முள் இருந்த உயிர் கூட எம்மை விட்டகன்று வெறும் உடலமாய் கிடந்து சாம்பலாகப் போகிறோம். இடையிலே நாம் எதற்கெல்லாம் ஆசைப்பட்டு எம்முடன் சேர்த்து வைத்தோமோ அவையெதுவுமே எம்மோடு வருவதில்லை.

அதைத்தான் கவிஞர்
யாரோடு யார் வந்தது
நாம் போகும் போது யாரோடு யார் செல்வது....

என்று இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறார்.

வாழ்க்கை ஒரு நாடகம் போன்றது. நாமெல்லாம் அங்கு வெறும் நடிகர்கள்தான். உலகம்தான் மேடை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேஷம் கிடைத்து நடிப்போம். நாடகம் முடிய கூடி இருந்து பார்த்தவர்கள் கலைந்து ஓடி விடுவது போலவே எமது வாழ்க்கை நாடகம் மரணத்தில முடியும் போது கூடி இருந்தவர்கள் தம்பாட்டில் போய் விடுவார்கள்.

மிகவும் யதார்த்தமாகச் சிந்தித்து கவிஞர் அதை
ஆடும் வரை கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்.....
என்கிறார்.

தாயாலே வந்தது தீயாலே வெந்தது.
மெய்யென்று மேனியை யார் சொன்னது...
தாயின் மடியில் பிறந்து மண்ணின் மடியில் மடிந்து போகிறோம். மேனிக்கு மெய்யென்று கூட ஒரு பெயருண்டு. அந்த மெய்யே மெய்யற்றது என்று கூறும் விதம் அழகாயுள்ளது.

பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்

பிறந்தவுடன் அன்னையின் அணைப்புடன் பால் கிடைக்கும். இறக்கையில் உறவுகள் கூடி பால் ஊற்றுவர். தன்மைகள் வேறுபட்டு நின்றாலும் செயற்பாடு ஒன்றாகவே உள்ளது.

உண்டானது இரண்டானதால்
ஊர் போவது நாலானதால்
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய்யென்று மேனியை யார் சொன்னது....

இருவரின் இணைவில் கருவாகி, நால்வரின் துணையுடன் கடைசி இடத்துக்குப் போகும் இந்த மெய் பொய்யானது.

நாடகம் முடித்து வேசம் கலைத்து பாதைகள் பல மாறிப் பயணித்த இந்தப் பயணத்தை முடித்துக் கொள்வதுதான் மரணம்.

இந்தத் தத்துவத்தை உண்மையை எல்லோரும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் படியாக அதாவது உலக மேடையில் வாழ்க்கை நாடகத்தில் வேசம் போட்டுக் கூத்தாடும் நடிகர்களே, வாழ்க்கை நாடகம் முடியும் போது நாம் மரணிக்க கூடி நின்ற கூட்டம் வெறும் பார்வையாளர்களாய் ஓடி விடும் என்பதைக் கவிஞர் பாடலின் சுவையோ, மரணத்தைச் சொல்லும் சோகமோ சிறிதும் குறையாது அழகாகச் சொல்லியுள்ளார்கள்.

சந்திரவதனா
யேர்மனி
3.9.1999

ஒலிபரப்பு - 5.9.1999 ஐபிசி - கவிதைசிந்தும்நேரம்.

Wednesday, May 17, 2006

கல்லறைகள் விடை திறக்கும்... TTN இல்


இன்று ரீரீஎன் தொலைக்காட்சியில் பாட்டுக்கலசம் என்றொரு நிகழ்ச்சியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது தாயகத்திலிருந்து ஒளிபரப்பான ஒரு போட்டி நிகழ்ச்சியாகவே இருந்தது. தாயகப்பாடல்களை மையமாக வைத்தே கேள்விகள் கேட்கப் பட்டன. போட்டியில் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலய மாணவர்களும், கிளிநொச்சி ராமநாதபுரம் வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

முதற் சுற்றுக்கான கேள்விகளுக்காக கல்லறைகள் விடை திறக்கும்... என்ற பாடல் பாடப் பட்டது. சாந்தன் அவர்களே நேரே வந்து அந்தப் பாடலை மிகவும் உருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் பாடிய போது மனம் அப்படியே பாடலுடன் ஒன்றிக் கலங்கி விட்டது.

கல்லறைகள் விடை திறக்கும் - அங்கு
மெல்லிய காற்றது இருக்கும்
பாலினைச் சொரிந்திடும் நிலவு - ஒரு
பாடலை எழுதிடும் இரவு... பாடலைக் கேட்க இங்கே

தொடர்ந்து இரண்டாவது சுற்றுக்கு சரணத்தைக் கொடுத்து பாடலைக் கேட்டார்கள். பங்குபற்றிய மாணவர்கள் மிக அழகாக முதல் அடியை எடுத்துப் பாடினார்கள். தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டினார்கள்.

மூன்றாவது சுற்றுக்கு ஆரம்ப இசை கொடுக்கப் பட்டு பாடலைக் கண்டு பிடிக்கும் படி கேட்கப் பட்டது. அதிலும் மாணவர்கள் அருமையாகப் பாடினார்கள்.

இந்நிகழ்விலே ஜெ.துஸ்யந்தினி என்ற மாணவி பாடிய போது மிகமிக அருமையாக இருந்தது. அந்த மாணவியைத் தொடர்ந்து பாடவிட்டால் என்ன என்று எண்ணத் தோன்றியது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite