Description ஐ எப்படி எழுதுவது என்று யோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம். பேசாமல் இந்தப் பக்கத்துக்குப் போங்கள். குசும்புவதற்கென்றே இருக்கிறாரே ஒருவர். அவர் இலவசமாக உங்களுக்கு எழுதித் தருவார். நல்ல Description எழுதித் தந்து விட்டார் என்ற சந்தோசத்தில் இந்த தினத்துக்கு அவருக்கு வாழ்த்து அனுப்பி விடாதீர்கள். தனக்கு வேண்டாமென அவர் ஏற்கெனவே அறிவித்து விட்டார்.
அத்தோடு தேடியில் தேடும் போது உங்கள் பெயருக்கான சுட்டிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற சின்னச்சின்ன ஆசையேதாவது உங்களுக்கு இருக்கிறதா? அதற்கும் இணைய குசும்பன் தருகிறார் ஐடியா. இதைச்சுட்டிப் பயன் பெறுங்கள்.
துகள்கள் சத்யராஜ்குமாரின் என்னை எழுதியவர்கள் எட்டாவது அங்கமும் தமிழ்ஓவியத்தில் வந்து விட்டது.
நாவலை நான் அனுப்பி வைக்க - நாலைந்து வாரங்கள் கழித்து கோயமுத்தூர் பூராவும் என்னுடைய பெயரைத் தாங்கி போஸ்டர்கள். பெட்டிக் கடைகளில் பெயர் தொங்குகிறது. கூடப் படிக்கும் நண்பர்கள், " என்னங்க நீங்க கதை எழுதுவிங்களா? சொல்லவே இல்லை? பெரிய ஆளா நீங்க? " என்று சூழ்ந்து கொண்டார்கள். உடன் படிப்பவர்களும், ப்ரொ·பஸர்களும் எனக்குப் பாராட்டு விழா நடத்தியே தீருவது என்று முடிவெடுத்தார்கள். குன்னூருக்கு அப்புறம் மாலை போட்டு மறுபடி ஒரு பாராட்டு விழா.வாசிக்கும் போது எனக்கே தலைக்குள் ஒரு சந்தோசக் கிறுகிறுப்பு. சத்யராஜ்குமாருக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்?
இம் முறை இவரது சிறுகதை ஒன்றும் தமிழ்ஓவியத்தை அலங்கரித்துள்ளது. இன்னும் வாசிக்கவில்லை. கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.
கும்பகோணம் விபத்தை இங்கிருந்தே தொலைக்காட்சியில் பார்த்து வெந்தோம். இதையிட்டு மனம் புழுங்கியவர்களில் மாயவரத்தானும் ஒருவர்.
குழந்தைகள் பாடசாலைகள் என்னும் போது அவை எந்தளவுக்குப் பாதுகாப்புடன் அமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு இத்தனை அசிரத்தையாக இருந்திருக்கிறதே! இங்கு யேர்மனியில் இப்படியான விடயங்களில் மிகுந்த அக்கறை செலுத்தி, மிகுந்த பாதுகாப்புகளுடனேயே ஒவ்வொரு பொதுக் கட்டிடங்களையும் கட்டுவார்கள். கட்டுவதோடு விட்டு விடாமல் அடிக்கடி அதன் பாதுகாப்புத்தன்மையைப் பரிசோதித்துக் கொள்வார்கள். இந்த விதமான தன்மை, இந்தியா போன்ற நாடுகளிலும் வரவேண்டும். பணமில்லையென்ற சாட்டுக்கள் தவிர்க்கப் படவேண்டும். மக்களில்.. நாட்டின் நலனில்.. நாட்டின் முன்னேற்றத்தில்... என்று ஒவ்வொரு விடயத்திலும் அக்கறை கொள்ளும் படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட வேண்டும். இப்படியான இடங்களில் வேலைக்கமர்த்தப் படுபவர்கள் சமூகப்பிரக்ஞை உள்ளவர்களாக, இருக்க வேண்டும்.