(பருத்தித்துறைப் பிரதேசப்பொறுப்பாளர் கப்டன்மொறிஸின் நினைவாக)
வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய் தகப்பன்மாரும் நிற்கினம்.
இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐந்து மணியாகியும் காணேல்லை.
யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறன். வருகிற பாடாவே தெரியேல்லை. - நல்லா வேலை கொடுத்திட்டாங்களோ? -
பிள்ளையளும் ரியூசனுக்குப் போயிட்டினம்.
மே மாதம் என்ற படியால் பனி போய் வெய்யிலும் வந்திட்டுது. இந்த யேர்மன் சனம் வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள்ளேயே இருக்காதுகள். எப்பவும் வெளியிலைதான் நிக்குங்கள்.
எனக்கென்னவோ யேர்மனிக்கு வந்து மூன்று வருசமாகியும் ஒண்டிலேயும் மனசு ஒட்டமாட்டனெண்டுது.
நான் 10.5.1986 இலை யேர்மனிக்கு வந்தனான். இண்டைக்கு கலண்டர் 2.5.1989 எண்டு காட்டுது. இந்த மூன்று வருசத்திலையும் இந்த மனசு எப்பிடி எப்பிடியெல்லாம் கிடந்து தவிக்குது. என்ரை மூன்று பிள்ளையளையும் என்ரை கணவரையும் விட்டால் வேறை ஒண்டையுமே எனக்கிங்கை பிடிக்கேல்லை.
எப்பவும் ஊரிலை விட்டிட்டு வந்த தம்பிமாரையும், தங்கச்சிமாரையும், அண்ணனையும், அப்பா அம்மாவையும்தான் மனசு நினைச்சுக் கொண்டு இருக்குது.
எப்பிடிச் சொன்னாலும் நான் ஒரு சுயநலக்காரிதான். எனக்கு மனசு வந்ததுதானே! அதுகளை அங்கை விட்டிட்டு இங்கை மட்டும் ஓடிவர. இப்ப இருந்து புலம்பிறன்.
என்ன பிரயோசனம்..!
எனக்கு அங்கை போகோணும். அம்மான்ரை முகத்தைப் பார்க்கோணும். தங்கைச்சிமாரோடை சினிமாப்பாட்டிலை இருந்து அரசியல் வரை எல்லாத்தைப் பற்றியும் அரட்டை அடிக்கோணும். முக்கியமாக தம்பியைப் பிடிச்சு, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சோணும்.
அவனை இந்தியன் ஆமியள் தேடுறாங்களாம். அவன் எங்கே..? என்று கேட்டுக் கேட்டு என்ரை சகோதரங்களை மட்டுமில்லை. ஊர்ச்சனங்களையெல்லாம் சித்திரவதைப் படுத்திறாங்களாம். தங்கைச்சிதான் இதெல்லாம் எனக்கு எழுதிறவள்.
நேற்றும் சாமத்திலை கனவிலை தம்பிதான். அவன் சாப்பிடுறதுக்கெண்டு மேசையிலை இருக்க அம்மா சோறு போட்டுக் கொண்டிருக்க ஆமி வந்திட்டான் போலையும் தம்பி சாப்பிடாமலே ஓடுற மாதிரியும் கனவு. நான் முழிச்சிட்டன். எனக்கு ஒரே அழுகையா வந்திட்டுது.
எத்தினை நாளைக்கெண்டுதான் என்ர தம்பிமார் சாப்பிடாமல, குடியாமல், நித்திரை கொள்ளாமல் ஓடித் திரியப் போறாங்கள். கடவுளே..! எல்லாத்தையும் நிற்பாட்டு. என்ரை தம்பிமார் மட்டுமில்லை. எல்லாப் பிள்ளையளும் வீட்டுக்குப் போயிடோணும்.
தலைக்கு மட்டும் தலேணி (தலையணி) இருந்தால் போதாதெண்டு காலுக்கொரு தலேணி, கையுக்கொரு தலேணி எண்டு வைச்சுப் படுக்கிறவங்கள் என்ரை தம்பிமார். இப்ப எங்கை...! எந்தக் கல்லிலையும் முள்ளிலையும் படுக்கிறாங்களோ..?!
நான் போகோணும். அவங்களோடை வாழோணும். எனக்கு அடக்கேலாமல் அழுகை வந்திட்டுது. விக்கி விக்கி அழத் தொடங்கீட்டன். சத்தத்துக்கு இவர் எழும்பீட்டார்.
- என்ன இப்ப நடந்திட்டுதெண்டு இப்பிடி அழுறாய்..? - ஆதரவாய்த்தான் கேட்டார்.
- நான் போப்போறன் ஊருக்கு. எனக்கு அம்மாவைப் பார்க்கோணும். பரதனைப் பிடிச்சுக் கொஞ்சோணும் போலை இருக்கு. -
- என்ன இப்பிடிப் பைத்தியக் கதை கதைக்கிறாய். இப்ப அங்கை போயென்ன சாகப் போறியே? நீயாவது இங்கை இருக்கிறாயெண்டு கொம்மாவும் கொப்பரும் எவ்வளவு நிம்மதியா இருப்பினம். -- ................... -
- இன்னும் ஒரு வருசத்திலை பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடும். அதுக்குப் பிறகு நாங்களேன் இங்கை இருக்கப் போறம். அஞ்சு பேருமாப் போவம்.
இப்பப் படு. நாளைக்கு நேரத்துக்கு எழும்போணும் எல்லோ!
ஓம் - எண்டு சொல்லிப் படுத்திட்டன். ஆனால் நித்திரையே வரேல்லை. கண்ணை மட்டும் மூடிக் கொண்டு படுத்திருந்தன். மனசு மட்டும் அப்பிடியே கொட்டக் கொட்ட விழிச்சுக் கொண்டு இருந்திச்சு.
என்ரை தம்பிமாரைக் காப்பாற்று. அம்மா அப்பா தங்கைச்சிமாருக்கு ஒண்டும் நடந்திடக் கூடாது. எல்லாரையும் காப்பாற்று. எண்டு மனசு எல்லாத் தெய்வங்களையும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு எப்படியோ நித்திரையாகீட்டன்.
காலை எழும்பி இவரையும் வேலைக்கு அனுப்பி, பிள்ளையளையும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் போட்டன். எனக்கு வேலை செய்ய அனுமதி இல்லை. இந்த நகரத்தையும் விட்டு ஒரு இடமும் போகக் கூடாது.
எனக்கு அதிலையெல்லாம் கவலை இல்லை. கவலையெல்லாம் ஊரிலை இருக்கிற என்ரை உறவுகளைப் பற்றித்தான். எண்டாலும் களவா ஒரு ஸ்ரூடியோ(Studio)விலை இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வேலை செய்யிறன். Workpermit இல்லாமல் வேலை தர அந்த லேடி பஞ்சிப் பட்டவதான். பிறகு ஏதோ ஓமெண்டு தந்திட்டா. நல்லவ.
பிள்ளையள் பள்ளிக்கூடத்தாலை வரமுன்னம் வேலையை முடிச்சிட்டு ஓடி வந்து சமைச்சுப் போடுவன்.
என்னையறியாமலே என்ரை கண்கள் அவர் வாறாரோ எண்டு யன்னலுக்காலை பார்த்துக் கொண்டுதான் இருந்தன.
பார்த்துக் கொண்டிருக்கவே அவர் வாறார்.
என்ன...! ஒரு மாதிரி தளர்ந்து போய் வாறார். பாவம், நல்லா வேலை வாங்கிப் போட்டாங்களோ! ஊரிலை எத்தினை பேரைத் தனக்குக் கீழை வைச்சு வேலை வாங்கினவர். இங்கை வந்து இவங்களுக்குக் கீழை......!
ஏன் இப்பிடியெல்லாம் நடந்தது? ஏன் இந்த யேர்மனிக்குக் தனியாக வந்து சேர்ந்தோம். எல்லாம் ஏதோ பிரமையாய்.... நம்ப முடியாததாய்.....
எனக்கு ஓடிப் போய் அம்மான்ரை மடியிலை முகத்தை வைச்சு அழோணும் போலை இருக்கு. அம்மா முதுகைத் தடவி தலையைக் கோதி விடுவா.
அப்பான்ரை கையைப் பிடிச்ச படி கதைச்சுக் கொண்டு ஊரெல்லாம் சுத்தோணும் போலை ஆசை ஆசையா வருது.
எங்கையாலும் போட்டு வந்தால் - அக்கா களைச்சுப் போட்டியள். இந்தாங்கோ இதைக் குடியுங்கோ. - என்று தங்கைச்சிமார் ஏதாவது குடிக்கத் தருவினம். அந்த அன்பு வேணும் எனக்கு. அதிலை நான் குளிக்கோணும்.
மனசு சொல்லுக் கேளாமல் அடம் பிடிச்சுக் கொண்டு ஊரையும் உடன் பிறப்புக்களையும் சுற்றிச் சுற்றிக் கொண்டே நிற்குது.
இப்பிடியே நான் மனசை அலைய விட்டுக் கொண்டிருக்க இவர் வீட்டுக்குள்ளை வந்திட்டார். நான் என்ரை கவலையொண்டையும் இவருக்குக் காட்டக் கூடாதெண்டு - டக்கெண்டு - சிரிச்சுக் கொண்டு - என்ன வேலை கூடவே! லேற்றா வாறிங்கள்!- எண்டு கேட்டுக் கொண்டே குசினிக்குள்ளை போய் - ரீ - (தேநீர்) யைப் போட்டன்.
ரீ யோடை வெளியிலை வந்து பார்த்தாலும் இவர் ஒரு மாதிரித்தான் இருக்கிறார். வழக்கம் போலை முஸ்பாத்தியும் விடேல்லை. சிரிக்கவும் இல்லை.
இவர் இப்பிடி இருக்க மாட்டார். முஸ்பாத்தி விடுவார். இல்லாட்டி கோபப் படுவார். கவலைப் படுற மாதிரி எல்லாம் காட்ட மாட்டார். இண்டைக்கென்ன நடந்திட்டு? ஏன் இப்பிடி இருக்கிறார். சரியாக் கதைக்கவும் மாட்டாராம்.
நான் இவற்றை மூட் (Mood) ஐ நல்லதாக்க பிள்ளையளின்ரை பகிடியளைச் சொல்லிப் பார்த்தன். கிண்டர் கார்டன் ரீச்சர் சொன்ன கதையளையும் சொல்லிப் பார்த்தன். ஒண்டுக்கும் மாற மாட்டாராம். அப்பிடியே இருக்கிறார்.
இப்ப ஏதோ சொல்ல வாறார் போலை இருக்கு. நான் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தன்.
பரதன் போயிட்டான். - என்றார்.
எனக்கொண்டுமே புரியேல்லை.
பரதன் எங்களையெல்லாம் விட்டிட்டுப் போயிட்டான். - என்றார் மீண்டும்.
இப்ப எனக்கு எதுவோ உறைத்தது. சடாரென்று ஆரோ என்ரை நெஞ்சிலை சுத்தியலாலை ஓங்கி அடிச்சது போலை இருந்தது.
அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு நான் இருந்திட்டன்.
என்ரை தம்பி.....! பரதா.....!
போயிட்டியோ.....!
இப்ப அழத் தொடங்கீட்டன்.
இருக்காது. அவன் செத்திருக்க மாட்டான். அவனை நான் பார்க்கோணும்.
ஏதோ ஒரு நப்பாசையோடை இவரைப் பார்த்தன். என்ன செய்யிறதெண்டு தெரியாமல் அப்பிடியே இருக்கிறார்.
உண்மையான நியூஸ்தானோ அது? - இவரைக் கேட்டேன்.
இல்லையெண்டு சொல்ல மாட்டாரோ என்ற பயமும் எதிர் பார்ப்பும் ஏக்கமும் நிறைந்த அவா எனக்குள்.
தகவல் நடுவச் செய்திகளிலை அப்பிடித்தான் சொல்லுறாங்கள். பிழையான செய்தியாயும் இருக்கலாம். - இவர் இப்ப என்னை ஆறுதல் படுத்தச் சும்மா சொன்னார்.
எனக்கு அவன் செத்திட்டான் எண்டு நம்பவே ஏலாதாம். நானும் தகவல் நடுவங்களுக்கு அடிச்சுப் பார்த்தன். புனைபெயர், அப்பான்ரை பெயர், வயது எல்லாம் சரியாகச் சொல்லுறாங்கள்.
- மே முதலாந்திகதி பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் மொறிஸ் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதி வீரமரணமடைந்து விட்டார். - எண்டு சொல்லுறாங்கள். பருத்தித்துறையெல்லாம் கர்த்தாலாம். கதவடைப்பாம். கறுப்புக் கொடியாம்.
கடவுளே..! இந்தச் செய்தியெல்லாம் பொய்யா இருக்கோணும்.
நான் பள்ளிக்கூடத்தாலை வீட்டை மத்தியானம் சாப்பிடப் போற பொழுது அப்பிடியே தவண்டு வந்து மூமூ......த்தக்கா என்று கொண்டு அஞ்சு விரலையும் என்ரை வெள்ளைச் சட்டையிலை பதிச்சிடுவான். நான் அவனைத் தூக்கி கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவன். அம்மாதான் வெள்ளைச்சட்டை ஊத்தையாகுது. என்று கத்துவா.
எனக்குப் பத்து வயசாயிருக்கிற பொழுதுதான் பிறந்தவன். அவன் பிறந்த உடனை அப்பாவோடை மந்திகை ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்தனான். பஞ்சு மாதிரி இருந்தவன். என்ரை விரலைக் குடுக்க அப்பிடியே இறுக்கிப் பொத்தி வைச்சிருந்தவன்.
அப்பா- அம்மாவோடை கதைச்சுக் கொண்டிருக்க நான் அவனைத்தான் பார்த்துக் கொண்டும், தொட்டுக் கொண்டும் இருந்தனான். எனக்கு அவனை விட்டிட்டுப் போக மனம் வரேல்லை.
வோச்சர் வந்து - ஆறு மணியாச்சு. எல்லாரும் போங்கோ - எண்டிட்டான்.
அப்பா அவன்ரை கையுக்குள்ளை இரண்டு ரூபாவைத் திணிச்சு விட்டார். இன்னும் கொஞ்ச நேரம் நிற்க விட்டான்.
எனக்கு அப்பாவோடை வீட்டை திரும்பிப் போற பொழுதும் அவன்ரை மெத்தென்ற பாதம்தான் நினைவுக்குள்ளை இருந்தது. சுருட்டை மயிரோடை எவ்வளவு வடிவாயிருந்தவன்.
இப்ப அவன் இந்த உலகத்திலையே இல்லையோ......! நெஞ்சு கரைஞ்சு கண்ணீராய் ஓடிக் கொண்டே இருந்திச்சு.
முதன் முதலா அவன் நடக்கத் தொடங்கின பொழுது எவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சு. கொஞ்சம் வளர்ந்தாப் போலை, இரவு படுக்க வைக்கிற நேரத்திலை
மூத்தக்கா கதை சொல்லுங்கோ - எண்டு அடம் பிடிப்பான். ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி எனக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் முடிஞ்சிடும்.
மூத்தக்கா கதை சொல்லுங்கோ. இல்லாட்டிப் படுக்க மாட்டன். - என்பான்.
பிறகு நானே இயற்றி இயற்றிக் கதையெல்லாம் சொல்லுவன். அப்பிடியே என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நித்திரையாப் போடுவான்.
இப்ப எனக்கு அவனைக் கட்டிப் பிடிக்கோணும் போலை ஒரே அந்தரமா இருக்குது. நெஞ்செல்லாம் ஏக்கமா இருக்கு. அவனைப் பார்க்கோணும். நிறையக் கதைக்கோணும். மூத்தக்கா என்று கூப்பிடுறதைக் கேக்கோணும். அப்பிடியே பல்லெல்லாம் காட்டிக் குழந்தையா சிரிப்பானே. அதைப் பார்க்கோணும்.
கடவுளே.....! இனி இதெல்லாம் ஏலாதே!
உலகத்துச் சோகமெல்லாம் எனை அழுத்த எனக்கு அழுகை அழுகையாக வந்து கொண்டே இருக்குது.
இன்னும் வளர்ந்தாப் போலை எப்பிடியெல்லாம் முஸ்பாத்தி விடுவான். நான் அவனுக்குச் சொன்ன கதையெல்லாம், அவன் என்ரை பிள்ளையளுக்குச் சொல்லுவான். அவசரத்துக்கு என்னை சைக்கிளிலை கூட ஏத்திக் கொண்டு போவான். என்ரை பிள்ளையளோடை எப்பிடியெல்லாம் செல்லங் கொஞ்சுவான்.
தம்பி....! அவன் செத்திருக்க மாட்டான். நான் எத்தினை கடவுள்களையெல்லாம் மன்றாடினனான். அப்பிடி நடந்திருக்காது.
அவனையே நினைச்சு நினைச்சு அழுது அழுது கண்ணீர் ஆற்று நீரின்ரை கணக்கிலை ஓடிக் கொண்டே இருக்குது. வத்தவேயில்லை.
எனக்கு இப்ப அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரையும் கட்டிப் பிடிச்சு அழோணும் போலை இருக்கு. ரெலிபோன் கூட பருத்தித்துறைக்கு அடிக்கேலாது.
தம்பியின்ரை மறைவிலை அம்மா, அப்பா, எல்லாரும் எப்பிடி அழுவினை எண்டு நினைக்க எனக்கு இன்னும் அழுகை கூடவாய் வருது. எனக்கு ஒண்டையும் தாங்கேலாதாம்.
பரதா....! என்னட்டை ஒருக்கால் வாடா! மனசுக்குள் அவனைக் கூவி
அழைச்சேன்.
படுக்கையறைக்குள் ஏதோ சரசரத்துக் கேட்டிச்சு. ஆவியோ....! மனசு பரபரக்க ஓடிப்போய் படுக்கையறையைப் பார்த்தன். நேற்று முன்தினம் சின்னவன் கிண்டர்கார்டனிலிருந்து ஈயப் பேப்பரிலை வெட்டின ஒரு படம் கொண்டு வந்து தந்தவன். அதை லைற்றிலை கொழுவி விட்டனான். அதுதான் யன்னலாலை வந்த காத்துக்கு ஆடிக் கொண்டிருந்திச்சு. எனக்கு ஒரே ஏமாற்றமாய் போட்டுது.
அடுத்த நாள் இவர் வேலைக்குப் போகாமல் நிண்டு மத்தியானம் சமைச்சுப் போட்டு சாப்பிடச் சொல்லி கோப்பையிலை போட்டும் தந்தார். எனக்கு ஒரு வாய் வைக்கவே தம்பி இந்த உலகத்திலேயே இல்லை எண்ட நினைவிலை அழுகை வந்திட்டுது. உப்புக் கரிச்சது.
- இங்கை பார். அவன் மாவீரனாப் போயிருக்கிறான். நீ அழக் கூடாது. நீ இப்பிடியே அழுது கொண்டிருந்தால் நானும் வேலைக்குப் போக, பிள்ளையளை ஆர் பார்க்கிறது? . இவர் என்னைப் பேசினார்.
அவர் சொல்லுறது சரிதான். அதுக்காண்டி அழுகை நிண்டிடுமோ! இல்லை என்ரை சோகம்தான் வடிஞ்சிடுமோ!
சும்மா சும்மா சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் எத்தினை தரம் கவலைப் பட்டிருப்பன். அழுதிருப்பன். இப்பதான் தெரியுது அதெல்லாம் ஒண்டுமே இல்லையெண்டு.
சாவைப் போல சோகம் வேறையொண்டும் இல்லை. யாராவது தெரியாதவர்கள் செத்தாலே கவலைப் படுறம். இளம் போராளிப் பிள்ளையள் செத்ததைக் கேட்டாலே வயிறு கொதிக்குது. மனசு பதைக்குது. இந்தக் கவலையளும் சோகங்களும் எல்லாருக்கும் தெரியும். ஏன் எல்லாரும் அனுபவிச்சுமிருப்பினம். நானும் அனுபவிச்சிருக்கிறன்.
மில்லர் போலை ஒவ்வொரு கரும்புலியும் மரணத்தைக் குண்டுகளாய் உடம்பிலை கட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு கை காட்டிப் போட்டுப் போறதை, அவையள் வெடிச்ச பிறகு வீடியோ (Video) விலை பார்க்கிற பொழுது அப்பிடியே மனசைப் பிய்ச்சுக் கொண்டு சோகம் கண்ணீராய்க் கொட்டும். இந்த அனுபவமெல்லாம் எனக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் இருக்கும்.
ஆனால் இந்த சோகத்தையெல்லாம் அப்பிடியே முழுங்கி விடுற அளவு சோகமும் உலகத்திலை இருக்குதெண்டு எல்லாருக்கும் தெரியாது. அதை அனுபவிச்சவைக்கு மட்டுந்தான் தெரியும்.
உங்களுக்குப் பிரியமானவை யாராவது செத்தவையோ?
பிரியமானவை எண்டு மிகமிகப் பிரியமான யாராவது.......!
அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை.......!
இப்பிடி யாராவது.....?
அப்பிடியென்றால் உங்களுக்கும் புரியும். என்ரை அந்த சோகத்திலை ஒரு இத்தனூண்டு சோகத்தைத்தான் நான் சொல்லியிருக்கிறன் எண்டு. மிச்சம் சொல்லேலாது. உணரத்தான் முடியும்.
மரணத்தின் முன்னால் மற்றதெல்லாம் பூச்சியம்தான். அதை நான் என்ரை தம்பி என்னை விட்டுப் போன பொழுதுதான் முழுமையாக உணர்ந்தன்.
இத்தனை தூரம் மனசு அழுது அழுது அவலப் பட்டுக் கொண்டிருக்கிற பொழுதும் நூலிழையிலை ஒரு நம்பிக்கை தொங்கிக் கொண்டிருந்திச்சு. - தம்பி சாகேல்லையெண்டு தங்கச்சி எழுதின கடிதமொண்டு ஊரிலை இருந்து வருமெண்டு! -
அந்த நம்பிக்கை நூலைப் பிடிச்சுக் கொண்டு நடக்கையில், இருக்கையில், படுக்கையில், பயணிக்கையில்..... என்று எந்த நேரமும் நினைவுகளுக்குள்ளேயே மூழ்கி, அழுத விழிகளைத் துடைக்க மறந்து, ஏதோ ஒரு உலகத்திலை நான் வாழ்ந்து கொண்டு இருக்கிற பொழுதுதான் - சரியா 21 ம் நாள்
கூட வந்த தோழர்களிற்கு
ஓட வழி செய்து விட்டு
தனித்திரண்டு புலிகளுடன்
களத்தினிலே போராடி
பாரதத்துப் பேய்களது
பாவரத்தம் களம் சிதற
கோரமுடன் படை சரித்து
எம் தம்பி
வீரமுடன் மண் சாய்ந்து விட்டான் - என்று எனது தங்கைச்சி எழுதிய கடிதம் என்னை வந்தடைந்தது.
அது இன்னுமொரு சுமை தாளாத சோகம் நிறைந்த நாள்.
சந்திரவதனா செல்வகுமாரன் - யேர்மனி
Monday, November 24, 2003
Thursday, November 20, 2003
அந்த மௌன நிமிடங்களில்........!
நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லமும், அதைச்சுற்றி வைக்கப் பட்டிருந்த மலர்களும், ஒலித்துக் கொண்டிருந்த மாவீரர் கானமும்... யேர்மனியின் வர்த்தகநகரான டோட்மூண்ட் (Dortmund) நகரின் மத்தியில் அமைந்துள்ள அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்த போதே எனக்குள்ளே ஒரு பயபக்தியை ஏற்படுத்தி விட்டது.
நான் வேறொரு உலகத்தினுள் வந்து நிற்பது போலவே உணர்ந்தேன். யேர்மனியின் நெரிசல் நிறைந்த சாலைகளும் அழுத்தம் நிறைந்த வாழ்வும் எனக்கு மறந்து விட்டது.
பண்போடும் மரியாதையோடும் எம்மை வரவேற்ற சகோதர அன்பர்கள் தமது வேலைகளை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் கவனிப்பது மட்டுமல்லாது அவ்வப்போது வந்து எமக்கு ரோஜாப் பூக்களையும் தந்து சென்றார்கள்.
புனிதமான உலகத்தினுள் இருப்பது போன்ற உணர்வில் என் மனது நெகிழ்ந்து போயிருந்தது.
திடீரென்று "தாயகத்தை உயிரிலும் மேலாக நேசித்து, அந்த உன்னத இலட்சியத்துக்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் சுதந்திர வீரர்களை நெஞ்சங்களிலே சுமந்து, அந்த உத்தமர்களுக்கு வணக்கம் செலுத்த நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.
அன்பார்ந்த தமிழீழ நெஞ்சங்களே! விலைமதிக்க முடியாத தம் இன்னுயிரை ஈகம் செய்து, தமிழீழ தேசத்தின் அத்திவாரக் கற்களாக கல்லறைகளில் துயில் கொள்ளும் மாவீரர்களுக்கும், அந்நியர்களால் அநியாயமாக உயிர் பறிக்கப்பட்டு அநியாயமாக மண்ணோடு கலந்து விட்ட பொது மக்களுக்கும் எழுந்து நின்று அகவணக்கம் செய்வோம். "
ஒலிபெருக்கி முழங்கியது.
பேரிரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்த கிசுகிசுச் சத்தம் அப்படியே அடங்கிப் போக மண்டபத்தினுள் அமர்ந்திருந்த அத்தனை தமிழீழ நெஞ்சங்களும் அந்த ஒரு நிமிட அஞ்சலிக்காய் எழுந்து, மனதுக்குள் பேசிய படி மௌனம் காத்தன.
இரண்டு நிமிடங்களில் மௌனத்தைக் கலைத்த படி மீண்டும் ஒலிபெருக்கி, "அன்பார்ந்த தமிழீழ நெஞசங்களே அகவணக்கத்தை அடுத்து தொடர்வது தேசியக் கொடிவணக்கம்.
எமது தமிழீழத் தேசியக் கொடியினை 19.10.1997 இல் புல்மோட்டைக் கடற்பரப்பில் நடந்த தாக்குதலின் போது வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட மாவீரன் கடற்கரும்புலி மேயர் சிறீ திருமாறன் கணேசபிள்ளை ரவிச்சந்திரன் அவர்களின் தாயார் திருமதி கணேசபிள்ளை அவர்கள் ஏற்றி வைப்பார்கள்." முழங்கியது.
தாய்நாட்டைக் காக்க தன் இன்னுயிரை ஈந்த மாவீரனின் தாய் நான் என்ற நினைவில் ஈன்ற பொழுதையும் விட நெஞ்சு பெருமை கொள்ள அந்தத் தாய்
கொடியை ஏற்றினார்.
தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி ஏறுகையில் நெஞ்செல்லாம் புல்லரித்தது.
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே சீற, நான்கு நிமிடங்களில் கொடி ஏறிப் பறக்க மனசு பரபரத்தது.
எத்தனை எத்தனை வேங்கைகள் இரத்தத்தில் ஏறிய கொடியிது புதுவைரத்தின துரையின் வரிகளின் யதார்த்தத்தில் கண்கள் பனித்தன.
மீண்டும் ஒலிபெருக்கி,
"தொடரும் மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வுகளில், அடுத்து, 1.5.89 அன்று இந்திய இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் வீரமரணமடைந்த மாவீரன் கப்டன் மொறிஸ்-பரதராஜன்.தியாகராஜா அவர்களின் தாயாரும், 11.11.93 அன்று தவளைப் பாய்ச்சல் தாக்குதலின் போது வீரமரணமடைந்த மேஜர் மயூரன் - பாலசபாபதி.தியாகராஜா அவர்களின் தாயாருமான திருமதி.தியாகராஜா அவர்கள் முதலில் ஈகைச்சுடரை ஏற்றி வைப்பார்கள் என்று முழங்கியது.
தாய் நாட்டில் ஒளி வீசுவதற்காய் தம்மை அணைத்துக் கொண்ட அந்த வீரர்களின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றினார். திரையிலே ஈழத்தில் நடைபெற்ற உணர்வு பொங்கும் ஈகைச் சுடரேற்றல் ஓடிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் என்னை நிலைகுலைய வைத்த அந்தப் பாடல்
ஒலிக்கத் தொடங்கியது.
தாயகக் கனவுடன்
சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே
இங்கு கூவிடும் எங்கள்
குரல்மொழி கேட்குதா
ஒளியினில் வாழ்பவரே...
என்மனதும் பாடலுடன் சேர்ந்து கூவத் தொடங்கியது.
...உங்களைப் பெற்றவர்
உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம.
எங்கே எங்கே
ஒரு தரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின்
திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்...
மனசுஓலமிட, கண்களில் நீர் திரையிட்டது. மண்டபத்தினுள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. மனத்திரை விசாலமாக விரிய அங்கு எத்தனை முகங்கள். மண்ணுக்கு வித்தான பல முகங்கள். "அக்கா அக்கா..." என்று என் முன்னே சிரித்து விட்டு, அடுத்த கணமே களத்தில் காவியமாகி கல்லறையில் துயில் கொள்ளும் உயிர்ப்பூக்கள். அங்கு அவனும் வந்தான்.
அன்று தம்பி வந்து நின்றதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாய் இருந்தது. நானும் தங்கைமாருமாக அவனுடன் கதை கதையென்று கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் சந்தோஷத்தைப் பார்த்து அம்மாவும் சந்தோஷத்தோடு, தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தா.
தம்பி அப்போது அனேகமான பொழுதுகளில் ´சென்றி´க்கு நின்று ஆமியை உள்ளே வராமல் பார்க்கும் பணியில் இருந்தான். அத்தோடு புலிகளின் நியாய விலைக் கடையையும் பொறுப்பாக நின்று நடாத்திக் கொண்டிருந்தான். அவன் வீட்டில் இருக்கும் போது படுக்க ஒரு தலையணி காணாதென்று சண்டை பிடித்து, காலுக்கு, கையுக்கு, தலைக்கு என்றெல்லாம் தலையணி வைத்துப் படுப்பான். கிணற்றில் தண்ணீர் அள்ளும் வேலையைத் தவிர வேறொரு வேலையும் செய்ய மாட்டான். பெரிய ஸ்ரைல் பார்ப்பான். கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்காய் நின்று தலைமயிரை அழகு படுத்துவான். நல்ல உடுப்புகள் மட்டுந்தான் போடுவான்.
இப்போ அவன் சைக்கிளில் பின்னுக்குக் கரியர் பூட்டி, கரியரில் ஒரு பக்கீஸ் பெட்டி கட்டி, அதனுள் நியாய விலைக்கடைச் சாமான்களைக் கொண்டு போவதைப் பார்த்து எங்களுக்கு ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கவலையும் வரும்.
இப்போதும் அதையெல்லாம் சொல்லி அவனைப் பகிடிபண்ணிக் கொண்டிருந்தோம். அவன் அதற்கு மேலால் வேறு பகிடிகள் சொல்லி எங்களைச் சீண்டிக் கொண்டிருந்தான்.
எங்கள் கதைகள் திசைமாறித் திசைமாறி எங்கெங்கோ சென்று திரும்பின.
"டேய்... நீ... உந்தக் கிரனைட் பாக்கை (bag) யெல்லாம் கொண்டு போய் காம்பிலை குடுத்திட்டு வந்து போசாமல் படி." நான் சொன்னேன்.
தங்கையும் என் ஆலோசனை நல்லதென்பது போலப் பக்கப் பாட்டுப் பாடினாள்.
"பேசாமல் வாறதோ! என்ன சொல்லுறிங்கள்?" சற்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
"ஓமடா, எத்தினை பெடியள் போராட இருக்கிறாங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு வந்து முதல்லை படிச்சு முடி. அம்மா உன்னை நினைச்சு எவ்வளவு அழுறவ தெரியுமே!"
இப்போ அவன் சற்று ஆக்ரோசத்துடன் "அக்கா...! நீங்கள் படிச்சனிங்கள் தானே. நீங்களே இப்பிடிச் சொன்னால்...! உங்கடை தம்பி மட்டும் படிக்கோணும். மற்றவங்கள் படிக்கத் தேவையில்லையோ?
அவங்களுக்கும் அக்காமாரும் அம்மாமாரும் இருக்கினம் தானே!
ஒவ்வொரு அம்மாமாரும் அழுது தடுத்தால் போராட ஆர் வருவினம்?"
"..................."
"அக்கா, நீங்கள் என்னை மனசோடை துணிவோடை அனுப்போணும்." என்றான்.
அதுக்கு மேல் என்னால் பேச முடியவில்லை. மீண்டும் எங்கள் பேச்சு இயல்புக்கு மாறி நாங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போது "அக்கா என்ரை கறுத்த ரவுசரை அயர்ண் பண்ணி வையுங்கோ. நாளைக்கு போட்டோ (Photo) எடுக்கிறதாம்." என்றான்.
"ஏன் போட்டோ?" நானும் தங்கைமாரும் கோரஸாகக் கேட்டோம்.
"நான் செத்தால் நோட்டீசிலை போடுறதுக்கு." அவன் மிகவும் சாதாரணமாகச் சொன்னான். அப்படியே எங்கள் சிரிப்பு அடங்க நாம் மௌனமாகி விட்டோம். மனசு மட்டும் திக்கிட்டது. ஏதோ ஒரு பயப் பந்து நெஞ்சுக்குள் உருள்வது போலிருந்தது.
அன்று அவன் அப்போது போய்விட்டான். இரவு வந்து நியாய விலைக் கடைக் காசை எண்ணி என்னிடம் தந்தான். "ஏன் எண்ணித் தாறாய்? என்னிலை உனக்கு நம்பிக்கையில்லையோ?" செல்லமாகக் கேட்டேன்.
"அக்கா எனக்கும் உங்களுக்குமிடையிலை அன்பைத் தவிர வேறையொண்டுமே இல்லை. அது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காசிருக்கே. இது என்ரையில்லை. இது எங்கடை நாட்டின்ரை காசு. அதை நான் உங்களிட்டைத் தரக்கிளையும் சரி, வாங்கக்கிளையும் சரி எண்ணிறதுதான் நல்லது." மூச்சு விடாமல் சொன்னான்.
என்னை விடப் பத்து வயது குறைந்தவனின் பொறுப்பான பேச்சில் ஆச்சரியமும் பெருமையும் என்னை ஆட்கொள்ள, எண்ணிய காசைப் பையில் போட்டு எனது அறையினுள் வைத்து விட்டு சாப்பிடன் என்றேன்.
"குளிச்சிட்டு வாறன்" என்றான்.
குசினிக்குள் போனேன். அடுப்பில் தணல் இருந்தது. குழம்புச் சட்டியை அடுப்பில் வைத்து விட்டு, பிரட்டலை குக்கரில் வைத்து குக்கரைப் பத்த வைத்தேன். மண்(ணெண்)ணெய் மணம் பக் கென்று வந்து போனது.
"அக்கா...!" கூப்பிட்டான்.
"என்னடா? "
"என்ரை முதுகைத் தேய்ச்சு விடுங்கோ."
"சாமம் பன்ரெண்டு மணிக்கு கிணத்தடியிலை நிண்டு, உனக்கு முதுகு தேய்க்கோணுமோ?!"
"என்ரை அக்கா இல்லே..!"
லக்ஸ் சோப்பைப் போட்டுத் தேய்த்து விட்டேன். கிணற்றில் அள்ளி அள்ளி ஊற்றி ஊற்றிக் குளித்தான்.
"இஞ்சபார்! கெதிலை குளிச்சு முடி. ´ஷெல்´ வந்து கிணத்தடியிலை விழுந்தால் எல்லாம் சரியாப்போடும்."
பருத்தித்துறைக் கடலில் இருந்து ஓயாது பறந்து கொண்டிருந்த ´ஷெல்´ தந்த பயத்தில் நான் அவனை அவசரப் படுத்தினேன். சாப்பாட்டைக் கொடுக்க அவன் ஆசை ஆசையாக அள்ளிச் சாப்பிட்ட போது எனது கண்கள் பனித்தன.
போகும் போது "படுத்து நல்ல நித்திரை கொள்ளோணும் போலை இருக்குதக்கா" என்றான்.
"அப்ப கொஞ்சம் படன்."
"இல்லை நான் போய் சென்றிக்கு நிண்டு கொண்டு வெள்ளையை விடோணும்."
"நித்திரை தூங்கிப் போடுவாய்."
"படுத்தாத்தானே நித்திரை கொள்ளுறது."
"இண்டைக்கு எந்தப் பக்கம்?"
"ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு அங்காலை இருக்கிற பனங்காணிக்குள்ளை, பனைக்குப் பின்னாலை நிற்பன்." அதை மட்டும் மிகவும் குசுகுசுப்பாக என் காதுக்குள் சொன்னான்.
தொடர்ந்து "நித்திரை வராது. பகலெண்டால் ஆராவது தேத்தண்ணி கொண்டு வந்து தருவினம்." என்றான்.
"கால் நோகாதே?" அக்கறையோடு கேட்டேன்.
"கால் நோகுமெண்டு சொல்லி நாங்கள் நிக்காட்டி ஆமி உள்ளை பூந்திடுவான் இல்லே. உங்களைப் போல எத்தினை அக்காமார் எங்களை நம்பி வீடுகள்ளை இருக்கினம்." என்றான். உடனே, சில மாதங்களின் முன் ஆலடி வீடுகளுக்குள் புகுந்த ஆமி ஒரே நாளில் எழுபது பெண்களை மானபங்கப் படுத்திய வெறித்தனம் என் நினைவில் வந்து என் உடல் ஒரு தரம் நடுங்கியது.
"அக்கா என்ன யோசிக்கிறீங்கள்? நான் வெளிக்கிடப் போறன். நாளைக்கு வருவன். அந்தக் கறுத்த ரவுசரை எடுத்து ரெடியா வையுங்கோ. நல்ல சேர்ட்டும் வையுங்கோ. நோட்டீசிலை படம் வடிவா வரோணும்." என் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்த்தபடி சொன்னான்.
பிறகு என்னைக் கனிவாகப் பார்த்தபடி "அக்கா நான் ஏன் இப்பிடிச் சொல்லுறன் தெரியுமே! ஒண்டும் சொல்லாமல் நான் செத்துப் போட்டன் எண்டால் உங்களாலை தாங்கேலாது. சாவு என்னை எந்தக் கணத்திலும் தழுவலாம். அதைத் தாங்க நீங்கள் இப்ப இருந்தே உங்களைத் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். அம்மாவையும் நீங்கள்தான் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். என் சாவு உங்களை வருத்தக் கூடாது. அக்கா! உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக்கூடாது. அதுதான் என்ரை ஆசை." சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.
அடுத்த நாள் காலை வந்து அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு, நியாயவிலைக் கடைக் காசுடன் புறப்பட்டான். போகும் போது "ரவியையும் இண்டைக்கு போட்டோ எடுக்கினம். போட்டோ எடுத்து முடிய அவனோடை வருவன். ரவிக்கு வடை விருப்பம். ஏலுமெண்டால் சுட்டு வையுங்கோ." என்று சொல்லிக் கொண்டே போனான்.
அவன் போய் சில மணி நேரங்களில் கிரனைட்டுகளும், ஷெல்களும் துப்பாக்கி வேட்டுக்களுமாய் ஒரே சத்தம்.
"அந்தக் குறுக்கால போவார் வெளிக்கிட்டிட்டாங்கள் போலை கிடக்கு." அப்பாச்சி தன் ஆத்திரத்தையும் எரிச்சலையும் வார்த்தையில் காட்டினா.
பருத்தித்துறையே அல்லோலகல்லோலப் பட்டது. ´சென்றி´க்கு நிற்கும் பிள்ளைகளின் வீடுகளிலெல்லாம் அன்று உலை கொதிக்கவில்லை. மனம் பதைக்க பெற்றவரும், உற்றவரும் பிள்ளைகளின் வரவுக்காய் வாசலில் காத்திருந்தார்கள்.
நீண்ட காத்திருப்பின் பின் எம் நெஞ்சம் குளிர தம்பி வந்தான். மீண்டும் உயிர் வந்தது போல் நாம் பெருமூச்சு விட்டோம். ஆனால் அவன் சோர்ந்து போயிருந்தான். எதையோ பறி கொடுத்தவன் போல் வெறித்துப் பார்த்தான்.
"என்னடா...?" தங்கைதான் கேட்டாள்.
"ரவி பேயிட்டான்." வார்த்தைகளோடு உணர்வும் வெடித்துச் சிதற குலுங்கியழுதான். களத்தில் புலியாகப் பாய்பவனின் இளகிய மனம் கண்டு நாமும் அழுதோம்.
..........
"அக்கா உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது." என் பிரிய தம்பியின் வார்த்தையை மீறி என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் ஓடியது.
தீடீரென்று ஒளிப்பிரவாகம். ஒலி பெருக்கி முழங்கியது. "தொடர்ந்து, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடரேற்றி மாவீரருக்கு அஞ்சலி செய்வார்கள்."
நான் 1985 இலிருந்து 2000 இற்கு மீண்டு ஈகைச்சுடரேற்றும் வரிசையில் ரோஜா மலருடன் நகர்ந்தேன்.
மாவீரர்களின் மத்தியில் என் தம்பியும் அழகாய்...! அவன் கண்கள் என்னையே ஊடுருவிப் பார்த்து "அழாதையுங்கோ அக்கா" என்று சொல்வது போல்...!
சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
Sunday, November 16, 2003
எழுத்து மாறி விட்டது
என்ன நடந்ததெனத் தெரியவில்லை.
Bamini யில் எழுதி சுரதாவின் கொன்வேட்டரில் Unicode க்கு மாற்றி இங்கு இணைத்தேன்.
எழுத்து மாறி விட்டது
இந்தப் பக்கம் வரும் யாருக்காவது இதை எப்படி மாற்றலாமென விபரம் தெரிந்தால்
எனக்குத் தெரியப் படுத்துங்கள். என்னிடம் வேறு பிரதியும் இல்லை.
Bamini யில் எழுதி சுரதாவின் கொன்வேட்டரில் Unicode க்கு மாற்றி இங்கு இணைத்தேன்.
எழுத்து மாறி விட்டது
இந்தப் பக்கம் வரும் யாருக்காவது இதை எப்படி மாற்றலாமென விபரம் தெரிந்தால்
எனக்குத் தெரியப் படுத்துங்கள். என்னிடம் வேறு பிரதியும் இல்லை.
ம�..... விடிந�த� விட�டதா..?
நேற�ற� ம�ன� தினம� அஸ�ஸெம�பிலி மீற�றிங�. வீட� வந�த� சேர நேரமாகி விட�டத�. வழமையில� வர�டத�தில� ஒர� நாள�தான� இப�படி அட�டகாசமாக இர�க�க�ம�. ஆனால� இவ�வர�டம� எமத� பழைய தலைமையதிகாரி ஓய�வில� சென�ற� விட ப�திய தலைமையதிகாரி வந�த� ஒரே அட�டகாசம�தான�. இத� இவ�வர�டத�தின� மூன�றாவத� அட�டகாசமான அஸ�ஸெம�பிலி மீற�றிங�.
காரியதரிசியைத� தொடர�ந�த� தலைமையதிகாரியே கிறிஸ�மஸ� போனஸ�, சம�பள உயர�வ�, விட�ப�ப� விதிகள�.... என�ற� எல�லாவற�றைய�ம� பேசி ம�டித�த� விட�டார�. வயதில� க�றைந�தவர�. அத�தான� ஒவ�வொர�வராகப� பேச விட�ட� எமக�க�க� கொட�டாவியை வரப� பண�ணாத� தானே ம�டித�த� விட�டார�. பிறகென�ன சாப�பாட�தான�. உறைப�ப�த� தவிர�ந�த மற�றைய எல�லாச� ச�வைகளைய�ம� கொண�ட Buffet.
எல�லாமாக 368பேர� சமூகமளித�திர�ந�தோம�. இவ�வளவ� பேர�ம� Buffet இல� சாப�பாட� எட�ப�பதென�றால� ச�ம�மாவா...? மிக நீண�ட வரிசை. எமத� தலைமையதிகாரிய�ம�தான� அந�த வரிசையில� ஒர�வராக நின�றார�.
வான�கோழி இறைச�சிய�ம�, பன�றி இறைச�சிய�ம� யேகர� ஸோச�டன� ஒர� ப�றம� இர�ந�தால�ம� நான� சைவப� பக�திக�கே சென�றேன�. அங�க� நிறைய items இர�ந�தன- எனக�க� யேர�மனியர�களின� சாப�பாட�களில� மிகவ�ம� பிடித�தத� அவர�களத� kartoffelsalat.(உர�ளைக�கிழங�க� சலாட�). நாங�கள� சோற� சாப�பிட�வத� போல அவர�கள� உர�ளைக�கிழங�கில� �தாவத� செய�த� கொள�வார�கள�. அந�த வகைளில� இந�த உர�ளைக�கிழங�க� சலாட� ம�க�கிய இடத�தைப� பெற�கிறத�. மெல�லிய ப�ளிப�ப�க� கலந�த ச�வை அதற�க�. அதனோட� வேற�ம� பலவிதமான சலாட�கள� இர�ந�தன. பொத�வாக கோவாவை நாம� ச�ண�டிச� சாப�பிட�வோம�. அல�லத� பால�கறி வைப�போம�. ஆனால� யேர�மனியர�கள� சலாட� செய�வார�கள�. மெல�லிய ப�ளிப�ப�க� கலந�த� மிகவ�ம� ச�வையாக இர�க�க�ம�. இந�த சலாட�டை கிறீக� ரெஸ�ரோறண�ட�களில�ம� சாப�பிடலாம�.
ஒர� பிடிபிடித�தேன�.
பிறக� Dessert. அதில�ம� பல items. தோடம�பழ கிறீம�, மாம�பழ-தயிர� கிறீம�, வற�த�த அப�பிள�, fruit salat........ என�ற� பழங�களிலேயே பலச�வை. இவற�றில� தனித�த�வமாகத� தெரிந�தத� மாம�பழத� த�ண�ட�கள�டன� தித�தித�த Mango -Joghurt Creme.
திர�விழாவில� நிற�பத� போன�ற உணர�வ� �ற�பட�ம� படியாக 368 பேர�ம� ஓடிக� கொண�ட�ம� ஆடிக� கொண�ட�ம� பாடிக� கொண�ட�ம� திரிந�தர�ர�கள�. சந�தோசமான பொழ�த�.
விரைவில� கிறிஸ�மஸ�சை ஒட�டி இன�னொர� சந�திப�ப� இதே அட�டகாசத�த�டன� நடக�க�ம�.
நேற�ற� ம�ன� தினம� அஸ�ஸெம�பிலி மீற�றிங�. வீட� வந�த� சேர நேரமாகி விட�டத�. வழமையில� வர�டத�தில� ஒர� நாள�தான� இப�படி அட�டகாசமாக இர�க�க�ம�. ஆனால� இவ�வர�டம� எமத� பழைய தலைமையதிகாரி ஓய�வில� சென�ற� விட ப�திய தலைமையதிகாரி வந�த� ஒரே அட�டகாசம�தான�. இத� இவ�வர�டத�தின� மூன�றாவத� அட�டகாசமான அஸ�ஸெம�பிலி மீற�றிங�.
காரியதரிசியைத� தொடர�ந�த� தலைமையதிகாரியே கிறிஸ�மஸ� போனஸ�, சம�பள உயர�வ�, விட�ப�ப� விதிகள�.... என�ற� எல�லாவற�றைய�ம� பேசி ம�டித�த� விட�டார�. வயதில� க�றைந�தவர�. அத�தான� ஒவ�வொர�வராகப� பேச விட�ட� எமக�க�க� கொட�டாவியை வரப� பண�ணாத� தானே ம�டித�த� விட�டார�. பிறகென�ன சாப�பாட�தான�. உறைப�ப�த� தவிர�ந�த மற�றைய எல�லாச� ச�வைகளைய�ம� கொண�ட Buffet.
எல�லாமாக 368பேர� சமூகமளித�திர�ந�தோம�. இவ�வளவ� பேர�ம� Buffet இல� சாப�பாட� எட�ப�பதென�றால� ச�ம�மாவா...? மிக நீண�ட வரிசை. எமத� தலைமையதிகாரிய�ம�தான� அந�த வரிசையில� ஒர�வராக நின�றார�.
வான�கோழி இறைச�சிய�ம�, பன�றி இறைச�சிய�ம� யேகர� ஸோச�டன� ஒர� ப�றம� இர�ந�தால�ம� நான� சைவப� பக�திக�கே சென�றேன�. அங�க� நிறைய items இர�ந�தன- எனக�க� யேர�மனியர�களின� சாப�பாட�களில� மிகவ�ம� பிடித�தத� அவர�களத� kartoffelsalat.(உர�ளைக�கிழங�க� சலாட�). நாங�கள� சோற� சாப�பிட�வத� போல அவர�கள� உர�ளைக�கிழங�கில� �தாவத� செய�த� கொள�வார�கள�. அந�த வகைளில� இந�த உர�ளைக�கிழங�க� சலாட� ம�க�கிய இடத�தைப� பெற�கிறத�. மெல�லிய ப�ளிப�ப�க� கலந�த ச�வை அதற�க�. அதனோட� வேற�ம� பலவிதமான சலாட�கள� இர�ந�தன. பொத�வாக கோவாவை நாம� ச�ண�டிச� சாப�பிட�வோம�. அல�லத� பால�கறி வைப�போம�. ஆனால� யேர�மனியர�கள� சலாட� செய�வார�கள�. மெல�லிய ப�ளிப�ப�க� கலந�த� மிகவ�ம� ச�வையாக இர�க�க�ம�. இந�த சலாட�டை கிறீக� ரெஸ�ரோறண�ட�களில�ம� சாப�பிடலாம�.
ஒர� பிடிபிடித�தேன�.
பிறக� Dessert. அதில�ம� பல items. தோடம�பழ கிறீம�, மாம�பழ-தயிர� கிறீம�, வற�த�த அப�பிள�, fruit salat........ என�ற� பழங�களிலேயே பலச�வை. இவற�றில� தனித�த�வமாகத� தெரிந�தத� மாம�பழத� த�ண�ட�கள�டன� தித�தித�த Mango -Joghurt Creme.
திர�விழாவில� நிற�பத� போன�ற உணர�வ� �ற�பட�ம� படியாக 368 பேர�ம� ஓடிக� கொண�ட�ம� ஆடிக� கொண�ட�ம� பாடிக� கொண�ட�ம� திரிந�தர�ர�கள�. சந�தோசமான பொழ�த�.
விரைவில� கிறிஸ�மஸ�சை ஒட�டி இன�னொர� சந�திப�ப� இதே அட�டகாசத�த�டன� நடக�க�ம�.
Friday, November 14, 2003
யாருக்காவது பசிக்கிறதா..?
Thursday, November 13, 2003
ஏன் இந்தச் சிக்கல்கள்......???
எதிர்பார்த்தது போலவே வெங்கட்ரமணியின் வலைப்பின்னல் பிரமாதமாகவே இருந்தது.
Tamil Bloggers' Journal இல் மற்றைய வலைப்பூக்களில் சிந்தியிருக்கும் மற்றையவர்களின் எண்ணங்கள் மட்டும் என்றில்லாது வேறும் பல விடயங்கள் பரிமாறப்படுகின்றன. சுலபமாகப் பலதை அறிய முடிகிறது.
க்ருபா நன்றாகத்தான் பின்னியிருந்தார்.. ஏதோ.. சுவாரஸ்யமான கதை படிப்பது போன்ற உணர்வு அவர் எழுத்துக்களை வாசிக்கும் போது.... தற்போது வினோபா கார்த்திக். எடுத்த எடுப்பிலேயே நிறைய எழுதி விட்டார் போலுள்ளது.
சரி... இந்தளவு கணினியோடு இணைந்து விட்டோம். சுரதாவின் எழுத்துருமாற்றி பல வகைகளிலும் கை கொடுக்க யூனிக்கோட் அது இது என்று அசத்துகிறோம். ஆனாலும் மலேசியா பற்றிய தகவல்களை நாம் மிகவும் சுலபமான முறையில் அறிந்து கொள்ளும் படியாக சுபா தமிழில் ஒரு இல்லம் அமைக்க அதைக் கண்டு மகிழ்நத நான் அதற்கு வாழ்த்துத் தெரிவிக்க.. சுபாவுக்கு அந்த எழுத்தை வாசிக்க முடியவில்லையாம்.
மாலனின் பக்கத்துக்குச் சென்றால் ----ஷியச ஷ'டியஷ'ந3ஷ'டி8 ஷ'யடிஷ'ய8ஷ'உ1ஷ'டிநஷ'ய2இ ஷ'ய6ஷ'உ0ஷ'ய1ஷ'ன5ஷ'உ7ஷ'ய1ஷ'டிநஷ'ய1ஷ'உ3 ஷ'ன3ஷ'கனஷ'ய7ஷ'உ9ஷ'கஉஷ'உ8ஷ'க5இ ஷ'உ1ஷ'டிநஷ'நநஷ'டியஷ'ய1ஷ'க7ஷ'உ0ஷ'ய2ஷ'கனஷ'ய8ஷ'உ1 ஷ'கநஷ'உ5ஷ'கஉஷ'ய8ஷ'உ8 ஷ'உ5ஷ'ய2ஷ'டிஉஷ'உ5ஷ'ய1 ஷ'டி4ஷ'ன5 ஷ'ய7ஷ'டி8ஷ'ய1ஷ'உ2ஷ'ய2ஷ'க8 ஷ'ன3ஷ'நஉஷ'டி8ஷ'ய2ஷ'உ2ஷ'க5?.---- இப்படித்தான் தெரிகின்றன.
சுரதாவின் எழுத்துருமாற்றி கூட இதை வாசிக்கும் படியாக மாற்ற மறுக்கிறது.
ஏன் இந்தச் சிக்கல்கள்......???
இதன் நடுவே முகுந்தராஜ் கடலை மிட்டாய் என்றொரு எழுத்துரு மென்பொருளை கணினியில் போட்டுள்ளாராம்.
Tamil Bloggers' Journal இல் மற்றைய வலைப்பூக்களில் சிந்தியிருக்கும் மற்றையவர்களின் எண்ணங்கள் மட்டும் என்றில்லாது வேறும் பல விடயங்கள் பரிமாறப்படுகின்றன. சுலபமாகப் பலதை அறிய முடிகிறது.
க்ருபா நன்றாகத்தான் பின்னியிருந்தார்.. ஏதோ.. சுவாரஸ்யமான கதை படிப்பது போன்ற உணர்வு அவர் எழுத்துக்களை வாசிக்கும் போது.... தற்போது வினோபா கார்த்திக். எடுத்த எடுப்பிலேயே நிறைய எழுதி விட்டார் போலுள்ளது.
சரி... இந்தளவு கணினியோடு இணைந்து விட்டோம். சுரதாவின் எழுத்துருமாற்றி பல வகைகளிலும் கை கொடுக்க யூனிக்கோட் அது இது என்று அசத்துகிறோம். ஆனாலும் மலேசியா பற்றிய தகவல்களை நாம் மிகவும் சுலபமான முறையில் அறிந்து கொள்ளும் படியாக சுபா தமிழில் ஒரு இல்லம் அமைக்க அதைக் கண்டு மகிழ்நத நான் அதற்கு வாழ்த்துத் தெரிவிக்க.. சுபாவுக்கு அந்த எழுத்தை வாசிக்க முடியவில்லையாம்.
மாலனின் பக்கத்துக்குச் சென்றால் ----ஷியச ஷ'டியஷ'ந3ஷ'டி8 ஷ'யடிஷ'ய8ஷ'உ1ஷ'டிநஷ'ய2இ ஷ'ய6ஷ'உ0ஷ'ய1ஷ'ன5ஷ'உ7ஷ'ய1ஷ'டிநஷ'ய1ஷ'உ3 ஷ'ன3ஷ'கனஷ'ய7ஷ'உ9ஷ'கஉஷ'உ8ஷ'க5இ ஷ'உ1ஷ'டிநஷ'நநஷ'டியஷ'ய1ஷ'க7ஷ'உ0ஷ'ய2ஷ'கனஷ'ய8ஷ'உ1 ஷ'கநஷ'உ5ஷ'கஉஷ'ய8ஷ'உ8 ஷ'உ5ஷ'ய2ஷ'டிஉஷ'உ5ஷ'ய1 ஷ'டி4ஷ'ன5 ஷ'ய7ஷ'டி8ஷ'ய1ஷ'உ2ஷ'ய2ஷ'க8 ஷ'ன3ஷ'நஉஷ'டி8ஷ'ய2ஷ'உ2ஷ'க5?.---- இப்படித்தான் தெரிகின்றன.
சுரதாவின் எழுத்துருமாற்றி கூட இதை வாசிக்கும் படியாக மாற்ற மறுக்கிறது.
ஏன் இந்தச் சிக்கல்கள்......???
இதன் நடுவே முகுந்தராஜ் கடலை மிட்டாய் என்றொரு எழுத்துரு மென்பொருளை கணினியில் போட்டுள்ளாராம்.
Wednesday, November 12, 2003
வாக்குறுதியை மறந்து விட்டேன்
பேரக்குழந்தையின் வரவு, மகனின் திருமணம் என நேரத்தோடு நாட்களும் அசுர வேகத்தில் பறக்கின்றன.
இன்று யாழ்கருத்துக்களத்தில் கவிஞர் நாவண்ணனின் கரும்புலி காவியம் பற்றி சீலன் எழுதியருப்பதைப் பார்த்த போதுதான்
கரும்புலி காவியம் பற்றிய எனது கருத்தை தருவதாக கவிஞர் நாவண்ணனுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டேன் என்பதே ஞாபகத்தில் வந்திருக்கிறது.
லண்டன் பயண அனுபவம் பற்றி நிறைய எழுத நினைத்தேன்.
அவைகள் கூட எனக்குள்ளே மட்டுமாகச் சிறகடித்து ஓய்ந்து போயிருக்கின்றன.
இப்படி எத்தனையோ விடயங்கள்..
இன்று யாழ்கருத்துக்களத்தில் கவிஞர் நாவண்ணனின் கரும்புலி காவியம் பற்றி சீலன் எழுதியருப்பதைப் பார்த்த போதுதான்
கரும்புலி காவியம் பற்றிய எனது கருத்தை தருவதாக கவிஞர் நாவண்ணனுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டேன் என்பதே ஞாபகத்தில் வந்திருக்கிறது.
லண்டன் பயண அனுபவம் பற்றி நிறைய எழுத நினைத்தேன்.
அவைகள் கூட எனக்குள்ளே மட்டுமாகச் சிறகடித்து ஓய்ந்து போயிருக்கின்றன.
இப்படி எத்தனையோ விடயங்கள்..
Monday, November 10, 2003
சிறுமியின் உயிர்காக்க நிதிஉதவி செய்யுங்கள்
11-07-2003 - உதயன்

வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவியான தனபாலசிங்கம் பிரியந்தி (வயது-6) சிறுநீரகம் பாதிக்கப்பட்டதனால் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு அவசரமாகச் சந்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குப் பெரும் தொகைப் பணம் தேவையாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள இந்தச் சிறுமியின் தாயார், இரக்க சிந்தையுள்ளவர்களிடம் இருந்து நிதி உதவிகளை எதிர்பார்த்திருக்கின்றார். அவருக்கு உதவ மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் முன்வந்துள்ளது.
சிறுமியின் வைத்தியச் செலவுக்கான நிதியைச் சேகரிப்பதற்கென மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் மானிப்பாய் தேசிய சேமிப்பு வங்கியில் கணக்கொன்றைத் திறந்துள்ளது. உதவ விரும்புவோர் 1-0107-01-1075-2 என்ற கணக்கு இலக்கத்துக்கு நேரடியாக வைப்புச்செய்யலாம். சிறுமியின் உயிரைக் காப்பதற்கு அனைவரும் முன்வந்து நிதி உதவிகளை வழங்கவேண்டும் என்று மானிப்பாய் றோட்டறக்ட் கழக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
நன்றி: உதயன்
வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவியான தனபாலசிங்கம் பிரியந்தி (வயது-6) சிறுநீரகம் பாதிக்கப்பட்டதனால் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு அவசரமாகச் சந்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குப் பெரும் தொகைப் பணம் தேவையாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள இந்தச் சிறுமியின் தாயார், இரக்க சிந்தையுள்ளவர்களிடம் இருந்து நிதி உதவிகளை எதிர்பார்த்திருக்கின்றார். அவருக்கு உதவ மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் முன்வந்துள்ளது.
சிறுமியின் வைத்தியச் செலவுக்கான நிதியைச் சேகரிப்பதற்கென மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் மானிப்பாய் தேசிய சேமிப்பு வங்கியில் கணக்கொன்றைத் திறந்துள்ளது. உதவ விரும்புவோர் 1-0107-01-1075-2 என்ற கணக்கு இலக்கத்துக்கு நேரடியாக வைப்புச்செய்யலாம். சிறுமியின் உயிரைக் காப்பதற்கு அனைவரும் முன்வந்து நிதி உதவிகளை வழங்கவேண்டும் என்று மானிப்பாய் றோட்டறக்ட் கழக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
நன்றி: உதயன்
Monday, November 03, 2003
திலீபனுக்கு திருமணம்
எனது மகன் திலீபனுக்கு வரும் எட்டாம் திகதி திருமணம்.
அதுதான் மீண்டும் நேரத்தோடு ஓட்டம்.
அதுதான் மீண்டும் நேரத்தோடு ஓட்டம்.
Monday, October 27, 2003
வலைப்பூ
சில வாரங்களாக வலைப்பூக்களோடு முழுமையாகச் சங்கமிக்க முடியாதிருந்தது.
ஆனாலும் ஒரு வசதி. முக்கியமான, சுவாரஸ்யமான விடயங்களை Tamil Bloggers' Journal பகுதிக்கு வந்தே பார்வையிட்டுக் கொண்டு போக முடிந்தது.
மதி கேட்டுக் கொண்டதற்கமைய 21.9.03-27.9.03 காலப் பகுதிக்குள் நான் ஏதோ தட்டுத் தடுமாறிய பின்---
மீனாக்சி, பரிமேழகர், சுபா, காசி என்று வந்து சுவாரஸ்யமான முறையில் வலைப்பூக்களின் அழகைத் தொகுத்துத் தந்தார்கள்.
இவ்வாரம் வெங்கட்ரமணி. அசத்துவார் என்றே நம்பிக்கை.
அத்தோடு, காசி எங்கள் வீட்டுச் சிந்துவின் வருகைக்கு வலைப்பூக்களினூடே வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அவருக்கு மிகவும் நன்றி.
ஆனாலும் ஒரு வசதி. முக்கியமான, சுவாரஸ்யமான விடயங்களை Tamil Bloggers' Journal பகுதிக்கு வந்தே பார்வையிட்டுக் கொண்டு போக முடிந்தது.
மதி கேட்டுக் கொண்டதற்கமைய 21.9.03-27.9.03 காலப் பகுதிக்குள் நான் ஏதோ தட்டுத் தடுமாறிய பின்---
மீனாக்சி, பரிமேழகர், சுபா, காசி என்று வந்து சுவாரஸ்யமான முறையில் வலைப்பூக்களின் அழகைத் தொகுத்துத் தந்தார்கள்.
இவ்வாரம் வெங்கட்ரமணி. அசத்துவார் என்றே நம்பிக்கை.
அத்தோடு, காசி எங்கள் வீட்டுச் சிந்துவின் வருகைக்கு வலைப்பூக்களினூடே வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அவருக்கு மிகவும் நன்றி.
Subscribe to:
Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )