Wednesday, July 07, 2004

ஆச்சரியமான சந்தோசங்கள்


கரிகாலனின் மனவெளியிலிருந்து...
சில தினங்களுக்கு முன்னர் கூகிளில் ஒரு விடயம் சம்பந்தமாக தேடிக்கொண்டுஇருந்தேன்.பின்னர் கரிகாலன் என்றபெயரினை உள்ளிட்டு தேடிப்பார்த்தேன். முதலாவதாக எனது வலைபதிவையும் பின்னர் வேறு பல தளங்களையும் பட்டியல் இட்டு காட்டியது.இரண்டாவது பக்கத்தில் புகழ்பெற்ற தமிழர்கள் எனும் தலைப்பில் ஒரு தளத்தினையும் காணமுடிந்தது.தளத்தினுள் புகழ்பெற்றதமிழர்கள் எனும் தலைப்பின் கீழ் பாரதியார்,கவிஞர் கண்ணதாசன், பெரியார்,எம்.ஜி.ஆர்,வே.பிரபாகரன் போன்ற பலருடைய வாழ்க்கைவரலாறுகள் தொகுக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிந்தது.சிலருடைய விபரங்கள் மேலோட்டமாக உள்ளது. தளத்தில் பல விடயங்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து சிவசோதி சதீஷன் என்னும் ஒரு மாணவனால் இந்த தளம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக விபரம் உள்ளது. புகழ் பெற்ற தமிழர்கள் தொடர்பாக விபரங்கள் தருமாறு வேண்டுகோளும் காணப்படுகிறது.ஒரு மாணவனால் இப்படி ஒரு தளம் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.பல குறைகள் காணப்படினும் கூட.

கரிகாலனுக்கு தோன்றியது போன்றதான உணர்வுகள் சில சமயங்களில் எனக்குள்ளும் தோன்றியுள்ளன.

இளைஞர்களின் இப்படியான முயற்சிகள் ஆச்சரியமான சந்தோசங்கள்.
இந்த வகையில் ஈழநாதனின் முயற்சியும் அவரின் வயதையும் மீறிய எழுத்தின்
முதிர்ச்சியும் கூட எனக்கு மிகுந்த ஆச்சரியமே!

இவர் போல இளைஞன் எனப் புனைபெயர் கொண்ட சஞ்சீவ்காந்தும் வயதில் மிக இளையவர்.
யாழ்கருத்துக்களத்தில் ஏற்பட்ட பல கருத்து மோதல்களின் போது இவர் விடுத்த சிந்தனை பூர்வமான கருத்துக்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

Tuesday, July 06, 2004

வலைவலம் - 6.7.2004

புதிது புதிதாகப் பூக்கும் வலைப்பூக்களில் என்னைக் கவர்ந்தவைகளில் ஷ்ரேயாவினது பதிவும் ஒன்று. சின்னச் சின்னதாய்... விடயம் கலந்த சுவைகள்.

இவர் பற்றி ஈழநாதனும் குறிப்பிட்டுள்ளார். இவ்வார வலைப்பூ ஆசிரியர் ஈழநாதன் சற்று வித்தியாசமான சிந்தனையோடு ஈழப்பூக்களை அட்டவணைப் படுத்தியுள்ளார்.

துகள்கள் சத்யராஜ்குமாரின் அடுத்த அங்கம் அதாவது என்னை எழுதியவர்களின் ஆறாவது அங்கம் தமிழ்ஓவியத்தில் வந்துள்ளது. கூடவே துகள்களிலும் ஒரு புதிய கதையைப் பதிந்துள்ளார். பிழைப்பு - இன்னும் வாசிக்கவில்லை. நிட்சயம் நல்லாக இருக்கும் என்ற நம்பிக்கை.

சுரேன் ஊர் சுற்றுகிறார். பொறாமையாக இருக்கிறது. ஆனாலும் ஓடி வந்து சின்னதாகப் பதிந்து விட்டுப் போயுள்ளார்.

திசைகள் ஆனி மாத இதழ் கணினி சங்கடப் படுத்தியதால் மிகவும் தாமதமாகி எங்களைச் சங்கடப் படுத்தியது. இம் மாத இதழும் 6ந்திகதியாகியும் இன்னும் வரவில்லை. மாலனுக்கு என்ன பிரச்சனையோ? நேர்த்தியான இணைய இதழ்களில் திசைகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒன்று.

பாலா அழகிய புகைப்படங்களைப் பதிக்கிறார். இன்றைய பதிவு தொட்டாச்சிணுங்கி. எத்தனை காலத்துக்குப் பிறகு பார்க்க முடிந்தது. சின்ன வயசு ஞாபகங்களைக் கிளறி விடும் படம்.

ஜெயந்தி வலைப்பு ஆசிரியராக இருந்த போது வலைப்பதிவகளுக்குப் புள்ளிகள் போட்டார்.
அதைத் தொடர்ந்து இன்னொரு பதிவாளர் தனது பதிவில் அது பற்றி எழுதி 30 வலைப்பதிவுகளின் பெயர்களையும் குறிப்பிட்டு, ஒரு சில குறிப்பிட்ட வரைவிலங்கணங்களோடு அவைகளுக்குப் புள்ளியிடச் சொல்லியிருந்தார். புள்ளி போடும் வேலை எனக்குச் சரி வருமோ என்று தெரியவில்லை. ஆனாலும் அதை மீண்டும் ஒரு முறை வாசிக்கலாமென்ற எண்ணத்தில் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை.

என்ன கிரகதோஷமோ...?

இப்போது சில நாட்களாகவே Blogger மக்கர் பண்ணிக் கொண்டு நிற்கிறது. ஒரேயடியாக உள்நுழைய முடியவில்லை. எழுதியதை பதிய முனையும் போது மறுக்கிறது. Blogger இல் உள்ள வலைப்பதிவுகளுக்கு ஒரு தரத்தில் விஜயம் செய்ய முடியவில்லை. விக்ரமாதித்தன் போல மனந்தளராமல் மீண்டும் மீண்டுமாய் முயற்சிக்கும் பட்சத்திலேயே அவைகள் எமக்குக் காட்சி தருகின்றன.

Wednesday, June 30, 2004

வலை வலம் 30.6.2004 - பாடல்களோடு


இவ் வார வலைப்பூ ஆசிரியர் பாலாஜி தினம் ஒரு பாடல் என்று...
460 பாடல்களுக்கு மேல் பதிந்து வைத்திருக்கிறார்.
பாடல்கள் பற்றிய விளக்கங்களும் தந்துள்ளார்.
கிடைத்தற்கரிய பல பாடல்கள்

BBC தமிழோசையை இது வரை கேட்டு வந்தோம்.
இப்போது வாசிக்கவும் ஒரு தளத்தை ஆரம்பித்துள்ளர்கள்.
இன்றைய சுவாரஸ்யமான செய்தி - கர்நாடகஇசை பாடும் ஆப்பிரிக்க குயில்

இங்கே சினிமாப்பாடல்கள் எனது பார்வையில் - வரி வடிவத்தில்
இங்கே தாயக.. மெல்லிசை.. பாடல்கள் சில - வரி வடிவத்தில்

Tuesday, June 29, 2004

முத்தம்


அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட
அழகான முத்திரை

ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்

காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்

அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த
இனிய மது

ஆயிரமாயிரம் தரம் எழுதியோ
சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை.

சந்திரவதனா
யேர்மனி
21.7.99

Sunday, June 27, 2004

துண்டுப் பேப்பருக்காய்..


புலம் பெயர்ந்த பின் நிர்வியாவும் என்னைப் போல அவதிப் பட்டுள்ளார்.

நான் யேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளி வந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை. அந்தச் சமயங்களில் எனக்கு வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. விளங்குதோ விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளுவேன்.
சிலசமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும் வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது தலையைப் பிய்த்துக் கொள்வேன்.

அந்த நேரத்தில் எங்காவது ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலே எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்போது கூட எனது யேர்மனிய நண்பிகள் அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.

ஆனாலும் தமிழில் எதுவும் கிடைக்காதது பெரும் குறையாகவே இருந்தது.
அது கிடைக்க கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

வலைவலம் 27.6.2004


ஈழநாதன் தன்பணியை செவ்வனே தொடர்கிறார்.
நான் தினம் தரிசிக்கும் பதிவுகளில் இதுவும்
(ஈழத்து இலக்கியங்களின் வரலாற்றுப் பதிவு )
ஒன்று.

Saturday, June 26, 2004

வலைவலம் 26.6.2004


எழுத்து ஒரு தனி உலகம். தினமும் கொஞ்ச நேரம் அந்த உலகத்துக்குள் எட்டிப் பார்த்து விட்டு வருவதை பழக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். எதை எழுத வேண்டும் என்பதை விட, எதை எழுதக் கூடாது என்பதே எழுத்தாளன் ஆக விரும்புபவன் முக்கியமாய்த் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அநாவசியமாய்க் கதையில் ஒரு வரி கூட வைக்க வேண்டாம். அப்புறம் கதையை வெட்டி விட்டார்கள், சிதைத்து விட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் கதை கெட்டு விடும் என்கிற மாதிரி நறுக்கென்று எழுதிப் பழக வேண்டும்.

இதை நான் சொல்லவில்லை.
இது ராஜேஸ்குமாரிடம் இருந்து சத்யராஜ்குமார் கற்றுக் கொண்டது.

என்னை எழுதியவர்கள் என்று சத்யராஜ்குமார் தமிழ்ஓவியத்தில் தரும் சுயசரிதமே ஒரு சுவையான கதையாகத் தொடர்கிறது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite