Monday, February 07, 2005

இதமான பொழுதுகளில் ஒன்று.

சனி நீராடு என்று சொல்லி ஊரில் சனிக்கிழமைகளில் நீராடுவதும் அதற்கு முன் எண்ணெய் தேய்த்து உடலை மசாஜ் செய்விப்பதுவும் ஆண்களுக்குரிய விடயங்களாகவே இருந்தன.

மசாஜ் செய்விப்பதற்கென்று ஆண்கள்தான் உரிய இடத்துக்குப் போய்வருவதை நான் கண்டிருக்கிறேன். வீடுகளில் கூட காலை அமுக்கி விடுவதும் கையைப் பிடித்து விடுவதும் ஆண்களுக்கே செய்யப் பட்டன.

பெண்களுக்கு இந்த சுகங்கள் தேவையில்லை என்று கருதி விட்டார்களோ என்னவோ..?

தப்பித்தவறி ஒரு ஆண் அதாவது ஒரு கணவன் தனது மனைவிக்கு கால் கை பிடித்து, அதையும் யாராவது பார்த்து விட்டால் போதுமே. ஊர் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரித்தான். மென்று தள்ளி விடுவார்கள்.

ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல. பெண்களுக்கு மசாஜ் அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்து. ஆண்களுக்கும் கிடைக்கும்தான். ஆனால் பெண்களைத்தான் அடிக்கடி மசாஜ் செய்விக்க அனுப்புவார்கள்.

கணினிக்கு முன் அதிகமாக இருப்பவர்கள், நிறைய எழுதுபவர்கள்... என்பதில் தொடங்கி மனஅழுத்தத்துக்கு ஆளானவர்கள் வரை என்று பலரும் தோள்மூட்டுகளிலும், கழுத்துப் பகுதியிலும் ஏற்படும் இறுக்கத் தன்மையால் பாதிக்கப் படுகிறார்கள். இந்தப் பாதிப்புகள் பெண்களைத் தாக்குவதற்கான காரணிகள்தான் அதிகம் என்பது மருத்துவர்களின் கருத்து. இதற்கு மருத்துவரீதியான உடற்பயிற்சியோடு மசாஜ்யும் அவசியம் என்பதுவும் அவர்களின் கருத்து.

இந்த மசாஜ் செய்விப்பது இருக்கிறதே மிகமிக இதமான ஒரு விடயம். இதற்கென்றே படித்த பெண்கள் (ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள்தான் இதில் வல்லுனர்கள்) கைவிரல்களினால் மெதுமெதுவாக எமது தோள்களிலும், முதுகிலும் லாவகமாக அழுத்தி குறிப்பிட்ட நரம்புகளையும் மசில்ஸ்களையும் கண்டு பிடித்து.... அது மிக மிக இதமான விடயம்.

இந்தச் சலுகையை நான் தவற விடுவதே இல்லை. அடிக்கடி வைத்தியரிடம் சென்று எனது தோள்மூட்டு இறுகி விட்டதைச் சொல்லி மசாஜ் செய்விப்பதற்கான அனுமதியை எடுத்து விடுவேன். மருத்துவரின் அனுமதியுடன் செய்விக்கும் போது மருத்துவக் காப்புறுதி நிறுவனமே இதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும். ஒரு சிறுதொகையை மட்டுமே நான் கட்ட வேண்டி இருக்கும். (ஒரு தடவை மருத்துவர் எழுதித் தந்தால் ஆறு தடவைகள் மசாஜ் கிடைக்கும். ஆறு தடவைக்குமாக நான் கொடுக்கும் பணம் ஒரு தடவைக்கான பணத்தை விடக் குறைவாகவே இருக்கும்.) ஆனால் இந்த சலுகைகளை எங்கள் தேசத்துப் பெண்கள் அவ்வளவாகப் பயன் படுத்துவதில்லை. நானோ அந்தப் பொழுதுகளை மிகுந்த ஆத்மார்த்தமான உணர்வுடன் அனுபவிப்பேன்.

இந்த மசாஜ்யை கணவன்மார்கள் கூட மனைவியருக்குச் செய்யலாம். கற்றவர்கள் போலச் செய்ய முடியாவிட்டாலும் களைத்துப் போயிருக்கும் மனைவியின் தோள்களை இதமாக அழுத்தி விடுவது மனைவியின் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் மிகவும் இதமாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு மருத்துவர் சொன்னார் இந்தத் தொடுகைகளே உடலின் முக்கால்வாசி வருத்தங்களைத் துரத்தி விடும் என்று.

இதற்கென்று கற்றவர்கள் அன்றி வேறுயாரும் இப்படியான மாசஜ்களை செய்யக் கூடாது என்று சொல்வார்கள். உண்மைதான். கற்றவர்கள் போல நரம்புகளைத் தேடி அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் எலும்புகள் அழுத்தப் பட்டு விடும்.

மௌனமாக..

மனஓசை இன்று முழுக்க மௌனமாகவே இருந்து விட்டது.
ஒரு முக்கிய வேலை இருந்ததால், சில தடவைகள் முயன்றும், மனதை ஒரு நிலைப்படுத்தி இங்கு எதுவும் எழுத முடியாது போய் விட்டது.

அது மட்டுமா இந்த டயானாவின் பதிவு மீண்டும் மீண்டுமாய் என்னுடன் சவால் விட்டுக் கொண்டே இருக்கிறது. அப்பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. சரியென்று மனஓசையைப் பதிந்து உள் நுழைந்தால் அப்பதிவையே காணவில்லை. இந்த இலட்சணத்தில் இனி நான் பதியப் போகின்றவை என்ன ஆகுமோ..?

Monday, January 31, 2005

காணாமற் போய்விட்டது.


எனது பதிவொன்று பதிந்த உடனேயே காணாமற் போய்விட்டது.
ஏன்..?
தொடரும் இப்பிரச்சனைக்கான நிவர்த்தியை யாராவது கண்டு பிடித்தீர்களா?

இட்லி செய்யும் இன்னுமொருமுறை


நா.கண்ணன் இட்லி செய்யும் முறையைத் தந்துள்ளார்.
எனக்குத் தெரிந்த இன்னுமொருமுறை.

உழுந்தை ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். (ஏறத்தாழ 7-8 மணித்தியாலங்கள். குளிர் பிரதேசங்களில் ஊறுவதற்கு ஊரை விடக் கூடிய நேரம் தேவைப் படுகிறது.) பின்னர் கழுவிச் சுத்தம் செய்து, பசுந்தாக அரைத்தெடுங்கள்.

1கப் உழுந்துக்கு 2கப் ரவை என்ற அளவில் எடுத்து, ரவையை ஆவியில் 20 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.

அவிந்த ரவை நகச்சூட்டுக்கு வந்ததும் அரைத்த உழுந்துடன் சேர்த்து சிறிதளவு உப்பும் போட்டு இட்லியாக ஊற்றக் கூடிய தன்மை வருமளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து 10-12மணித்தியாலங்களுக்கு மூடி வையுங்கள்.

பின்னர் அவித்துப் பாருங்கள். கண்டிப்பாகப் பூப் போல வரும்.

Saturday, January 15, 2005

பதிப்புகளோடு...


அச்சில் பதித்து விட்டு புத்தகங்களை விற்கவும் முடியாமல், வீட்டில் வைக்கவும் இடமில்லாமல் கட்டியழுபவர்கள் ஒரு புறமிருக்க சந்தா கட்டியிருந்தும், புத்தகங்கங்களும், பத்திரிகைகளும் இடைநடுவில் வராது நின்று விடுவது இன்னொருபுறம் நடக்கிறது. இது விடயத்தில் இராதாகிருஷ்ணன் கொஞ்சம் மனம் நொந்திருக்கிறார்.

இந்த நிலையில் எந்த சந்தாவும் கட்டாமல் முழுக்க முழுக்க இலவசமாய் என் வீடு தேடி வரும் பத்திரிகைகளையும் அதை அனுப்பி வைக்கும் உரிமையாளர்களையும் நான் நன்றியோடு அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

முதலாவதாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக லண்டனிலிருந்து என் வீடு தேடி வரும் வடலி பத்திரிகை. இப்பத்திரிகையில் நல்ல நல்ல பயனுள்ள கட்டுரைகள் இடம் பிடித்திருக்கும்.

அடுத்து, தற்போது சில மாதங்களாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் லண்டனிலிருந்து என் வீடு தேடி வரும் ஒருபேப்பர் பத்திரிகை. இப்பத்திரிகை வருகின்ற ஒவ்வொரு முறையும் எனது பிள்ளைகள் அதன் லேஅவுட்டையும் பெயரையும் வைத்து சிரிப்பலைகளோடு ஒரு விமர்சனம் செய்யாமல் விடுவதில்லை. உள்ளடக்கம் கூட சுவை சுவாரஸ்யம் கலந்து பயனுள்ள விடயங்களோடுதான்......

Thursday, January 13, 2005

தேடல்




அலை கொண்டு போனவர்களை
அல்பத்தில் தேடுகிறான் இவன்

Wednesday, January 12, 2005

தேடல்




உறைவிடத்தையும்
உடைமைகளையும் மட்டுமல்ல
கடல் கொண்டு போன
உறவுகளையும் தேடுகிறான் இவன்

Tuesday, January 04, 2005

TRO

Pls visit http://www.tsunami-trocsc.com/home/

இப்படியம் சிலர்

இன்று ஒரு தொலைபேசி அழைப்பு இந்தப் பத்திரிகையில் இருந்து வந்தது.
இந்தச் செய்தியை அவர்களது பத்திரிகையில் பார்த்து விட்டு ஒரு தமிழன் தொலைபேசியில் அழைத்து
"நீங்கள் எப்படி இந்தச் செய்தியை உங்கள் பத்திரிகையில் போடலாம்.
TROவும் Tigerம் ஒன்றுதானே. நீங்கள் கொடுக்கும் காசெல்லாம் Tigerக்குத்தானே போகுது...." என்று சண்டை போட்டாராம்.

இப்படி ஒரு தமிழனே சொன்ன பின் தாம் என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். ஒரு தமிழனே சொன்ன பின் தாம் அந்தச் செய்தியைப் போட்டதற்காக வருந்துகிறோம் என்றார்கள்.

எவ்வளவோ கதைத்தும் அவர்கள் திருப்தி அடையவில்லை.
ஒருவேளை நாளைய அவர்கள் பத்திரிகையில் TROவுக்கு உதவி செய்ய வேண்டாமென்ற செய்தி வரலாம்.

நாடு நலிந்து கிடக்கிறது. உதவி தேவைப்படுகிறது. அதை TRO செய்கிறது. அதைக் கெடுக்க எப்படி இவர்கள் துணிகிறார்கள். மனிதநேயத்தை மறந்து போனார்களோ? கோபதாபங்களைப் பார்க்கும் நேரமா இது? எல்லோரும் ஒன்று கூடி உதவ வேண்டாமா?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite