Thursday, February 24, 2005

கண்டு பிடிப்பு

காணாமற்போகும் பதிவுகள்


தற்போது நேசகுமாருக்கு இப்பிரச்சனை வந்துள்ளது. எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது. என்னைப் போல இன்னும் பலருக்கு இருந்தது.

ஒவ்வொன்றாகச் செய்து பார்த்து, ஒரு விடயத்தைக் கண்டு பிடித்தேன். தலைப்பு எப்போதும் சிறிதாக இருக்க வேண்டும். பெரிய தலைப்புகளில் போடப் பட்ட விடயங்கள்தான் காணாமற் போகின்றன.

இது எனதே எனதான கண்டு பிடிப்பு. அதனால் சரியோ! பிழையோ! என்பதை நீங்களும் செய்து பார்த்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் இந்த Title விடயத்தில் நான் கவனமெடுக்கத் தொடங்கிய பின் எனது பதிவில் காணாமற் போவது நின்று விட்டது.

Wednesday, February 23, 2005

தப்பான கணிப்புகள்


ஒருவரை முதன் முதலாகப் பார்க்கும் போது அவரது தோற்றம் எப்படியிருக்கிறதோ (அதாவது உடை நடை எல்லாமே.. எப்படியிருக்கிறதோ) அதை வைத்துத்தான் அவர் உடனடியாகக் கணிக்கப் படுகிறார் என்பதை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரியவர் அழகிய கவிதை போல நான்கே வரிகளில் சொல்லியிருந்தார். யார் அவர்? எப்படிச் சொன்னார் என்பதெல்லாம் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. ஒருவர் தேர்ந்தெடுக்கும் உடை முக்கியமானதுமானதுதான். அதை நான் மறுக்கவும் இல்லை. புறத்தோற்றம் என்பதும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றுதான். அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.

அதற்காக
காதில் வளையம் வளையமாகத் தோடுகள் கழுத்திலே தூங்கும் நாய்ச்சங்கிலிகளுடன் உலாவரும் எம்மவர்கள், மைக் பிடித்து ரப் பாடும் இளஞர் இளஞிகள் போன்றோரை நண்பர்களூடும் செய்திகளுடூம் பார்த்தும் கேட்டும் வந்ததால் இதுவும் ஆயிரத்தில் ஒன்று என்றே எண்ணத் தோன்றியது. இப்படியான கணிப்பை சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தொள தொளா ரவுசரும், மொத்தச் சங்கிலியும், காதில் வளையமும் போடுகின்ற இளைஞனையோ இளைஞியையோ நாட்டுப் பற்று இல்லாதவரென்றும், மேலைத்தேயக் கலாச்சாரத்துள் தன்னைத் தொலைத்து விட்டார் என்றும் எடை போட்டு விட முடியாது. இத்தனையும் போட்டுக் கொண்டு நாட்டுப் பற்றோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவை எதுவுமே போடாமல் தாய்நாட்டைப் பற்றிய அக்கறை துளி கூட இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபம் தொலைக்காட்சியில் "அன்பே சிவம்" படம் ஒளி பரப்பானது. அதிலே கூட ஒரு கருத்து வருகிறது. மாதவன், பார்ப்பதற்கு அநாகரீகமாகத் தெரியும் கமலகாசனை தலையிடி பிடிச்ச ஆள் என்ற மாதிரி எண்ணுகிறார். அதே நேரத்தில் ரெயினுக்குள் நல்ல desent ஆக உடை அணிந்து decent ஆகப் பேசத் தெரிந்த ஒருவரிடம் ஏமாந்து போகிறார்.

இதே போலத்தான் புலம்பெயர் இளைஞர்கள் மேலிருக்கும் தப்பான பிரமையும். இந்தப் பிரமை இன்னும் எம்மவரை விட்டுப் போகவில்லை. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எழுபதுகளில் எம்மவர்கள் பெல்பொட்டம் போடவில்லையா. அதற்கும் முன்னர் எம் மூதாதையர் கடுக்கன் போடவில்லையா? வேட்டி, சாரம், குறுக்குக்கட்டு...... என்று வாழ்ந்த சமூகம் இன்று ரவுசர் காற்சட்டை என்று போட்டுக் கொண்டு திரியவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இன்றைய இளைய சமூகத்தை குற்ற முலாம் பூசிய பூதக்கண்ணாடி வைத்து ஏன் பார்க்க வேண்டும்.

காலஓட்டத்தில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையே. அதே போல வாழும் இடங்களினாலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்களை வைத்து புலம்பெயர் இளைஞர் சமூகத்தைக் கணிப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமே.

Thursday, February 17, 2005

பனி கொட்டுகிறது

யேர்மனியில் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது. நானிருக்கும் இடமோ மலைப்பகுதி. வீட்டுக்குள்ளிருந்து பனியைப் பார்க்கும் போது கொள்ளை அழகு. பனிப்பூத்த மரங்கள்... பனி போர்த்திய வீடுகள்... அவைகளை ரசிப்பதில்தான் எத்தனை சுகம். வெளியில் இறங்கி பனிக்குள் கால் புதைத்து நடக்க வேண்டுமென்ற குழந்தைத்தனமான ஆசை.

நேற்று அந்த ஆசையைத் தீர்த்துக் கொண்டு போய் பேரூந்துக்காகத் காத்திருந்த போதுதான் அலுப்புத் தட்டியது. வாகனங்கள் எதுவுமே வழமை போல குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து சேரவில்லை. ஆங்காங்கு தடம் புரண்டு போனவையும், மதில்களிலும் மரங்களிலும் மோதியவையும், சில்லு சுற்றவே மறுத்ததால் நின்று போனவையும் என்று... வேலைக்கு யாருமே நேரத்துக்குப் போய்ச் சேரவில்லை.

இன்றும் அதே நிலைதான். காலை எழுந்ததிலிருந்து பனியை அள்ளிக் கொட்டுவதே முக்கிய பணியாய் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. யாராவது எவரது வீட்டின் முன்பாவது வழுக்கி வீழ்ந்து, அங்கு நோகுது, இங்கு நோகுது என்று வழக்குப் போட்டார்களோ..!
வீட்டின் முன்னுள்ள பனியை அள்ளாவதர் பாடு திண்டாட்டமாகி விடும். என் வீட்டின் முன் மீண்டும் குவிந்து விட்டது. அள்ளி விட்டு அல்லது தள்ளி விட்டு வருகிறேன்.

Tuesday, February 15, 2005

பாடலைக் கண்டு பிடியுங்கள்


வழமையாக பாலாதான் பல்லவியும் சரணமும் என்று தன் பதிவுக்கு எங்களை சந்தோசமாக அழைப்பார். இன்று ஒரு மாற்றத்திற்காக பாடல்களிலிருந்து எனக்குப் பிடித்த சில இடைவரிகளைத் தருகிறேன். பாடலைக் கண்டு பிடியுங்கள். முடிந்தால் படம் பாடியவர் போன்றவற்றையும்.

1)நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

2) உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும்
என் தோட்டப் பூவெல்லாம் காணாமல் வாடும்
மரம் என்னைத் தேடி கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றிப் போகும்

3)விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

4)விண்மீன்களைக் கேட்டால் அண்ணன்கள் எல்லாம்
பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால் ஏணியில் ஏறி
ஒடித்து ஒடித்துத் தருவார்கள்

5) பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?


6) எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்க்கை போல எண்ணங்கொள் வாழ்வது துயரமில்லை
எந்த மேடை என்பதை அன்பே மறந்து விடு
ஏற்றுக் கொண்ட பாத்திரம் அதிலே கலந்து விடு

7)...... மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது..

பேச முடியவில்லையே..

8) சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
மார்பினை காட்டுதடா..!

9) முகிலனங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ


10) நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது
பெருவிரல் துடைத்து விடும்
புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்

Sunday, February 13, 2005

புனைபெயரில் எழுதுகிறீர்களா?


புனைபெயரில் எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மற்றவர்களைச் சாடவும், எழுத்துக்களால் மற்றவர்களை வெட்டவும், கொத்தவுமே சிலர் புனைபெயர்களைப் பாவிக்கிறார்கள். சிலரோ புனைபெயரால் சமூகத்துக்குத் தேவையான பல விடயங்களைச் சொல்கிறார்கள். சிலர் தம்மீது தமக்கே நம்பிக்கையில்லாமல் புனைபெயரில் எழுதுகிறார்கள். இப்படிப் பல காரணங்கள் புனைபெயரில் எழுதுபவர்களிடம் உண்டு.

புனைபெயரில் எழுதுபவர்களை முகமூடிகள் பயந்தாங்கொள்ளிகள்... என்றெல்லாம் சிலர் சாடுகிறார்கள்.

இது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
நீங்கள் புனைபெயரில் எழுதுகிறீர்களா?
எழுதினால் அதற்கான காரணம் என்ன?

ஒரு சில பதிவுகள்


இன்றைய வலைவலத்தில் பிடித்த, மனதைத் தொட்ட அல்லது மனைதைப் பாதித்த பதிவுகளில் ஒரு சில
மதம் பிடிக்கும் முறை
படித்துக் 'கிழிக்கும்' வாசகர்கள்

என்னை வியக்க வைக்கும் வலைப்பதிவாளர்களில் இவர் முக்கியமானவர். இவரது படிப்பகம், சலனச்சுருள் படைப்பு .. போன்ற பதிவுகள் உடன் சுவாரஸ்யத்தையும் விட என்றைக்கும் பயனானவை.

காதலே நிம்மதி


இன்று தீபத்தில் "காதலே நிம்மதி" படம் போட்டார்கள். படம் தொடங்கி 15 நிமிடங்களின் பின்தான் எதேச்சையாகத் தொலைக்காட்சியின் முன் போனேன். நாசரும் மனைவியும் கோயிலுக்குள் கும்பிட, கதாநாயகி நாசரின் குட்டி மகளுடன் ஒழிந்து விளையாட.. படத்தைப் பார்க்கும் எண்ணமும் வந்தது. படம் சொல்ல வந்த விடயம் பிடித்திருந்தது.

பெற்றோர்கள் என்ன ஏது என்று ஆராயாது எடுத்த உடனேயெ பருவ வயதுப் பிள்ளைகள் மேல் சந்தேகப் படுவதும் அதனால் வந்த சிக்கல்களுமே படமாக்கப் பட்டிருந்தது. பிள்ளைகள் யாரோடு பேசினாலும் யாரோடு சிரித்தாலும் எப்போதுமே சந்தேகக் கண்களுடன் பார்க்கும் பெற்றோருக்குப் படிப்பினையான ஒரு படம்.

காதல் - நல்ல படம்


"அம்மா காதல் படத்தை ஒருதரம் பாருங்கோ. நல்ல படம்" என மகன் திலீபன் சொன்ன போது காதல் இல்லாத படங்களா..? என நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அவன் சொன்னால் படம் நல்லாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும் வந்தது. இருந்தும் உடனே பார்க்கும் எண்ணம் வரவில்லை.

சுனாமியின் அவலங்களில் மனசு கனத்துப் போயிருந்த ஐனவரியில் ஓர்நாள் அவன் வீட்டுக்குப் போன போது அவன் கட்டாயப் படுத்தியதில் பார்க்க வேண்டியதாகி விட்டது. அரைமனதுடன்தான் பார்க்கத் தொடங்கினேன்.

சினிமாத்தனம் அதிகம் இல்லாத சினிமாப்படம். வழமையான காதல்தான். வழமையான எதிர்ப்புத்தான். ஆனாலும் படத்தை எடுத்த விதத்தில் ஏதோ ஒரு இயல்பு கலந்த சிறப்பு. பிடித்திருந்தது.

பின்னர்தான் வலைப்பதிவுகளிலே இப்படத்துக்கு மற்றவர்கள் எழுதிய விமர்சனங்களை பார்க்கும் போது வாசிக்க மனசு விரும்பியது. boopathy போன்று அனேகமான எல்லோருமே ஒற்றை வரியிலாவது நல்ல படம் என்றுதான் எழுதியிருந்தார்கள். karthikram நல்ல படந்தான் என்று சொல்லி விட்டு சில குறைகளையும் எழுதியிருந்தார். ரோசாவசந் எடுத்த எடுப்பில் நல்ல படம் என்று முத்திரை குத்தி விட்டு பின்னர், வேறு பல கோணங்களிலும் பார்த்து குறைகளையும் எழுதியிருந்தார். குறைகள் இருக்கலாம். ஆனாலும் வழமையான படங்களிலிருந்து நிறையவே முன்னேறியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஓ... இதுதான் காதலா !


அன்பே
உனக்கும் எனக்கும் என்ன சொந்தம்
உன்னோடு எனக்கென்ன பந்தம்

அலைஅலையாய் உன் நினைவு வந்து
என் மனமலையில் மோதுகையில்
சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன்
ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.

தொலை தூரம் நீ வாழ்ந்தாலும்
உன் நினைவுகளோடுதான் நான்
தினம் வாழ்கிறேன்.

குளிரிலே இதமான போர்வையாய்
வியர்க்கையில் குளிர் தென்றலாய்
மழையிலே ஒரு குடையாய்
வெயிலிலே நிழல் தரு மரமாய்
தனிமையில் கூடவே துணையாய்
கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்.....
உன் நினைவுகள் எப்போதும்
என்னோடுதான்

ஓ... இது தான் காதலா!
இது காதலெனும் பந்தத்தில்
வந்த சொந்தமா?
உனக்கு ஒன்று தெரியுமா?
திருமணத்திலும்
உடல் இணைவதிலும்தான்
காதல் வாழுமென்றில்லை
அன்பு நூலின் அதிசயப் பிணைப்பில்
நெஞ்சில் வாழ்வதும் காதல்

நினைவுகளின் தொடுகையிலே
உயிர்ப் பூக்கள் சிலிர்க்கின்ற
என் மனமென்னும் தோட்டத்தில்
உனக்காகத் துளிர்த்த காதல்

இன்று எனக்குள்ளே
விருட்சமாய் வியாபித்து
பூக்களாய் பூத்துக் குலுங்கி
அழகாய்
கனி தரும் இனிமையாய்

இது நீளமான காலத்தின்
வேகமான ஓட்டத்திலும்
அன்பு வேரின் ஆழமான ஊன்றலில்
நின்று வாழும் உண்மைக்காதல்

சந்திரவதனா
யேர்மனி
February-1999

ஒரு பிரச்சனை


என்னுடைய profileக்குப் பானால் Recent Posts 7.11.2004 உடனேயே நிற்கிறது. அதற்குப் பின்னர் எழுதிய எதுவுமே வருகுதில்லை. காரணம் யாருக்காவது தெரியுமா?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite