Wednesday, August 18, 2004
தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்
வலைப்பதிவுகளின் பட்டியல் அழகான முறையில் தமிழ் மணத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. உரியவர்கள் அறிமுகப் படுத்த முன் இவ்வார வலைப்பூ ஆசிரியர் சந்தோஸ்குரு முந்திரிக் கொட்டையாகி விட்டார்.
Tuesday, August 17, 2004
மனமுள் - குறும்படம்
சுமதி ரூபனின் மனமுள் படத்துக்கான விமர்சனங்கள் சில Thamilfilmclub இல் எழுதப் பட்டுள்ளன. வாசித்துப் பாருங்கள். முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் வையுங்கள்.
செருப்பு - குறும்படம்
யாழ் இணையத்திலும், அப்பால் தமிழிலும் இலங்கையில் உருவாக்கப்பட்ட
"செருப்பு" என்னும் குறும்படம் இணைக்கப்பட்டுள்ளது. பாருங்கள்.
முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் வையுங்கள்.
Saturday, August 14, 2004
ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்
அன்று ஈழத் தமிழ் மக்களை இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த
ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்
இன்று மீண்டும் வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது.
நீறு பூத்திருந்த விடயம் மீண்டும் நெருப்பாகியுள்ளது.
இதையெல்லாம் வலைப்பதிவுகளில் தேடித் தொகுத்து
நண்பர் BBC யாழ் கருத்துக்களத்தில் பதிந்து கொண்டு
வருவது மிகப் பெரிய உதவியாக உள்ளது.
Thursday, August 12, 2004
ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்
கனடாவிலிருந்து ஒல்கார் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களுக்கு உதவு முகமாக அவர்கள் தந்த அறிவித்தல் ஒன்றை எனது மனஓசையிலும் இன்னும் பல இடங்களிலும் பதித்தேன். இங்கே எனதான உதவும் நோக்கம் முழுமன ஈடுபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில் அவர்கள் ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் என்ற தலைப்பில் இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த போதான ஒவ்வொரு அவலங்களையும் சேகரித்து ஒரு புத்தகமாகப் பதியப் போகிறார்கள்.
இந்த அறிவித்தலை எனது மனஓசையில் பதிந்த பின் அது பற்றியதான சர்ச்சைகள் வலைப்பதிவுகள் சிலவற்றில் இடம் பெற்றது பற்றி சுந்தரவடிவேல் எனது பதிவில் சுட்டும் வரை நான் அறியவில்லை. சமீபத்தில் எனக்கு வந்த சில மின்னஞ்சல்கள் கூட இந்திய இராணுவம் சம்பந்தமானதாக இருந்தது என்னுள் கேள்விக் குறியாகியதே ஒழிய விபரம் புரியாதிருந்தது.
முதலில் சுந்தரவடிவேலுக்கு நன்றி. சுந்தரவடிவேலின் சுட்டலின் பின்தான் நேற்று முன்தினம் வந்தியத் தேவனின் எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள் பதிவைப் பார்த்தேன்.
வந்தியத்தேவனின் ஆதங்கத்துக்கு என்னால் அரசியல் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. அரசியல் எப்போதும் அரசியல்தான். அதற்குள் நான் தலைப்போடவில்லை.
ஆனால் அந்தக் கவிதை....! அது என்னது அல்ல. அது ஒல்கார் குழுவினரால் எழுதப் பட்ட அறிவித்தலில் உள்ள கவிதை. அது அவர்களில் ஒருவரால் எழுதப் பட்டது.
அந்தக் கவிதையில் உள்ள வரிகள்
நாட்களின் நகர்வுகளில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு
தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் முடியவில்லை
இன்னும்..........
பொய்யில்லை. இந்த வரிகள் பொய்யில்லை.
எங்கள் தேசத்தின் மீது, எங்கள் வாழ்வின் மீது, எங்கள் சுயத்தின்... மீது இந்திய இராணுவமும் நெருப்பள்ளிக் கொட்டியது என்பது மறுக்கப் பட முடியாத, மறக்கப் பட முடியாத உண்மை.
தொடரும்இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?
அர்த்தமற்றதாகவே எனக்குப் படுகிறது.
இந்திய இராணுவத்தையும் இந்திய மக்களையும் ஒன்றாக ஏன் பார்க்க வேண்டும்.
சிங்கள இராணுவத்திடமிருந்து தமிழர்களைப் பாதுகாத்தவர்களில் சிங்கள மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பதவியைத் துர்ப்பிரயோகம் செய்யும் இராணுவத்தையும், மனித நேயமிக்க சாதாரண பொது மக்களையும் எந்தக் காலத்திலும் ஒன்றாகப் பார்க்க முடியாது.
நாட்டுப் பற்றோடு போர் புரிய வந்தவன் எவனும் காட்டு மிராண்டித்தனமானவனாய்.. உடலிச்சை கொண்ட வெறித்தனமானவனாய்.... போர் தர்மத்தை மறந்த அதர்மவாதியாய் இருக்க மாட்டான். எந்த அரசியல் வலைகளில் அவர்களில் சிக்கியிருந்தாலும்... யாரது பகடைக்காய்களாக அவர்கள் ஆகியிருந்தாலும்.. அவர்கள் செய்தது அவர்களது தனிப்பட்ட இச்சையினாலான செயற்பாடுகள்.
Tuesday, August 10, 2004
ஈழத்தில் இந்திய இராணுவக் காலம்
நினைத்தாலே மனசு குருதி வடிக்கும் விதமாக அமைதி காக்க என்று சொல்லி வந்திறங்கிய இந்திய இராணுவம் எம் மண்ணில் ஆடி விட்டுச் சென்ற அகோரத் தாண்டவம் பற்றியும், செய்து விட்டுச் சென்ற அநியாயங்களினாலான ஆறாத வடுக்கள் பற்றியும்,எழுதி முடிக்க முடியாது.
செய்ததையும் செய்து விட்டு தாம் எதற்காகப் போனோம் என்பதையோ, அதன் அரசியல் காரணங்களையோ, போன வேலையை இராணுவம் செய்ததா, இல்லையா, ஏன் இல்லை என்பதையோ சொல்லாமல், மாறாக எப்படி அவ்வூரிலிருந்த ஒரு பெண்ணை படிப்படியாக மயக்கிப் படுக்கை வரை அழைத்துச் சென்றனர் என்பது பற்றி வீரப்பிரதாபம் செய்திருக்கிறார்கள் என்பதை சுந்தரவடிவேலின் பதிவின் மூலம் அறிந்த போது இன்னும் மனசு கொதிக்கிறது.
இன்னும் இவர்களது வெறியாட்டம் பற்றி கரிகாலனும், ஈழநாதனும்
பதிந்துள்ளார்கள்.
Sunday, August 08, 2004
வலைவலம் - 8.8.2004
திருட்டுத்தனமா ஒரு கணவன் மனைவியின் டயறியைக் குறிப்பைப் படிச்சுப் பார்த்திருக்கிறார் ராசாதிராசா.செய்யிறதைத்தான் செய்தார். தவறுக்குத் துணையாக வள்ளுவரையும் அல்லவா அழைத்திருக்கிறார்
Saturday, August 07, 2004
Troya
இவ்வார வலைப்பூ ஆசிரியர் கார்த்திகேயன் சரித்திரங்களைத் தொட்டிருந்தார். சுவையாக இருந்தது. அவர் Troya படம் பார்த்து விட்டு அது பற்றி தனது பதிவில் எழுதியுள்ளார்.Troya படத்தை நானும் பார்த்தேன். எனக்கு நல்லாகப் பிடித்திருந்தது. எனது நாட்டிலும் போர் சூழ்ந்திருப்பதாலோ என்னவோ அப்படம் என்னை வெகுவாகப் பாதித்தது என்றே சொல்லலாம். அரச குடும்பம் என்கிறோம். அவர்களும் மனிதர்கள்தான். போர் என்ற ஒன்றால் அவர்கள் படும் துயர்.. பிரிவு.. எல்லாமே என்னைப் பாதித்தன. கதை வசனங்கள்.. அருமை. தமிழ்படங்களில் போல நீட்டி முழக்காது, நறுக்கென்று அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் பெறுமதி. தமிழ்ப்படங்களும் இப்படி எடுக்கப் படவேண்டும்.
கார்த்திகேயன் இரு கேள்விகள் கேட்டு விட்டு பதில் தராது போய் விட்டார்.
கேள்விகள்-
* 1960-களில் சைனா நம் மீது படை எடுத்தது. ஆனால் அதுக்கு முன்னாடியே ஒரு இந்திய மன்னர் சைனா மீது படை எடுத்திருக்கிறார். யார் அவர்?
* 1500-களில் உலகின் மிகப்பெரிய நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை வகித்தது ஒரு இந்திய நகரம். அது எது?
Friday, August 06, 2004
வலைவலம் 6.8.2004
நான் சற்றுத் தாமதம். நேற்றுத்தான் சத்யராஜ்குமாரின் என்னை எழுதியவர்கள் 10வது அங்கம் வந்தது பற்றி எழுதினேன். இன்று தமிழ்ஓவியம் பக்கமாகப் போனால் 11வது அங்கமும் வந்து விட்டது. அதில் அவருக்குப் பரிசு கிடைத்த அந்நிய துக்கம் பற்றியும் குறிப்பிட்டுள்ள்ளார். கூடவே பராவின் பக்கமும் அழைத்துச் செல்கிறார். பாரா நாவல் எழுத.. சில ரிப்ஸ் தருகிறார்.
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )