Monday, February 23, 2004

தமிழீழத்தின் தேசியப் பூ


தமிழீழத்தின் தேசியப் பூ

Saturday, February 14, 2004

காதல்

இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.

அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதும், மனைவி கணவனிடத்தே கொண்டிருப்பதும் காதல்தான்.

ஆனால் அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதை பற்று என்றும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதைப் பரிவு என்றும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதை நட்பு என்றும், கணவன் மனைவியிடத்தோ, மனைவி கணவனிடத்தோ கொண்டிருப்பதை அன்பு என்றும் நாம் வகுத்துக் கொண்டுள்ளோம்.

இந்த அன்பு, நேசம், பிரியம், பற்று, பரிவு, நட்பு எல்லாமே காதலென்ற சொல்லினுள்ளேயே அடங்குகின்றன.
இருந்தும் தற்போது காதல் என்பது ஆண் பெண் இடையேயுள்ள அன்பை மட்டும் குறிப்பதாகி விட்டது.

இந்தக் காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் - இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் - பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்........
(காதற்பாட்டு, அந்திப்பொழுது -
பாரதியார் பாடல்கள்)


ஆழமான அன்பு நிறைந்த காதல் ஒருவனுக்கு இன்பத்தையும் இனிமையையும் மட்டுமல்லாது வீரத்தையும் துணிவையும் அறிவாற்றலையும் வாழ்வில் பற்றுதலையும் கொடுக்கிறது. இதை இன்றைய ஆராய்சியாளர்களும் மருத்துவர்களும் மட்டுமல்லாது அன்றைய கவிஞர்களும் அனுபவித்து உணர்ந்து சொல்லியுள்ளார்கள்.

காதல் இல்லாத வாழ்வே இல்லையெனக் கூறலாம்.
அப்படியொரு வாழ்வு இருந்தால் அது அர்த்தம் இல்லாததாகவும், சோகம் நிறைந்ததாகவும், தனிமைப் பட்ட உணர்வைத் தருவதாகவும், தாழ்வுச் சிக்கலைத் தோற்றுவிப்பதாகவுமே இருக்கும்.

மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே காதலும் தோன்றி விட்டது. இதை யாரும் இல்லையென்று சொல்லி விட முடியாது. பண்டைய காலத்திலேயே காதல் ஆதரிக்கப் பட்டுள்ளது. களவியல் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இருந்தும் இடைப்பட்ட காலத்தில் காதல் என்ற வார்த்தையை உச்சரிப்பதே தவறு என்றதொரு தப்பான கருத்து எம்மவரிடையே நிலவியது. இதற்கான முக்கிய காரணம் எம்மவரிடையே தலை விரித்தாடிய சாதி மதம் அந்தஸ்து போன்ற அர்த்தமற்ற காரணங்களே.

இன்றைய போரும் அதனால் ஏற்பட்ட புலம் பெயர் வாழ்வும் எம்மவரிடையே ஆழப்பதிந்து விட்ட இப்படியான சமுதாயச் சீர்கேட்டுச் சம்பிரதாயங்களை முழுமையாக வழக்கொழிய வைக்கா விட்டாலும் ஓரளவுக்குத் திருத்தியுள்ளன.

தற்போது காதலனும் காதலியும் மற்றவர் அறியாமல் ஒருவரை யொருவர் தனியாகச் சந்தித்து மனம் விட்டுப் பேசிக் கொள்ளும் களவியலை பெற்றோர்கள் கண்டும் காணாதவர்கள் போல இருந்து அநுமதிக்கிறார்கள்.

மனம் ஒத்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து மனம் விட்டுப் பேசுவது ஆரோக்கியமானது. அவசியமானது.

மிகமிக நெருக்கமான அன்பின் ஆழ்ந்த வெளிப்பாடே உடல் இணைவு என்றாலும்
காதலர்கள் தமக்கென ஒரு வேலி போட்டு அன்பால் மட்டும் தழுவிக் கொள்வது அழகானது.

உடல்களை விடுத்து
உள்ளங்கள் பரிசிக்கும் காதல்
உன்னதமானது.


சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி

Friday, February 13, 2004

காதலர்தினம்

ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி..........
நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்..............
இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள்.


வலண்டைன் என்ற பாதிரியார்
கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது.

அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி.(14.270)

இந்தத் தினம்தான் காதலர்தினம்.

இது ஏன் வந்தது?
எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா?


கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி - 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள்.
அவனது மந்திரி பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை.
இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் -

திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும்
திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எழுதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து
ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது.
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும்.
இவ் அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும்
கைது செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள். என்ற அறிவிப்பை மக்களுக்குச்
சொல்லும் படி பணித்தான்.
அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள்.
இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார்.

இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார்.
அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின்
கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது.
அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள்.
இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான்.

கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில்
அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த அந்த
அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து
கண்ணீர்ப் ப10க்கள் சொரிந்தன.
அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

விழி இருந்தும்
வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

உன்னுடைய வலண்டைனிடமிருந்து!


அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரிமாறப் படும் வைரவரிகள் இவை.
இதுவே முதல் வலண்டைன் மடல்.

அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார்.
ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம் பாகான்(மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது.
ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் (ளுவ.எயடநவெiசௌ னயல)
உலகம் முழுவதும் கொண்டாடத் தலைப்பட்டது.

இதுவே காதலர்தினம்.

------------------------------------
ஒருவர் இன்னொருவரால் காதலிக்கப் படும் போது
அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன் போராட்டத்திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஒரு படி மேலே சிறந்து விளங்குகிறார் என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு.

இது அன்றைக்கே தெரிந்திருந்தால் அன்றைய ரோமானியச் சக்கரவர்த்தி வலண்டைனுக்கு இப்படியொரு கொடுமையைச் செய்திருக்க மாட்டார்.

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி

Wednesday, February 11, 2004

சுட்டிப்பெண்

முழுவதுமாகக் கணினிக்குள் கவிழ்ந்திருந்த என் கவனத்தைக் கலைக்கும் படியாக வெளியே மாடிப் படிகளில் எதுவோ தொப்.. தொப்.. என்று உருண்டு வீழும் சத்தம் கேட்டது. என்னவாக இருக்கும் என்று அனுமானிக்கக மனசு பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுதுக்குள் ஒரு வீரிட்ட அலறல்.

மனசு பதைக்க.. கதிரையைத் தள்ளிக் கொண்டு எழுந்து ஓடினேன். அது வேறு யாரினதுமல்ல. மேல்வீட்டுப் பெண்குழந்தை டிலாராவினது அலறல். வீழ்ந்து விட்டாளா..? படியில் உருண்டிருப்பாளா..? கணத்துக்குள் மனசு பற்பல கேள்விகளை அடுக்கியது. அவளின் வீரிடல் ஓயவில்லை. படபடப்போடு கதவைத் திறந்து வெளியில் எட்டிப் பார்த்தேன்.



டிலாராவேதான். என் வீட்டு வாயிலிலிருந்து இறங்கும் மாடிப்படிகளின் கடைசிப் படியில் வீழ்ந்திருந்தாள். வாயைக் கூட்டி விரித்து அடித்தொண்டையால் கீச்சிட்டுக் கொண்டிருந்தவள் என்னைக் கண்டதும் சடாரென வீரிடலை நிறுத்தி என்னைப் பார்த்து ஒரு மென்சிரிப்பை உதிர்த்து.. ஒரு கண்ணையும் சிமிட்டினாள்.

என்னடா இது..? வீழ்ந்து கிடப்பவளின் சமிக்ஞை இப்படியா இருக்கும். அதிசயித்தவாறு அவளருகில் விரைந்து.. அமர்ந்து.. வீழ்ந்து விட்டாயா..? எங்கேயாவது அடி பட்டதா..? என்ற படி அவளை என்னோடு அணைத்துக் கொண்டேன்.

இல்லை. என்றாள். மெதுவாக, குசுகுசுப்பாக..

அப்படியானால்...?

மீண்டும் ஒரு கண் சிமிட்டலோடு அவள் படிகளின் பக்கச் சட்டங்களைப் பிடித்து எட்டிக் குனிந்து மேலும் கீழுமாகத் தொடரும் படிவரிசைகளின் நடுவே கீழே நிலத்தில் வீழ்ந்திருக்கும் ஒற்றைச் சப்பாத்தைக் காட்டினாள்.

என்ன..? புரியாமல் வினாவினேன்.

அண்ணா என்ரை சப்பாத்தை எறிஞ்சு போட்டான்.

ஓ... அதுவா..! சப்பாத்து வீழ்ந்த சத்தமா அது..! அதுக்கேன் நீ அழுகிறாய்..?

மீண்டும் ஒரு முறை செயற்கையாய் வீரிட்ட அவள்.. எறிஞ்சது அவன்தானே..! அவன்தான் அதை கீழை இறங்கிப் போய் எடுத்துக் கொண்டு வந்து தரோணும். நான் அழுதால்தான் அம்மா அவனை கீழே அனுப்பி எடுக்க வைப்பா.

எனக்குச் சிரிப்பாய் வந்தது. - சுட்டிப்பெண் - என்று சொல்லி அவள் கன்னத்தைத் தட்டி விட்டு நான் வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்திய கையோடு அவள் மீண்டும் வீரிடத் தொடங்கினாள். அவளது அம்மா தனது பெரிய உடம்போடு இழைத்து இழைத்து இறங்கி வந்து அவள் பிரச்சனை பற்றி ஆராயும் வரை அவள் ஓய மாட்டாள் என்பது எனக்குத் தெரியும்.

(இந்தப் பெண் வேறு யாருமல்ல. அழகு என்று காரணம் சொல்லி என்னைப் பொட்டு வைக்கச் சொன்ன அதே சுட்டிதான் இவள். பழைய வீட்டை விட்டு வந்து விட்டாலும்.. விடாது என்னோடு வந்து விட்ட நினைவுகளில் இதுவும் ஒன்று.)

Photo - Google.de

Tuesday, February 03, 2004

சுதந்திரம்

நாற்பத்தெட்டில்
மாசி நான்காம் நாளில்
நமக்குச் சுதந்திரமாம்

படித்து
பரீட்சை எழுதி
புள்ளிகளும் பெற்றோம்

ஐம்பத்தெட்டில் தமிழன்
அடிபட்டானாம்
கண்களில் அனல் கக்க
அப்பா கதையாகச் சொன்னார்

குருவி போல்ச் சேர்த்த பணத்தில்
குதூகலமாய் தொட்டில் வாங்கி
மகப் பேற்றுக்காய்
வடக்கே சென்ற அம்மாவின்
வரவுக்காய் காத்திருக்கையில்...

அக்கினியில் அத்தொட்டில்
கருகுவதைப் பார்த்தாராம்
மலவாளி தலையில் கவிட்டு
மாமா நடப்பதைப் பார்த்தாராம்
ரயரோடு ஒரு தமிழன்
எரிவதைப் பார்த்தாராம்
இன்னும் அவலங்கள்.....!
எத்தனையோ பார்த்தாராம்

இவையெல்லாம் கதையாக
கொடுங் கதையாக
எனக்குள்ளே பதிந்தாலும்
போன கதைதானே....!
புழுங்காமல் இருந்தேன்

சுதந்திரம் அது என்ன?
புரியாமல் வாழ்ந்தேன்

எண்பத்தி மூன்று ஆடியின்
வெலிக்கடை ஓலத்தில்
சுதந்திரம்!
அது வேண்டும்
எமக்கென
நிரந்தர இடம் வேண்டும்
புரிந்தாலும்.....!
சுயநலம் அது கொண்டு
வெளிநாடு ஓடி வந்தேன்
அந்நியன் மண்ணிலே
அகதி முகாமிலே
வயிற்றுக்காய்......
கன்ரீனில் வரிசையிலும்
காசுக்காய்.....
சோசலிலே கதிரைகளிலும்
மானத்தை விற்று
வேலைக்காய்.....
கால் கடுக்க வீதிகளிலும்
வெள்ளையனின் வாசல்களிலும்
வெட்கத்தை விசிறி
என்னத்தைக் கண்டோம்!
சுதந்திரம் அது என்ன?
மறந்து போச்சு எமக்கு

வேலை கிடைத்தும்
வீடு கிடைத்தும்
விசா கிடைத்தும்
ஈடு கொடுக்க முடியவில்லை
அந்நிய தேச வாழ்க்கைக்கு

ஊரின் அவலங்கள்
உலுக்கும் சேதியாய்
நெஞ்சைக் குடைகையிலும்
வேறு வழியின்றி
ஓடிச் செல்கின்றோம்
அந்நியனின் கீழ்
அடிமையாய் வேலை செய்ய

சுமைகளாய் சோகங்கள்
தொடர்களாய் வேலைகள்
சுதந்திரம் அது வாங்க
ஏணி எங்கே?
தேடுகின்றோம்.

சந்திரவதனா.செல்வகுமாரன்
ஜேர்மனி
4.2.1998

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite