Wednesday, August 24, 2005

புத்தகம் பேசுது இதழுக்கு பாமாவின் பேட்டி-3


புத்தகம் பேசுது இதழுக்கு பாமா அளித்த பேட்டி - 1
புத்தகம் பேசுது இதழுக்கு பாமா அளித்த பேட்டி - 2

பேட்டியின் இறுதிப் பகுதி

கருக்கு போலவே சங்கதியிலேயும் அதே மாதியான மொழிநடை வாழ்க்கைச் சூழலைக் கொண்டு வந்திக்கீங்களே?

இது வேணுமினே பண்ணதுதான் மொழிநடையில் கருக்கு அதுவா அமைஞ்சது. சங்கதி வேணுமின்னே பண்ணது. சங்கதி புத்தகமா வெளியிடணும்கிற திட்டத்தோடயே எழுதின நாவல் நான் சந்தித்த நான் பார்த்த நான் கேள்விப்பட்ட தலித் பெண்கள் பற்றி எழுதப்பட்டது. 2 நாவல்களிலேயும் மொழிநடையை மட்டும் தான் ஒன்னுன்னு சொல்லலாம்.கருக்கிலே இருக்கிற விசயங்கள் வேற சங்கதியிலே இருக்கிற விசயங்கள் வேற கருக்கிலே ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நான் போய்கிட்டே இருப்பேன். என்னோட வாழ்க்கை நூலிழை மாதிரி போய்கிட்டே இருக்கும் அதைச் சுத்தி மற்ற கதாபாத்திரங்களை பின்னி இருப்பேன். ஆனா சங்கதி அப்படி இல்லை. அதிலே மூணு தலைமுறை வரும். குழந்தைப்பருவம,; அடலசண்ட் பருவம், தற்காலத்தில் நான் என்கிற மாதிரி இருக்கும்.

சங்கதி நாவலின் முன்னுரையில் இதனைப் படிக்கும் தலித்பெண்கள் வீறுகொண்டு எழுந்து வெற்றிநடைபோட்டு புதியதொரு சமுதாயம் உருவாக்கும் முன்னோடிகளாக புரட்சியைத் தொடங்கித் தொடர வேண்டும் என்ற ஆசையில் நம்பிக்கையில் எழுதியிருப்பதாக கூறியிருக்கிறீர்கள்;. உங்கள் ஆசை எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கு?

நான் புரட்சின்னு சொல்ல வந்தது. இயக்கரீதியான புரட்சி இல்லை பண்பாட்டுரீதியான புரட்சி. அப்படியான புரட்சி நடந்தது. நடந்துகிட்டிருக்கு. சங்கதியில் வர்ற கேரக்டர்களை பார்த்தீங்கன்னா அவங்க வாழ்க்கையிலே புரட்சி நடந்திருக்கு அவங்க விடுதலை பெற்ற பெண்மணிகளா அவங்க வாழ்க்கையிலே இருக்காங்க. அதுக்காக அவங்க சராசரி பெண்ணோட வாழ்க்கையிலேருந்து முற்றிலுமா வேறுபட்டாங்கன்னு சொல்ல வரலே. அன்றாடம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதிலேயும் அந்தப் பண்பாட்டுப் புரட்சியிலே ஒரு சுதந்திரமான ஜீவிதத்தை கண்டு பிடிக்கிறாங்க. திருமணம், குடும்பம் என்பது நம்மை தடைப்படுத்தக் கூடிய விசயம் என்பதை பல பெண்கள் புரிஞ்சிகிட்டு என்னை ஒரு மாடலா வைச்சுகிட்டு இருக்காங்க.

உங்கள் வன்மம் நாவலில் பள்ளர் பறையர்களுக்கிடையேயான பிரச்சனைகளை எழுதியிருக்கீங்க. தலித் ஒற்றுமை அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதை வலியுறுத்தி இருக்கீங்க தலித் ஒற்றுமையின் மூலமா மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்னு நம்புறீங்களா?

வன்மத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற முக்கிய விசயம் வேறு தலித் உட்பிரிவுகளுக்கும் சரியான புரிதல் இல்லாத இளைஞர்கள் வளர்ந்து வரும் தலைமுறை எவ்வாறு பாதிக்கப்படுகிறது. என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன் உட்பிரிவுகள் ஒற்றுமையோடு சேர்ந்து நிற்கும் போது அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்பதைச் சொல்கிறேன். வன்மம் பழங்கதை கிடையாது. சமகாலப்பிரச்சினை கண்ணாம் பட்டி என்கிற கிராமத்துக்குள்ளே மட்டும் அடங்கிப்போன விசயம் ஒரு வீட்டுக்குள்ளே ரெண்டு பேருக்கு இடையிலே நடக்கிற பிரச்சினை மாதிரி. என்னுடைய ஆதங்கம் என்னன்னா இந்தக் கலவரங்களாலே வளருகின்ற தலைமுறை ஒரு பகைமை உணர்வோடு வன்மத்தோடு வளர்ந்துகிட்டு வருது. இதனால் அவர்களை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை அழித்துக்கொண்டே வருகிறோமே என்பதைச் சொல்வது தான் வன்மம்.

தலித் இயக்கங்கள் இப்போது தான் வளர ஆரம்பிச்சிருக்கு அதுக்கு முன்னாடி தலித்துகளுக்காக போராடின பொதுவுடைமை இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் பற்றிய எந்த பதிவும் உங்கள் படைப்புகளிலே காணோமே?

பொதுவுடமை இயக்கம,; திராவிட இயக்கம் இரணடும் வண்மம் கதை நடந்த அந்த ஊரில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. போதுவுடமை இயக்கத்தில் தலித் மக்கள் அதிகமாக இருக்காங்க. பொதுவுடமை இயக்கங்கள் இப்போதான் சாதியைப்பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனாலும் வர்க்கத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் சாதியத்துக்கு கொடுக்கிறதில்லே. வர்க்கம் ஒழிந்தால் சாதி தானாக ஒழியும்கிறாங்க. அதில எனக்கு நம்பிக்கை இல்லே. என்னதான் வசதியிருந்தாலும் கோடீஸ்வரனாக இருந்தாலும் சாதிய முத்திரைப் போகல. சில பேரு நகர்புறங்களில் சாதிய உணர்வு இல்லைங்கிறாங்க. அப்படியெல்லாம் நிச்சயமா கெடையாது. நகர்புறத்துக்கும் வடிவங்கள்தான் மாறி இருக்கிறதே தவிர மற்றப்படி சாதிய அடையாளம் என்பது செத்து மணண்ணுக்குள்ளே போகிற வரைக்கும் இருக்கத்தான் செய்யுது. அதிலே எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லே. வர்க்;கரீதியாக விடுதலையாகிட்டீங்கன்னா யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. என்பது தான் உண்மை. ஆனால் வர்க்கப்ப் போராட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு சாதி ஒழிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும் தலித் பெண்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டால் அனைவருக்குமே விடுதலை கிடைத்துவிடும்.

உங்க தலித் மொழியை மற்ற மொழிகளுக்கு எந்த அளவுக்கு நுட்பமா கொண்டு போக முடிஞ்சிருக்கு?

தமிழிலேருந்து தெலுங்குக்கும், மலையாளத்துக்கு பண்ணும் போது மொழிநடையை ஓரளவுக்கு மெய்ன்டன் பண்ணமுடியுது. ஆங்கிலம் என்று போகும் போது கொஞ்சம் அடிபடத்தான் செய்யுது. அதுக்காக மொழி பெயர்க்காமலும் இருக்க முடியாது. மோழிபெயர்ப்பின் மூலமாத்தான் தமிழ்நாட்டு தலித் பிரச்சனையை இந்திய அளவிலே சர்வதேச அளவிலே பேசமுடியுது.


லட்சியம்னு ஏதாவது வைச்சிருக்கீங்களா?

எழுதுவது எனக்கு தொழில் கிடையாது. இப்படியான பிரபலம் நான் எதிர்பார்க்காதது. அது பாதிக்காததாலே தான் இன்னமும் எழுதமுடியுது. நான் இங்கே ஒரு சாதாரண ஆசிரியை சாதாரணமா இங்கே குடியிருக்கேன் நான் ஒரு தலித் என்பதாலே தலித் மக்களுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் இயல்பாகவே இருக்கு என் ஸ்கூல் பிள்ளைகளுக்கு என் வாழ்க்கையைத்தான் முன் மாதிரியா சொல்றது. நானும் உங்களை மாதிரி கிராமத்திலிருந்து வந்தேன் கல்வியினாலே நாம் விழிப்புணர்வு அடையலாம் இயற்கையிலே இருக்கிற போராட்ட குணத்தை இன்னும் கூர்மைப்படுத்தலாம். போராடி வாழலாம் என்கிற மாதிரியான தன்னம்பிக்கையை ஊட்டுறேன். இங்கே யாருக்கும் நான் எழுத்தாளரா தெரியாது. அப்படி பெரிய எழுத்தாளரா நான் காட்டிக்கிறதும் கிடையாது. மளிகைக்டைக்காரர், முட்டைக்கடைக்காரர் பேப்பரிலே என் போட்டோவைப் பார்த்துட்டு நீங்க கதை எழுதுகிறவங்களான்னு கேட்பாங்க. அவ்வளவுதான் மக்கள் பிரச்சினையை எழுதணும் வெளிப்படுத்தணும் என்பது தான் முக்கியம் என்னைப் பாதிக்கிற விசயங்களை எழுதுவேன். விமர்சனங்களுக்காக நான் என்னை மாற்றிக்கிட்டு சமரசம் பண்ணிக்க மாட்டேன். விருதுக்காகவோ, அங்கீகாரத்துக்காகவோ எழுதமாட்டேன். விமர்சிப்பது அவர்கள் சுதந்திரம் எழுதுவது என்கடமை.

மகளிர்தினம் பற்றி?

மகளிர்க்கான பிரச்சினைகளை அந்த ஒரு நாளிலாவது எல்லோரும் யோசிக்க வேண்டிய கடப்பாடு இருக்கு. கூட்டங்கள் பேரணிகள் நடக்கும். பெண்களிடமிருந்து புதிய படைப்புக்கள் வரும். அந்த நாளில் மட்டுமில்லாமல் தொடர்ந்து விழிப்புணர்வு வேணும். பெண்களை இழிவுபடுத்துகிற மாஸ்மீடியா மதங்கள் குடும்ப அமைப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட இந்த தினம் பயன்படணும்.

நன்றி - ஊடறு பெண்கள் இதழ்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite