Sunday, February 13, 2005

புனைபெயரில் எழுதுகிறீர்களா?


புனைபெயரில் எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மற்றவர்களைச் சாடவும், எழுத்துக்களால் மற்றவர்களை வெட்டவும், கொத்தவுமே சிலர் புனைபெயர்களைப் பாவிக்கிறார்கள். சிலரோ புனைபெயரால் சமூகத்துக்குத் தேவையான பல விடயங்களைச் சொல்கிறார்கள். சிலர் தம்மீது தமக்கே நம்பிக்கையில்லாமல் புனைபெயரில் எழுதுகிறார்கள். இப்படிப் பல காரணங்கள் புனைபெயரில் எழுதுபவர்களிடம் உண்டு.

புனைபெயரில் எழுதுபவர்களை முகமூடிகள் பயந்தாங்கொள்ளிகள்... என்றெல்லாம் சிலர் சாடுகிறார்கள்.

இது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
நீங்கள் புனைபெயரில் எழுதுகிறீர்களா?
எழுதினால் அதற்கான காரணம் என்ன?

ஒரு சில பதிவுகள்


இன்றைய வலைவலத்தில் பிடித்த, மனதைத் தொட்ட அல்லது மனைதைப் பாதித்த பதிவுகளில் ஒரு சில
மதம் பிடிக்கும் முறை
படித்துக் 'கிழிக்கும்' வாசகர்கள்

என்னை வியக்க வைக்கும் வலைப்பதிவாளர்களில் இவர் முக்கியமானவர். இவரது படிப்பகம், சலனச்சுருள் படைப்பு .. போன்ற பதிவுகள் உடன் சுவாரஸ்யத்தையும் விட என்றைக்கும் பயனானவை.

காதலே நிம்மதி


இன்று தீபத்தில் "காதலே நிம்மதி" படம் போட்டார்கள். படம் தொடங்கி 15 நிமிடங்களின் பின்தான் எதேச்சையாகத் தொலைக்காட்சியின் முன் போனேன். நாசரும் மனைவியும் கோயிலுக்குள் கும்பிட, கதாநாயகி நாசரின் குட்டி மகளுடன் ஒழிந்து விளையாட.. படத்தைப் பார்க்கும் எண்ணமும் வந்தது. படம் சொல்ல வந்த விடயம் பிடித்திருந்தது.

பெற்றோர்கள் என்ன ஏது என்று ஆராயாது எடுத்த உடனேயெ பருவ வயதுப் பிள்ளைகள் மேல் சந்தேகப் படுவதும் அதனால் வந்த சிக்கல்களுமே படமாக்கப் பட்டிருந்தது. பிள்ளைகள் யாரோடு பேசினாலும் யாரோடு சிரித்தாலும் எப்போதுமே சந்தேகக் கண்களுடன் பார்க்கும் பெற்றோருக்குப் படிப்பினையான ஒரு படம்.

காதல் - நல்ல படம்


"அம்மா காதல் படத்தை ஒருதரம் பாருங்கோ. நல்ல படம்" என மகன் திலீபன் சொன்ன போது காதல் இல்லாத படங்களா..? என நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அவன் சொன்னால் படம் நல்லாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும் வந்தது. இருந்தும் உடனே பார்க்கும் எண்ணம் வரவில்லை.

சுனாமியின் அவலங்களில் மனசு கனத்துப் போயிருந்த ஐனவரியில் ஓர்நாள் அவன் வீட்டுக்குப் போன போது அவன் கட்டாயப் படுத்தியதில் பார்க்க வேண்டியதாகி விட்டது. அரைமனதுடன்தான் பார்க்கத் தொடங்கினேன்.

சினிமாத்தனம் அதிகம் இல்லாத சினிமாப்படம். வழமையான காதல்தான். வழமையான எதிர்ப்புத்தான். ஆனாலும் படத்தை எடுத்த விதத்தில் ஏதோ ஒரு இயல்பு கலந்த சிறப்பு. பிடித்திருந்தது.

பின்னர்தான் வலைப்பதிவுகளிலே இப்படத்துக்கு மற்றவர்கள் எழுதிய விமர்சனங்களை பார்க்கும் போது வாசிக்க மனசு விரும்பியது. boopathy போன்று அனேகமான எல்லோருமே ஒற்றை வரியிலாவது நல்ல படம் என்றுதான் எழுதியிருந்தார்கள். karthikram நல்ல படந்தான் என்று சொல்லி விட்டு சில குறைகளையும் எழுதியிருந்தார். ரோசாவசந் எடுத்த எடுப்பில் நல்ல படம் என்று முத்திரை குத்தி விட்டு பின்னர், வேறு பல கோணங்களிலும் பார்த்து குறைகளையும் எழுதியிருந்தார். குறைகள் இருக்கலாம். ஆனாலும் வழமையான படங்களிலிருந்து நிறையவே முன்னேறியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஓ... இதுதான் காதலா !


அன்பே
உனக்கும் எனக்கும் என்ன சொந்தம்
உன்னோடு எனக்கென்ன பந்தம்

அலைஅலையாய் உன் நினைவு வந்து
என் மனமலையில் மோதுகையில்
சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன்
ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.

தொலை தூரம் நீ வாழ்ந்தாலும்
உன் நினைவுகளோடுதான் நான்
தினம் வாழ்கிறேன்.

குளிரிலே இதமான போர்வையாய்
வியர்க்கையில் குளிர் தென்றலாய்
மழையிலே ஒரு குடையாய்
வெயிலிலே நிழல் தரு மரமாய்
தனிமையில் கூடவே துணையாய்
கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்.....
உன் நினைவுகள் எப்போதும்
என்னோடுதான்

ஓ... இது தான் காதலா!
இது காதலெனும் பந்தத்தில்
வந்த சொந்தமா?
உனக்கு ஒன்று தெரியுமா?
திருமணத்திலும்
உடல் இணைவதிலும்தான்
காதல் வாழுமென்றில்லை
அன்பு நூலின் அதிசயப் பிணைப்பில்
நெஞ்சில் வாழ்வதும் காதல்

நினைவுகளின் தொடுகையிலே
உயிர்ப் பூக்கள் சிலிர்க்கின்ற
என் மனமென்னும் தோட்டத்தில்
உனக்காகத் துளிர்த்த காதல்

இன்று எனக்குள்ளே
விருட்சமாய் வியாபித்து
பூக்களாய் பூத்துக் குலுங்கி
அழகாய்
கனி தரும் இனிமையாய்

இது நீளமான காலத்தின்
வேகமான ஓட்டத்திலும்
அன்பு வேரின் ஆழமான ஊன்றலில்
நின்று வாழும் உண்மைக்காதல்

சந்திரவதனா
யேர்மனி
February-1999

ஒரு பிரச்சனை


என்னுடைய profileக்குப் பானால் Recent Posts 7.11.2004 உடனேயே நிற்கிறது. அதற்குப் பின்னர் எழுதிய எதுவுமே வருகுதில்லை. காரணம் யாருக்காவது தெரியுமா?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite