7000 இந்தியப் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்
பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியாவில் புதிய சட்டம்
இந்தியப் பெண்கள் தமது குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இந்திய நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
பெண்கள் மீது அவதூறான வார்த்தைகளை கூறி துன்புறுத்தல், அடித்து துன்புறுத்துதல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய குற்றங்களைப் புரியும் குடும்பத்தினருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனையை இந்தச் சட்டம் வழங்குகிறது.
பெண்களிடம் அல்லது அவர்களது உறவினர்களிடன் சட்டவிரோதமாக வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்தில் பெண்கள் மீது வன்முறை பயன்படுத்தப்படல் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுவதாக மனித உரிமை இயக்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
சொந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் வருடாந்தம் சுமார் 7000 பெண்கள் வரதட்சினை பற்றிய தகறாறுகளால் கொலை செய்யப்படுவதாக அனைத்துலக அபய நிறுவனம் கூறுகிறது.
thagaval-bbctamil