Saturday, April 05, 2008

மாமி போய் விட்டாள்

எழுது எழுது என்று மனம் உந்தினாலும் எதுவோ தடுக்கிறது. எதை எழுத நினைத்தாலும் சில சொற்களுக்கு மேல் முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை.

பிறப்பவர் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதி என்றாலும் எந்தப் பொழுதிலும் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனங்களால் முடிவதில்லை. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா! முடியவில்லை. எந்த மின்னஞ்சலுக்கும் பதில் எழுதவோ, எந்தத் தொலைபேசி அழைப்பையும் சந்தோசத்தோடு அணுகவோ முடியவில்லை.

எனது தம்பிமார் மாவீரர் ஆன போதோ, எனது அப்பா மரணித்த போதோ, என் அண்ணன் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் சென்று விட்ட போதோ ஆற்றொணாத் துயரில் அழுது புலம்பியது போல் இன்று நான் அழுது புலம்பவில்லை. துயரம்தான். மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லைத்தான். தாங்க முடிகிறது. ஆனாலும் மனதில் சூழ்ந்துள்ள வெறுமையில் இருந்து வெளியேற முடியவில்லை. மரணத்தை வெல்ல முடியாது என்ற உண்மை நன்கு தெரிந்திருந்தாலும் வென்றிருக்க முடியாதோ என்று மனசு நப்பாசை கொள்கிறது. கண்கள் அடிக்கடி பனிக்கிறது. சமயங்களில் கன்னங்களிலும் வழிகிறது.

தூரத்து மரணம் எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு துயரச் செய்தி மட்டுமே. அது ஒரு துன்பியல் நாடகம் போல அவரவர் மனங்களுக்கு ஏற்ப அவரவர்களைத் தாக்கி கண்ணீர் சிந்தவோ, மனம் வருந்தவோ வைக்கும். சில மரணங்கள் மனங்களைப் பிழிந்தும் எடுக்கும். இதை எல்லோரும் அறிந்தும் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனால் மிக மிக நெருங்கிய உறவின் மரணம், அதாவது மிக மிகப் பிரியமான அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, குழந்தை… என்று எவராவது ஒருவரின் மரணமும், அது தரும் சோகமும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. அனுபவித்து மட்டுமே உணரக் கூடியது.

அப்படியானதொரு ஆற்றொணாத் துயரில் என் பிரியமானவன் அமிழ்ந்து தவிக்கிறான். அவனுக்கு அழக் கூடத் தெரியவில்லை. எப்படி அவனை ஆற்றுவது என்று தெரியிவில்லை. தேற்றுவதற்கும் என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவன் துயரமே என்னிடம் பெருந்துயராய் படர்ந்து என்னைப் படுத்துகிறது.

மாமி (என் கணவரின் தாயார்) 3.4.2008 அன்று மரணித்து விட்டாள். நாற்பது வயதிலேயே கணவனை இழந்து விட்டாலும், மனதைரியத்தோடு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவள். தற்போது வயது 89. ஆனாலும் படுக்கையில் வீழ்ந்து விடாமல் கடைசி வரை சமையலில் இருந்து பல வேலைகளிலும் வீட்டில் பங்கேற்று வாழ்ந்து கொண்டிருந்தவள். இறப்பதற்கு முதல்நாள் கூட தொலைபேசியில் எம்மோடு பேசி விட்டு, போய் விட்டாள். ஆயிரக் கணக்கான மைல்களை அவசரமாய் ஓடிக் கடக்க முடியவில்லை. நியூசிலாந்தில் உயிரற்று அவள் உடல் இருக்கிறது என்ற உண்மையை ஏற்க மறுக்கிறது மனம். மாமியார் கொடுமைகளைப் பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். வாசித்திருக்கிறேன். ஆனால் என்றைக்குமே நான் அனுபவித்ததில்லை. நல்லவள். எம்மை விட்டுப் போய் விட்டாள்.

இதற்கு மேல் எழுத முடியவில்லை.

4.4.2008

Wednesday, April 02, 2008

இலக்கியப் போட்டி

தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு

வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.

அன்புடன் நண்பர்களுக்கு!

வணக்கம்!

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது. இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.

தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின் வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.


வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:

இலக்கியப் போட்டிகள்

சிறுகதை
கவிதை
கட்டுரை

நகைச்சுவை துணுக்கு
ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.

ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம். ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் சொந்தக் கற்பனையில் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;
வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.

போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி 2008 ம் ஆண்டு மே 31ம் திகதி.

சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:


1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய
ரூபாயும் வழங்கப்படும்.

பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில் பிரசுரமாகும்.

சிறுகதை:


ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.

ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.

சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)

நடுவர்களின் முடிவே இறுதியானது.

கட்டுரை:


ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம். ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.

கட்டுரைகளுக்கான தலைப்புகள் :


பெண்ணியம்.

உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.

தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.

உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?

ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.

அரசியலில் பொது மக்களின் பங்கு.

இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?

இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'

மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?

கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப் படுத்த வல்லது?

தியானம் என்பது....!

நகைச்சுவைத் துணுக்கு:


ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும்.
ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.

கவிதை:
கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.
மரபுக் கவிதை. புதுக்கவிதை ஒவ்வொரு பிரிவிலும் ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான, இயல்பான
ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது)

1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.


தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக் குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு சமர்பிக்கப்படும்.

எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் thamizmakal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.

இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

*படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நன்றி !
வணக்கம்!!

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite