நேற்று ஒரு நூல் என் கரம் கிட்டியது. பெரிய்ய்ய்ய நூல்.
452 க்கு மேற்பட்ட பக்கங்கள்.
வழமையில் பத்மநாபஐயர் யார் யாரினதோ நூல்கள் எல்லாம் கொடுத்தனுப்பி
எம்மை மகிழ்ச்சிப் படுத்துவார். இம்முறை அவரது நூல்.
இந்நூல் பத்துவருட முயற்சியில் வெளிவந்தது என்று எங்கோ வாசித்த
ஞாபகம். ஆனாலும் இப்படியொரு நூல் வரப்போகிறதென்பது நூல் வெளிவரும் வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
நேற்று மாலை வேலையால் வந்துதான் நூலை அவசரமாக நுனிப்புல் மேய்ந்தேன்.
பத்மநாபஐயரின் பவளவிழாவை என்னத்தைச் சொல்லி கவலைக்குரியதாக்கினார்களோ, அந்த சர்ச்சைக்குரிய
`ஐயர்´ என்ற
சொல் நூல் முழுவதும் இறைந்து கிடக்கிறது.
நிறையப் பேர் எழுதியுள்ளார்கள். எல்லோருமே பத்மநாபஐயரை அழகாக
ஆராதித்துள்ளார்கள். கண்ணில் பட்ட வசனங்கள் பலதில், பத்மநாபஐயரின் இலக்கியச் செயற்பாடுகள்
குறித்தான செய்திகள் வியக்க வைத்தன. பத்மநாபஐயர் மேல் இன்னும் அதிகமான மதிப்பை உருவாக்கின.
பத்மநாபஐயரின் குடும்பப் புகைப்படங்கள், இலக்கியப் புகைப்படங்கள்,
மூனாவின் ஒவியங்கள்.. என்று இன்னும் பல உள்ளன.
நுனிப்புல் மேய்ந்து விட்டு அதிகம் எழுத முடியாது. முழுவதையும்
முதலில் படிக்க விளைகிறேன்.
சந்திரவதனா
14.09.2016