தலைவர் பிரபாகரனை முதல்முறை(30.05 2002 ) சந்தித்த பொழுது, “பிபிசி தமிழ்ச் சேவையில் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய, 14 வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த ஒரு பெண்ணை நவம் அறிவுக்கூடம் போயும் சந்திக்க முடியாது போய் விட்டது என்று ஆதங்கப் பட்டேன்.
„நீங்கள் சொல்லுறது செல்வாவை எண்டு நினைக்கிறன். அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா” என்றார்.
„அந்தப் பிள்ளையை சந்திக்க வாய்ப்பிருக்கோ?“ கேட்டேன்.
„இப்பவே சந்திக்கலாம். பத்து நிமிசத்துக்குள்ளை ஆள் வந்திடும்” என்றார்.
அவர் சொன்ன படி பத்தாவது நிமிடத்தில் கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா அங்கே நின்றாள்.
என் விருப்பத்துக்கு அமைய வாயால் ஒரு கவிதை எழுதித் தந்தாள். வியப்பாக இருந்தது.
சந்திரவதனா
12.10.2015