Saturday, October 06, 2007

காதலினால் அல்ல

புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வதாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரியவில்லை.


நேற்றுத்தான் போலிருக்கிறது. நீ யேர்மனிக்கு வந்தது. நான் வருடங்களின் முன் வந்திருந்தாய். பார்த்துப் பேசும் பாக்கியம்தான் எனக்கில்லாமற் போய் விட்டது. பார்க்காமலே இருந்து விடுவோம் என்றாய். பால்ய காலத்து முகங்களையே மனங்களில் வார்த்திருப்போம் என்றாய்.


இன்றைக்கு ஏன் இதெல்லாம் என் நினைவில் வருகின்றது என்றே எனக்குத் தெரியவில்லை. இரவின் நிசப்தங்களைக் குலைக்கும் ஒவ்வொரு சப்தங்களும் எனக்குக் கேட்கின்றன. ஆழ்ந்து உறங்கிப் போகும் நான் ஏன் இப்படி அர்த்தராத்தரியில் அர்த்தமற்று விழித்திருக்கிறேன் என்று புரியவில்லை. மனசு குழம்புகிறது. எதையோ இழந்தது போலத் தவிக்கிறது.


´யாருக்காவது ஏதாவது ஆகியிருக்குமோ...?´ இருட்டுக்குள் நடந்து வரும் போது தூரத்தே தெரியும் வேப்ப மரத்தில் ´பேயிருக்குமோ!´ என்ற நினைவு வந்தவுடன் குடல் தெறிக்க ஓடும் சின்னப்பையன் போலக் கேள்விகள் தோன்றிய மாத்திரத்தில் மனசு சில்லிடுகிறது. ´வேண்டாம் எந்த அசம்பாவிதங்களும் வேண்டாம். இதற்கு மேல் யாரையும் இழக்கவோ யாரும எதையாவது இழந்து விட்டார்கள் என்று கேட்கவோ திராணியில்லை. ´
நினைவுகளிலிருந்து விலகி ஓடுகிறேன். வேப்பமரத்துக்குப் பயந்து ஓட, வளைவில் தெரியும் முடக்குக் காணிக்குள் விருட்சமாய் விரிந்திருக்கும் புளியம்மரம் மீண்டும் பேயை நினைவு படுத்துவது போல் எனக்குள்ளும் வேண்டாத நினைவுகள் வந்து என்னைப் பயமுறுத்துகின்றன. குடல் தெறிக்க ஓடுகிறேன்.


´இல்லை யாருக்கும் ஒன்று நடந்து விடாது. எனக்கு நித்திரை வராததற்கான காரணம் வேறாக இருக்க வேண்டும்.´ "இரவிலே உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல" என்று பலதடவைகள் தோழியொருத்தி சொல்லியிருக்கிறாள். இருந்தும் ரெட்மில்லரில் 45நிமிடங்கள் ஓடிவிட்டுத்தான் வீட்டுக்கு வந்தேன். அதனால்தான் நித்திரை கொள்ள முடியவில்லைப் போலும்.


ம்.. மீண்டும் ஏன் நீ என் நினைவுகளில் வருகிறாய். பனங்கூடல் தாண்டி வரும் போதெல்லாம்

மனத்திரையில் வலம் வரும் (நடமாடும்) பலநூறு முகங்களுக்கு இடையில் நீயும் வந்து போகிறாய்.

அன்று நான் -----






நாங்கள் போட்டு விட்டாலும் வாழ்க்கைக் கோலங்கள் எங்கள் எண்ணப்படி


ஏனோ மனதில் குழப்பம். சில நாட்களாகவே இது தொடர்ந்தது. ஒரு கிழமையோ அல்லது இரண்டு கிழமையோ என்பதில் திடமில்லை. ஆனால் என்னவென்று புரியாத உணர்த்தல்கள். அடிக்கடி விழிப்பு. படுத்ததும் தூங்கி விடும் என் இயல்பு நிலையில் இருந்து விலகியிருந்தேன். ஏதோ ஒரு யோசனை. அடிக்கடி விழிப்பு. ஏன் இந்த உணர்வுகள் என்ற கேள்வி அவ்வப்போது எழுந்தாலும் ஐரோப்பிய அவசரங்களினூடு என் நாட்களும் விரைந்து கொண்டிருந்தன.

எனக்குப் பிரியமான யாருக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ? நினைக்கும் போதே வாயில் வைக்கக் கொண்டு போன உணவு நழுவி விழுந்து விட்டது. என் மேல் பிரியமான யாருக்காவது...? கேள்விகள் தோன்றுவதும் வழமை போலவே எனக்குள்ளேயே அமுங்கிப் போவதுமாய் நாட்கள் தொடர்ந்தன.

நினைவுகளில் அவ்வப்போது வரும் பலரில் சூரியும் வந்தான். இந்த நாட்களில் அவனை அடிக்கடி நினைத்தேன் போல இருக்கிறது. ஏனோ அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மனங்களின் தொடுகைகளைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லாத தூரத்தில் அவன். அப்பாவின் ஒன்று விட்ட சகோதரியின் மகன் என்பதையும் தாண்டிய ஏதோ ஒரு பிரியம் அவன் மேல். எனக்கு அவன் மேல் இருக்கும் பிரியத்தை விட அவனுக்கு என் மேல் இருக்கும் பிரியம் அதிகம் என்பதை நான்கு வருடங்களின் முன் அவன ஜேர்மனி வந்த போது தொலைபேசியில பேசிய போதுதான் உணர்ந்தேன். அப்போதும் கூட நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
தொலைபேசி என்ற ஒரு சாதனம் இருந்ததால் பேசிக் கொண்டோம்.

எனது 18வயதுககுப் பிறகு அவனைச் சந்தித்துக் கொண்டதாய் எனக்கு ஞாபகம் இல்லை. எனது அந்த வயது முகத்தைத்தான் அவனுக்குத் தெரியும். அதே போல அவனது அந்த வயது முகத்தைத்தான் எனக்கும் தெரியும்.

அந்த சூரிதான் இப்போது சிலநாட்களாக அடிக்கடி நினைவில் வந்தான். அவனைப் பார்க்க வேண்டும் போல மனதுள் ஏதோ ஒரு உந்துதல். அதனால் அவனது மகளுக்கு கடந்தவாரம்தான் ஒரு மின்னஞ்சல் எழுதினேன். சூரியினதும் மனைவியினதும் புகைப்படம் ஒன்று எனக்கு அனுப்பும் படி எழுதினேன். அவள் பதிலுக்காக என் மனம் காத்திருந்தது.

நேற்று வேலையில் இருந்து வேளைக்கே வீட்டுக்கு வந்து விட வேண்டும் போல இருந்தது. வந்து விட்டேன். அப்போதுதான் அந்த செய்தி
என்னை வந்தடைந்தது. அதே சூரிதான் கனடாவில் ஒரு மருத்துவமனையில் மரணத்தின் வாசலில இருக்கிறான் என்று. தொலைபேசியினூடு அவன் உறவுகளோடுதான் பேச முடிந்தது
நேற்றுத்தான் போலிருக்கிறது. நீ யேர்மனிக்கு நான் வருடங்களின் முன் வந்திருந்தாய்.பார்த்துப் பேசும் பாக்கியம்தான் எனக்கில்லாமற் போய் விட்டது. பார்க்காமலே இருந்து விடுவோம் என்றாய். பால்ய காலத்து முகங்களையே மனங்களில் வார்த்திருப்போம் என்றாய்.
ஏனோ மனதில் குழப்பம். சில நாட்களாகவே இது தொடர்ந்தது. ஒரு கிழமையோ அல்லது இரண்டு கிழமையோ என்பதில் திடமில்லை. ஆனால் என்னவென்று புரியாத உணர்த்தல்கள். அடிக்கடி விழிப்பு. படுத்ததும் தூங்கி விடும் என் இயல்பு நிலையில் இருந்து விலகியிருந்தேன். ஏதோ ஒரு யோசனை. அடிக்கடி விழிப்பு. ஏன் இந்த உணர்வுகள் என்ற கேள்வி அவ்வப்போது எழுந்தாலும் ஐரோப்பிய அவசரங்களினூடு என் நாட்களும் விரைந்து கொண்டிருந்தன.

எனக்குப் பிரியமான யாருக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ? நினைக்கும் போதே வாயில் வைக்கக் கொண்டு போன உணவு நழுவி விழுந்து விட்டது. என் மேல் பிரியமான யாருக்காவது...? கேள்விகள் தோன்றுவதும் வழமை போலவே எனக்குள்ளேயே அமுங்கிப் போவதுமாய் நாட்கள் தொடர்ந்தன.

நினைவுகளில் அவ்வப்போது வரும் பலரில் சூரியும் வந்தான். இந்த நாட்களில் அவனை அடிக்கடி நினைத்தேன் போல இருக்கிறது. ஏனோ அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மனங்களின் தொடுகைகளைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லாத தூரத்தில் அவன். அப்பாவின் ஒன்று விட்ட சகோதரியின் மகன் என்பதையும் தாண்டிய ஏதோ ஒரு பிரியம் அவன் மேல். எனக்கு அவன் மேல் இருக்கும் பிரியத்தை விட அவனுக்கு என் மேல் இருக்கும் பிரியம் அதிகம் என்பதை நான்கு வருடங்களின் முன் அவன ஜேர்மனி வந்த போது தொலைபேசியில பேசிய போதுதான் உணர்ந்தேன். அப்போதும் கூட நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
தொலைபேசி என்ற ஒரு சாதனம் இருந்ததால் பேசிக் கொண்டோம்.

எனது 18வயதுககுப் பிறகு அவனைச் சந்தித்துக் கொண்டதாய் எனக்கு ஞாபகம் இல்லை. எனது அந்த வயது முகத்தைத்தான் அவனுக்குத் தெரியும். அதே போல அவனது அந்த வயது முகத்தைத்தான் எனக்கும் தெரியும்.

அந்த சூரிதான் இப்போது சிலநாட்களாக அடிக்கடி நினைவில் வந்தான். அவனைப் பார்க்க வேண்டும் போல மனதுள் ஏதோ ஒரு உந்துதல். அதனால் அவனது மகளுக்கு கடந்தவாரம்தான் ஒரு மின்னஞ்சல் எழுதினேன். சூரியினதும் மனைவியினதும் புகைப்படம் ஒன்று எனக்கு அனுப்பும் படி எழுதினேன். அவள் பதிலுக்காக என் மனம் காத்திருந்தது.

நேற்று வேலையில் இருந்து வேளைக்கே வீட்டுக்கு வந்து விட வேண்டும் போல இருந்தது. வந்து விட்டேன். அப்போதுதான் அந்த செய்தி
என்னை வந்தடைந்தது. அதே சூரிதான் கனடாவில் ஒரு மருத்துவமனையில் மரணத்தின் வாசலில இருக்கிறான் என்று. தொலைபேசியினூடு அவன் உறவுகளோடுதான் பேச முடிந்தது

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite