![]() |
with amma in Mannheim Germany - 11.8.2012 |
"தனியேதான் இருப்பேன்" என்ற அம்மாவின் பிடிவாதத்தில் அமைந்த அம்மாவின் அந்த சிறிய கூட்டுக்குள் ஒரு சில நாட்கள் மட்டுமே கிடைத்த அந்த சந்தோசம், எந்த மாளிகையிலும் கிடைத்து விடாது.
மீண்டும் எமது இயல்பு வாழ்க்கையுடன் நாம் ஒவ்வொருவரும் சங்கமித்து விட்டாலும், நாம் நால்வர் அம்மாவுடன் சேர்ந்திருந்த அந்த ஒரு சில நாட்கள் மீண்டும் மீண்டுமாய் அசை போட்ட படி மனதின் ஒரு ஓரத்தில் இனித்திருக்கிறது.
தங்கை சந்திரா இரவீந்திரன் மீண்டும் லண்டன் திரும்பி விட்டதில், தவிர்க்க முடியாமல் மனசின் இன்னோர் ஓரம் கனத்திருக்கிறது. 16.8.2012